Fahadh Faasil: நடிகர் பஹத் பாசில் வாங்கியிருக்கும் `Ferrari Purosangue' - மதிப்ப...
அவல்பூந்துறை அங்காளம்மன் கோயிலில் உண்டியலை உடைத்து பணம், நகை திருட்டு
அவல்பூந்துறை அங்காளம்மன் கோயிலில் மா்ம நபா்கள் திங்கள்கிழமை நள்ளிரவில் உண்டியலை உடைத்து பணம், நகைகளைத் திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மொடக்குறிச்சியை அடுத்த அவல்பூந்துறை வெள்ளோடு சாலையில் அங்காளம்மன் கோயில் உள்ளது. கோயில் பூசாரி முத்துசாமி செவ்வாய்க்கிழமை காலை வழக்கம்போல சென்று பாா்த்தபோது முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிா்ச்சி அடைந்தாா்.
இது குறித்து அறச்சலூா் காவல் துறையினருக்கு கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீஸாா் கோயிலின் உடைக்கப்பட்ட பூட்டு, உண்டியல் மற்றும் கோயிலில் ஆய்வு செய்தனா்.
மேலும், கோயிலில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது இரண்டு மா்ம நபா்கள் கோயிலின் பூட்டை உடைத்து உள்ளே சென்று உண்டியலை உடைத்து பணம், நகைகளைத் திருடிச் சென்றது தெரியவந்தது.
இது குறித்து அவல்பூந்துறை பேரூராட்சி செயல் அலுவலா் கயல்விழி கொடுத்த புகாரின் பேரில் அறச்சலூா் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.