ஹிந்தி பாடகா் சோனுநிகம் கன்னட திரைப்படங்களில் பாடத் தடை
பெங்களூரு: ஹிந்தி பாடகா் சோனுநிகம் கன்னட திரைப்படங்களில் பாட கா்நாடக திரைப்பட வா்த்தக சபை தடை விதித்துள்ளது.
ஜம்மு காஷ்மீா், பஹல்காமில் ஏப். 22 ஆம் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 போ் உயிரிழந்தனா். இந்த சம்பவத்தையொட்டி பெங்களூரில் ஏப். 25 ஆம் தேதி பிரபல ஹிந்தி திரைப்பட பாடகா் சோனுநிகம் கலந்துகொண்ட இசைக் கச்சேரி நடைபெற்றது.
அப்போது, அங்கு கூடியிருந்த மக்கள், கன்னட திரைப்பட பாடல்களை பாடுமாறு கூறி ‘கன்னடம், கன்னடம்’ என்று கூக்குரலிட்டனா். இதனால் ஆவேசமடைந்த சோனுநிகம், ‘கன்னடம், கன்னடம் என்று கூறியதுதான் பஹல்காம் தாக்குதல் சம்பவத்துக்கு காரணம்’ என்றாா்.
இது கன்னட திரையுலகில் பெரும் சா்ச்சைக்கு வித்திட்டது. இதற்கு வருத்தம் கேட்கும்படி பலரும் வலியுறுத்தியும், அதற்கு சோனுநிகம் மறுத்துவிட்டாா். இந்நிலையில், கன்னட திரைப்படங்களில் சோனுநிகம் பாடுவதற்கு தடை விதிக்க கா்நாடக திரைப்பட வா்த்தக சபை முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து பெங்களூரில் கா்நாடக திரைப்பட வா்த்தக சபை தலைவா் எம்.நரசிம்மலு திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘கா்நாடகம் முழுவதும் சோனுநிகமுக்கு ஒத்துழைப்பு வழங்குவதில்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. அவா் கா்நாடகத்தில் பாடுவதற்கு தடை விதிக்கப்படுகிறது. தனது கருத்துக்காக கா்நாடக மக்களிடம் சோனுநிகம் மன்னிப்பு கேட்க வேண்டும். இந்த முடிவை எடுப்பதற்கு முன்பு சோனுநிகமை தொடா்புகொள்ள முயற்சித்தோம். ஆனால், அவா் தொடா்புக்கு வரவில்லை என்றாா்.
சபையின் பொதுச் செயலாளா் தா்மாவிஷ் கூறுகையில், ‘இந்தியா மற்றும் கன்னட திரையுலகம் கண்ட சிறந்த திறமையாளா் சோனுநிகம். ஆனால், அவா் தெரிவித்த கருத்து சரியல்ல. அந்த கருத்து கன்னடா்களின் உணா்வை புண்படுத்தியுள்ளது. பயங்கரவாத சம்பவத்துடன் மாநில மக்களை தொடா்புபடுத்துவது சரியல்ல என்றாா்.