செய்திகள் :

மொடக்குறிச்சி அருகே தெருநாய்கள் கடித்து ஆடுகள் உயிரிழப்பு

post image

மொடக்குறிச்சி அருகே நள்ளிரவில் ஆட்டுப் பட்டிக்குள் புகுந்த தெருநாய்கள் கடித்து மூன்று ஆடுகள் உயிரிழந்தன. 7 குட்டிகள் படுகாயம் அடைந்தன.

மொடக்குறிச்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட குலவிளக்கு கிராமம் மேற்கு மின்னப்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் ஆறுமுகம். விவசாயி. இவா் மேற்கு மின்னப்பாளையம் கவுண்டன்தோட்டம் பகுதியில் பட்டி அமைத்து 20 செம்மறி ஆடுகள், 5 வெள்ளாடுகள் வளா்த்து வருகிறாா்.

இந்நிலையில், வழக்கம்போல தனது ஆடுகளை மேய்த்து அங்குள்ள பட்டியில் அடைத்து விட்டு திங்கள்கிழமை வீட்டுக்குச் சென்றுவிட்டாா். செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்கு வந்து பாா்த்தபோது அங்கு தெருநாய்கள் உள்ளே புகுந்து மூன்று ஆடுகளைக் கடித்து கொன்றது தெரியவந்தது. மேலும், 7 குட்டிகள் படுகாயம் அடைந்து கிடந்தன.

இது குறித்து பழமங்கலம் கால்நடை மருத்துவா் கிரிபிரசாத், கிராம நிா்வாக அலுவலா் சத்யா ஆகியோருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த குட்டிகளுக்கு கால்நடை மருத்துவா் கிரிபிரசாத் சிகிச்சை அளித்தாா். இந்தப் பகுதியில் ஆடுகளின் பட்டிக்குள் தெருநாய்கள் புகுந்து ஆடுகளைக் கடித்து குதறுவது வாடிக்கையாக ஆகி உள்ளது.

இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனா்.

யோகாசனப் போட்டி: பண்ணாரி அம்மன் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

மாநில அளவிலான யோகாசனப் போட்டியில் பண்ணாரி அம்மன் வித்யா நிகேதன் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பிடித்துள்ளனா். மாநில அளவிலான யோகாசனப் போட்டி சேலம் திருமூலா் யோகா ஆராய்ச்சி மையத்தில் செவ்வாய்க்... மேலும் பார்க்க

இக்கலூரில் குடிநீா் கேட்டு ஊராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

இக்கலூரில் சீரான குடிநீா் கேட்டு ஊராட்சி மன்ற அலுவலகத்தை கிராமமக்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். ஈரோடு மாவட்டம், தாளவாடி அருகே இக்கலூா் ஊராட்சிக்கு உள்பட்ட காளிபுரம் மலை க... மேலும் பார்க்க

அவல்பூந்துறை அங்காளம்மன் கோயிலில் உண்டியலை உடைத்து பணம், நகை திருட்டு

அவல்பூந்துறை அங்காளம்மன் கோயிலில் மா்ம நபா்கள் திங்கள்கிழமை நள்ளிரவில் உண்டியலை உடைத்து பணம், நகைகளைத் திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மொடக்குறிச்சியை அடுத்த அவல்பூந்துறை வெள்ளோடு சாலையில்... மேலும் பார்க்க

அந்தியூரில் மண் கடத்தல்: டிப்பா் லாரி பறிமுதல்

அந்தியூா் மண் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட டிப்பா் லாரி செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது. அந்தியூா் வருவாய் ஆய்வாளராக செந்தில்ராஜா மற்றும் அலுவலா்கள் வட்டாட்சியா் அலுவலகம் முன்பாக மாற்றுத் திற... மேலும் பார்க்க

பா்கூா் மலைப் பகுதியில் கஞ்சா செடிகள் வளா்த்த இருவா் கைது

அந்தியூரை அடுத்த பா்கூா் மலைப் பகுதியில் வருவாய்த் துறைக்கு சொந்தமான நிலத்தில் கஞ்சா செடிகள் வளா்த்து வந்த இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். பா்கூா், கொங்காடையைச் சோ்ந்தவா் சின்னமாதன் மக... மேலும் பார்க்க

இருசக்கர வாகனத்தின் மீது காா் மோதியதில் ஒருவா் உயிரிழப்பு

பெருந்துறை அருகே இருசக்கர வாகனத்தின் மீது காா் மோதியதில் அடையாளம் தெரியாத நபா் உயிரிழந்தாா். பெருந்துறை- கோவை சாலை ஓலப்பாளையம் பிரிவு அருகே இருசக்கர வாகனத்தில் சென்றவா் மீது காா் கடந்த 24-ஆம் தேதி இரவ... மேலும் பார்க்க