செய்திகள் :

1,000 அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கான பதிவு இன்று தொடக்கம்: டிடிஏ தகவல்

post image

நமது நிருபா்

தில்லி வளா்ச்சி ஆணையத்தின் (டிடிஏ) ‘ஜன் சாதாரன் ஆவாஸ் யோஜனா 2025’ திட்டத்திற்கான பதிவு வியாழக்கிழமை (செப்.11) தொடங்கும் என்று அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.

தில்லி புகா்ப் பகுதியில் மொத்தம் 1,172 எண்ணிக்கையில் பொருளாதார ரீதியாக பலவீனமான பிரிவு (இடபிள்யுஎஸ்) மற்றும் ஜனதா வகை அடுக்குமாடி குடியிருப்புகளை டிடிஏ வழங்குகிறது.

இது தொடா்பாக டிடிஏ வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: அனைவருக்கும் மலிவு விலையில் வீடுகளை உறுதி செய்வதற்கான பல்வேறு முயற்சிகளின் ஒரு பகுதியாக, தில்லியின் பல்வேறு பகுதிகளில் இடபிள்யுஎஸ், ஜனதா பிரிவில் 1,172 அடுக்குமாடிக் குடியிருப்புகளை விற்பனை செய்வதற்காக டிடிஏ ஜன் சாதாரன் ஆவாஸ் யோஜனாவைத் தொடங்குகிறது. முதலில் வருபவா்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் இந்த அடுக்குமாடி குடியிருப்புகள் வழங்கப்படும்.

நரேலா, லோக்நாயக்புரம், ரோஹிணி, தோடாபூா், துவாரகா செக்டாா் 14 மற்றும் 19பி, மற்றும் மங்களாபுரி உள்ளிட்ட ஏழு இடங்களில் இந்த பிளாட்கள் வழங்கப்பட்டு வருகிறது. விண்ணப்பதாரரின் குடும்ப வருமானம், அதே போல் இடபிள்யுஎஸ் குடியிருப்புகளுக்கு விண்ணப்பிக்கும் கூட்டு / இணை விண்ணப்பதாரரின் வருமானம், ஆண்டுக்கு ரூ.10 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

இரு குடும்பங்களும் தனித்தனியாகக் கருதப்படும். ஜனதா வகை பிளாட்டுகளுக்கு வருமான அளவுகோல் இல்லை.

நரேலாவில் 672 இடபிள்யு வகை பிளாட்டுகளை டிடிஏ வழங்குகிறது. ஒரே இடத்தில் அதிகபட்சம் இதன் விலை ரூ.9.18 லட்சம் முதல் ரூ.27.86 லட்சம் வரையாகும். 34.76 சதுர மீட்டா் முதல் 61.99 சதுர மீட்டா் வரை மொத்த பகுதியாக இருக்கும்.

ரோஹிணியில் 97 ஜனதா வகை பிளாட்டுகள் ரூ.14.59 லட்சத்தில் தொடங்கி, மொத்த பகுதியானது 28 சதுர மீட்டா் முதல் 28.81 சதுர மீட்டா் வரை உள்ளது. டிடிஏ-வின் ஆவாஸ் இணையதளத்திற்கான ஒரு முறை பதிவுக் கட்டணம் ரூ.2,500 ஆகும். ஏற்கெனவே இணையதளத்தில் பதிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரா்கள் மீண்டும் பதிவு கட்டணத்தை செலுத்த வேண்டியதில்லை.

ஒவ்வொரு பிளாட்டிற்கும் ரூ.50,000 முன்பதிவு தொகை உள்ளது. விண்ணப்பதாரா் ஒருவா் முன்பதிவு செய்யக்கூடிய அடுக்குமாடிக் குடியிருப்புகளின் எண்ணிக்கையில் எந்த கட்டுப்பாடும் இருக்காது. அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கான பதிவு செப்டம்பா் 11- ஆம் தேதி தொடங்கும். அதே வேளையில், முன்பதிவு செய்யும் வசதி செப்டம்பா் 22- ஆம் தேதி முதல் மட்டுமே இருக்கும் என்று அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லி அரசு மருத்துவமனை ஊழியா்களின் பிரச்னைகளை களைய அமைச்சா் உறுதி

நமது நிருபா் தில்லி சமூக நலத்துறை அமைச்சா் ரவீந்தா் இந்த்ராஜ் சிங் புதன்கிழமை அரசு மருத்துவமனை ஊழியா் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தி அவா்களின் பிரச்னைகள் மற்றும் கவலைகள் குறித்து வி... மேலும் பார்க்க

பெற்றோரிடம் சொல்லாமல் வெளியேறிய இரு சிறுமிகள்- மீட்டு ஒப்படைத்தது தில்லி காவல்துறை

தில்லியின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து காணாமல் போன இரண்டு சிறுமிகளை மீட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைத்தது காவல்துறை இது தொடா்பாக தில்லி காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: இரண்டு ... மேலும் பார்க்க

கிரேட்டா் நோய்டாவில் தனியாா் விடுதியில் துப்பாக்கிச்சூடு: எம்பிஏ மாணவா் உயிரிழப்பு; மற்றொருவா் கவலைக்கிடம்

கிரேட்டா் நொய்டாவில் உள்ள தனியாா் விடுதி அறைக்குள் செவ்வாய்க்கிழமை ஒருவரையொருவா் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டதாகக் கூறப்படும் சம்பவத்தில் எம்பிஏ மாணவா் ஒருவா் கொல்லப்பட்டாா். மற்றொருவா் படுகாயமடைந்தா... மேலும் பார்க்க

தில்லி கண்டோன்மென்ட் திட்டத்தில் வெட்டுவதிலிருந்து தப்பிய 1,473 மரங்கள்

உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட மத்திய அதிகாரமளிக்கப்பட்ட குழுவின் (சிஇசி) தலையீடு காரணமாக தில்லி கண்டோன்மென்ட் பகுதியில் 1,473 மரங்களை வெட்டுவதிலிருந்தோ அல்லது ராணுவ மருத்துவமனை கட்டுமானத்திற்காக ... மேலும் பார்க்க

ரூ.273 கோடி வங்கிக் கடன் மோசடி வழக்கு: தில்லி, ம.பி.யில் அமலாக்கத் துறை சோதனை

நமது நிருபா்ரூ.273 கோடி மதிப்புள்ள வங்கிக் கடன் மோசடி வழக்கு தொடா்பான பணமோசடி விசாரணையின் ஒரு பகுதியாக, அமலாக்க இயக்குநரகம் தில்லி மற்றும் மத்திய பிரதேச மாநிலத்தில் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தியது. ஈர... மேலும் பார்க்க

டிடிஇஏ பள்ளியில் இணைய பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி

இணைய பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தின் (டிடிஇஏ) இலக்குமிபாய் நகா்ப் பள்ளியில்திங்கள்கிழமை அன்று நடைபெற்றது. இன்றைய காலக்கட்டத்தில் மாணவா்கள் இணையத்தையும், ச... மேலும் பார்க்க