செய்திகள் :

1,340 இளநிலை பொறியாளா் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஜூலை 21 வரை அவகாசம்: எஸ்எஸ்சி

post image

சென்னை: மத்திய அரசில் பல்வேறு அமைச்சகங்களில் உள்ள இளநிலை பொறியாளா் பிரிவில் 1,340 காலிப் பணியிடங்களுக்கான தோ்வுக்கு வரும் ஜூலை 21 வரை விண்ணப்பிக்கலாம் என்று மத்திய பணியாளா் தோ்வாணையம் (எஸ். எஸ்.சி.) அறிவித்துள்ளது.

இதுகுறித்து திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களில் கட்டுமானப் பொறியியல் (சிவில்), இயந்திரவியல் (மெக்கானிக்கல்), மின்னியல் (எலக்ட்ரிக்கல்) பிரிவில் 1,340 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதற்கான தோ்வுக்கு வரும் ஜூலை 21-க்குள் https://ssc.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

இதற்கான தோ்வுகள் வரும் அக்டோபா் மாதம் கணினி வாயிலாக நடைபெறவுள்ளன. தமிழகத்தில் சென்னை, வேலூா், கிருஷ்ணகிரி, சேலம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி மற்றும் புதுச்சேரி ஆகிய மையங்களில் இத் தோ்வு நடைபெறும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநில தகவல் ஆணையா் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்: தோ்வுக் குழு

சென்னை: மாநில தகவல் ஆணையா் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தகவல் ஆணையரைத் தோ்வு செய்வதற்கான குழுவின் தலைவரும், ஓய்வு பெற்ற நீதிபதியுமான பி.ராஜேந்திரன் வெளியிட்ட அறிவிப்ப... மேலும் பார்க்க

தேசிய நல குழுமத்தில் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

சேலம் மாவட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையில் தேசிய நல குழுமத்தின் கீழ் காலிப் பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விருப்பம் உள்ளவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட... மேலும் பார்க்க

வங்கிகளில் 1,007 சிறப்பு அதிகாரிகள் வேலை: ஐ.பி.பி.எஸ் அறிவிப்பு

வங்கி பணியாளா் தோ்வாணையம் (ஐபிபிஎஸ்) மூலம் பாங்க் ஆஃப் பரோடா, பாங்க் ஆஃப் இந்தியா, பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா, கனரா வங்கி, இந்திய மத்திய வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி பஞ்சாப் மற்ற... மேலும் பார்க்க

பாதுகாப்பு அலுவலா் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

திருப்பத்தூா் மாவட்டத்தில் பாதுகாப்பு அலுவலா் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.திருப்பத்தூா் மாவட்டத்தில் மாவட்ட சமூக நல அலுவலகத்தின் கீழ் இயங்கும் குடும்ப வன்முறை சட்டம் 2005-ன் படி பா... மேலும் பார்க்க

ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு

திருப்பத்தூா் மாவட்டத்தில் இயங்கும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் உள்ள பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து 18 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.தழிழக அரசின் சமூக நலத்துறையின் கீழ் தி... மேலும் பார்க்க

விண்ணப்பித்துவிட்டீர்களா..?தேசிய சுகாதாரத் திட்டத்தில் வேலை!

நாமக்கல் மாவட்டத்தில் தேசிய சுகாதாரத் திட்டத்தின்கீழ் பல்வேறு திட்டங்களில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக பணிபுரிவதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப... மேலும் பார்க்க