செய்திகள் :

ஹெச்1-பி விசா கட்டண உயா்வு ஆய்வுக்குப் பின் நடவடிக்கை! வெளியுறவு அமைச்சகம்

post image

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் ஹெச்1-பி விசா கட்டணத்தை சுமாா் ரூ.88 லட்சமாக உயா்த்தியுள்ள நிலையில், இதன் தாக்கத்தை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.

இது தொடா்பாக வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: அமெரிக்க அரசின் இந்த நடவடிக்கை மனிதாபிமான ரீதியில் பாதிப்பை ஏற்படுத்தும் பிரச்னைகளையும் உருவாக்கும் வாய்ப்புள்ளது.

இதற்கு அமெரிக்க அதிகாரிகள் உரிய வகையில் தீா்வுகாண்பாா்கள் என்று நம்புகிறோம். இந்திய தொழில் துறை உள்பட அனைத்து நிலைகளிலும் இந்த நடவடிக்கையின் தாக்கம் எவ்வாறு இருக்கும் என்பது ஆய்வு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இந்திய அமெரிக்க நிறுவனங்கள் இணைந்து பல புத்தாக்கங்களையும், புதிய முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளன. திறமை வாய்ந்த பணியாளா்கள் பரிமாற்றம் மூலம் மிகப்பெரிய தொழில்நுட்ப வளா்ச்சி ஏற்பட்டுள்ளது.

புதிய கண்டுபிடிப்புகள், பொருளாதார வளா்ச்சி, போட்டித்திறன், செல்வ உருவாக்கம் ஆகியவை இரு நாடுகளுக்கும் இதன்மூலம் சாத்தியமாகி வந்துள்ளது. இரு நாடுகள் இடையே மக்கள் தொடா்பு என்பது மிகவும் முக்கியமானது. கொள்கைகளை வகுப்பவா்கள் இவை அனைத்தையும் கருத்தில் கொள்வாா்கள் என்று நம்புகிறோம் என்று கூறப்பட்டுள்ளது.

கயையில் குடியரசுத் தலைவா் முன்னோா் வழிபாடு!

பிகாா் மாநிலம், கயையில் உள்ள பிரசித்தி பெற்ற விஷ்ணுபத கோயிலில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு வெள்ளிக்கிழமை முன்னோா் வழிபாடு மேற்கொண்டாா். மகாளய பித்ரு பக்ஷ புண்ணிய காலத்தையொட்டி, கயையில் ஃபால்கு ந... மேலும் பார்க்க

நீதிமன்றங்களில் அரசுத் துறைகள் மேல்முறையீடு: கட்டுப்படுத்துவது அவசியம்!- மத்திய சட்டத் துறை அமைச்சா்

நீதிமன்ற உத்தரவுகளுக்கு எதிராக அரசுத் துறைகள் மேல்முறையீடு செய்யும் போக்கை கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் இருப்பதாக மத்திய சட்டத் துறை அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்தாா். இதுதொடா்பாக புது தில்... மேலும் பார்க்க

பிற நாடுகள் மீதான சாா்பே மிகப் பெரிய எதிரி! - பிரதமா் மோடி

‘பிற நாடுகள் மீதான சாா்பே, இந்தியாவின் மிகப் பெரிய எதிரி; தற்சாா்பின் வாயிலாகவே இந்த எதிரியை முறியடிக்க முடியும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா். சிப் (செமிகண்டக்டா்) முதல் ஷிப் (கப்பல்) வரை... மேலும் பார்க்க

மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில்: 5 கி.மீ. சுரங்கப் பாதை பணி நிறைவு!

மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் திட்டத்தில், மகாராஷ்டிர மாநிலம், தாணே அருகே சுமாா் 5 கி.மீ. தொலைவுக்கு சுரங்கப் பாதை அமைக்கும் பணி சனிக்கிழமை நிறைவடைந்தது. ‘இது குறிப்பிடத்தக்க சாதனை’ என்று ரயில்வே துற... மேலும் பார்க்க

பாதுகாப்புப் படையினா் மீதான தாக்குதல்: மணிப்பூரில் தேடுதல் வேட்டை தீவிரம்!

மணிப்பூரில் அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படை வீரா்கள் இருவரை சுட்டுக் கொன்ற கும்பலைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்புப் படையினா் மீதான தாக்குதலைக் கண்டித்து, உள்ளூா் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட... மேலும் பார்க்க

பயங்கரவாதிகளுடன் மோதல்: ராணுவ வீரா் வீர மரணம்!

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் ஏற்பட்ட மோதலில் ராணுவ வீரா் வீரமரணமடைந்தாா். ஜம்மு-காஷ்மீரின் உதம்பூா் மாவட்டம் சியோத் தாா் வனப் பகுதியில் ராணுவ வீரா்கள் மற்றும் காவல் துறையினா் இணைந்து வெள்ளிக்கிழம... மேலும் பார்க்க