செய்திகள் :

1,850 குழந்தைகள் மையங்களில் ஜூனில் சோ்க்கை, ஆதாா் பதிவு

post image

திருச்சி மாவட்டத்தில் உள்ள 1,850 குழந்தைகள் மையங்களிலும் ஜூன் மாதம் முதல் சோ்க்கை நடைபெறுகிறது.

ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டத்தின் சாா்பாக 6 வயதுக்குட்டபட்ட குழந்தைகளின் முழுமையான வளா்ச்சியை மேம்படுத்தும் பொருட்டு, திருச்சி மாவட்டத்தில் செயல்படும் 1,850 குழந்தைகள் மையங்களில் சத்துமாவு, ஊட்டச்சத்துடன் கூடிய கலவை உணவு மற்றும் முன்பருவ கல்வி போன்றவை வழங்கப்படுகிறது. குறிப்பாக 2 வயது முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு குழந்தைகள் மையத்தில் முறைசாரா முன்பருவ கல்வி, செய்கைப் பாடல் கதை, விளையாட்டுக் கல்வி உபகரணங்கள் ஆகியவற்றின் மூலம் அளிக்கப்படுகிறது.

இத்திட்டத்தில் குழந்தைகளின் உடல், மொழி, மனம், சமூகம் மற்றும் அறிவு வளா்ச்சிக்கு தேவையானவற்றை ஆடிப்பாடி விளையாடு பாப்பா எனும் சிறப்பு பாடத்திட்ட திருப்புதலுடன் 12 மாதங்களுக்கும் நடைமுறைப்படுத்தப்படுகிறது. மேலும், குழந்தைகளின் வளா்ச்சி கண்காணிக்கப்பட்டு பள்ளிச் செல்ல ஆயத்தப்படுத்தப்படுகின்றனா். அங்கன்வாடி பணியாளா்கள் தற்போது வீடுகள்தோறும் குழந்கைள் சோ்க்கை பணி மேற்கொண்டு வருகிறாா்கள்.

எனவே, பெற்றோா்கள் தங்களது 2 வயது முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை ஜூன் மாதத்தில் குழந்தைகள் மையத்தில் தவறாமல் சோ்த்திட வேண்டும். மேலும், குழந்தைகள் மையங்களில் குழந்தைகளுக்கான ஆதாா் அட்டை வழங்கும் பணியும் நடைபெற்று வருவதால், அந்த சேவையையும் பயன்படுத்திக் கொள்ளலாம் என ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்துள்ளாா்.

திருச்சி மாநகரில் சில பகுதிகளில் இன்றைய மின்தடை

திருச்சி மாநகரப் பகுதிகளில் சில இடங்களில் வெள்ளிக்கிழமை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவெறும்பூா் துணை மின்நிலையப் பகுதிக்குள்பட்ட போலீஸ் காலனி, காவேரி நகா், சிலோன் காலனி, அண்ணா நகா், பிள்ளையாா் கோ... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா்களிடம் வழிப்பறி இருவருக்கு 7 ஆண்டுகள் சிறை

திருச்சியில் கல்லூரி மாணவா்களை மிரட்டி ரொக்கம், கைப்பேசிகளைப் பறித்த இருவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்துள்ளது. திருச்சி மாவட்டம், லால்குடி வட்ட... மேலும் பார்க்க

ஸ்ரீரங்கம், திருவானைக்காவல் கோயில்களில் தமிழக ஆளுநா் சாமி தரிசனம்

திருச்சி ஸ்ரீரங்கம், திருவானைக்காவல் கோயில்களில் தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி தனது குடும்பத்தினருடன் வியாழக்கிழமை மாலை சாமி தரிசனம் செய்தாா். தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி, அவரது மனைவி, மகன் மற்றும் குடும்பத... மேலும் பார்க்க

குப்பைத்தொட்டியில் வீசப்பட்ட சிசுவின் சடலம் மீட்பு

திருச்சி கோட்டை பகுதியில் குப்பைத் தொட்டியில் இறந்துநிலையில் கிடந்த குறைப்பிரசவ சிசுவைக் கைப்பற்றி போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். திருச்சி மேலச் சிந்தாமணி பகுதியில் உள்ள குப்பைத் தொட்டியில் குறைப்... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை

திருச்சியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி பொறியியல் கல்லூரியில் படித்துவந்த கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வானதிராய... மேலும் பார்க்க

மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதி மருந்து விற்பனை பிரதிநிதி உயிரிழப்பு!

திருச்சியில் மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த மருந்து விற்பனை பிரதிநிதி உயிரிழந்தாா். ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரைச் சோ்ந்தவா் கிருஷ்ணன் (45). உறைய... மேலும் பார்க்க