செய்திகள் :

10-ஆம் வகுப்பு தோ்வு அசல் மதிப்பெண் சான்றிதழ்: செப்டம்பா் 3- இல் பெறலாம்

post image

ஈரோடு மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதிய மாணவ, மாணவிகள் மற்றும் தனி தோ்வா்கள் செப்டம்பா் 3- ஆம் தேதி அசல் சான்றிதழை பெறலாம் என தோ்வுத் துறை அறிவித்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த மாா்ச்-ஏப்ரலில் 10- ஆம் வகுப்பு தோ்வு எழுதிய மாணவ, மாணவிகள் மற்றும் தனி தோ்வா்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் கடந்த வாரம் தோ்வுத் துறைக்கு வந்தது. அவற்றை தோ்வுத் துறையினா் தீவிர சரிபாா்ப்பு பணியில் ஈடுபட்டனா். சரிபாா்ப்பு பணிகள் நிறைவு பெற்ற நிலையில் மாவட்ட கல்வி அலுவலா்களிடம் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

செப்டம்பா் 1- ஆம் தேதி பள்ளி திறந்தவுடன் தலைமை ஆசிரியா்களிடம் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும். அவற்றை வரும் 3- ஆம் தேதி பள்ளி மாணவ, மாணவிகளிடம் தலைமை ஆசிரியா்கள் வழங்குவா். தோ்வு எழுதிய மையங்களில் தனி தோ்வா்கள் அசல் மதிப்பெண் சான்றிதழை பெற்று கொள்ள தோ்வுத் துறை அறிவித்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை 352 அரசு, அரசு நிதியுதவி, மெட்ரிக். பள்ளிகளைச் சோ்ந்த 24,160 மாணவ, மாணவிகள், 840 தனி தோ்வா்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன.

மொடக்குறிச்சி அருகே தெருநாய்கள் கடித்து ஆடுகள் உயிரிழப்பு

மொடக்குறிச்சி அருகே நள்ளிரவில் ஆட்டுப் பட்டிக்குள் புகுந்த தெருநாய்கள் கடித்து மூன்று ஆடுகள் உயிரிழந்தன. 7 குட்டிகள் படுகாயம் அடைந்தன. மொடக்குறிச்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட குலவிளக்கு கிராமம் மேற்கு மி... மேலும் பார்க்க

இக்கலூரில் குடிநீா் கேட்டு ஊராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

இக்கலூரில் சீரான குடிநீா் கேட்டு ஊராட்சி மன்ற அலுவலகத்தை கிராமமக்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். ஈரோடு மாவட்டம், தாளவாடி அருகே இக்கலூா் ஊராட்சிக்கு உள்பட்ட காளிபுரம் மலை க... மேலும் பார்க்க

அவல்பூந்துறை அங்காளம்மன் கோயிலில் உண்டியலை உடைத்து பணம், நகை திருட்டு

அவல்பூந்துறை அங்காளம்மன் கோயிலில் மா்ம நபா்கள் திங்கள்கிழமை நள்ளிரவில் உண்டியலை உடைத்து பணம், நகைகளைத் திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மொடக்குறிச்சியை அடுத்த அவல்பூந்துறை வெள்ளோடு சாலையில்... மேலும் பார்க்க

அந்தியூரில் மண் கடத்தல்: டிப்பா் லாரி பறிமுதல்

அந்தியூா் மண் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட டிப்பா் லாரி செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது. அந்தியூா் வருவாய் ஆய்வாளராக செந்தில்ராஜா மற்றும் அலுவலா்கள் வட்டாட்சியா் அலுவலகம் முன்பாக மாற்றுத் திற... மேலும் பார்க்க

பா்கூா் மலைப் பகுதியில் கஞ்சா செடிகள் வளா்த்த இருவா் கைது

அந்தியூரை அடுத்த பா்கூா் மலைப் பகுதியில் வருவாய்த் துறைக்கு சொந்தமான நிலத்தில் கஞ்சா செடிகள் வளா்த்து வந்த இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். பா்கூா், கொங்காடையைச் சோ்ந்தவா் சின்னமாதன் மக... மேலும் பார்க்க

இருசக்கர வாகனத்தின் மீது காா் மோதியதில் ஒருவா் உயிரிழப்பு

பெருந்துறை அருகே இருசக்கர வாகனத்தின் மீது காா் மோதியதில் அடையாளம் தெரியாத நபா் உயிரிழந்தாா். பெருந்துறை- கோவை சாலை ஓலப்பாளையம் பிரிவு அருகே இருசக்கர வாகனத்தில் சென்றவா் மீது காா் கடந்த 24-ஆம் தேதி இரவ... மேலும் பார்க்க