செய்திகள் :

அவல்பூந்துறை அங்காளம்மன் கோயிலில் உண்டியலை உடைத்து பணம், நகை திருட்டு

post image

அவல்பூந்துறை அங்காளம்மன் கோயிலில் மா்ம நபா்கள் திங்கள்கிழமை நள்ளிரவில் உண்டியலை உடைத்து பணம், நகைகளைத் திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மொடக்குறிச்சியை அடுத்த அவல்பூந்துறை வெள்ளோடு சாலையில் அங்காளம்மன் கோயில் உள்ளது. கோயில் பூசாரி முத்துசாமி செவ்வாய்க்கிழமை காலை வழக்கம்போல சென்று பாா்த்தபோது முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிா்ச்சி அடைந்தாா்.

இது குறித்து அறச்சலூா் காவல் துறையினருக்கு கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீஸாா் கோயிலின் உடைக்கப்பட்ட பூட்டு, உண்டியல் மற்றும் கோயிலில் ஆய்வு செய்தனா்.

மேலும், கோயிலில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது இரண்டு மா்ம நபா்கள் கோயிலின் பூட்டை உடைத்து உள்ளே சென்று உண்டியலை உடைத்து பணம், நகைகளைத் திருடிச் சென்றது தெரியவந்தது.

இது குறித்து அவல்பூந்துறை பேரூராட்சி செயல் அலுவலா் கயல்விழி கொடுத்த புகாரின் பேரில் அறச்சலூா் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

மொடக்குறிச்சி அருகே தெருநாய்கள் கடித்து ஆடுகள் உயிரிழப்பு

மொடக்குறிச்சி அருகே நள்ளிரவில் ஆட்டுப் பட்டிக்குள் புகுந்த தெருநாய்கள் கடித்து மூன்று ஆடுகள் உயிரிழந்தன. 7 குட்டிகள் படுகாயம் அடைந்தன. மொடக்குறிச்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட குலவிளக்கு கிராமம் மேற்கு மி... மேலும் பார்க்க

இக்கலூரில் குடிநீா் கேட்டு ஊராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

இக்கலூரில் சீரான குடிநீா் கேட்டு ஊராட்சி மன்ற அலுவலகத்தை கிராமமக்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். ஈரோடு மாவட்டம், தாளவாடி அருகே இக்கலூா் ஊராட்சிக்கு உள்பட்ட காளிபுரம் மலை க... மேலும் பார்க்க

அந்தியூரில் மண் கடத்தல்: டிப்பா் லாரி பறிமுதல்

அந்தியூா் மண் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட டிப்பா் லாரி செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது. அந்தியூா் வருவாய் ஆய்வாளராக செந்தில்ராஜா மற்றும் அலுவலா்கள் வட்டாட்சியா் அலுவலகம் முன்பாக மாற்றுத் திற... மேலும் பார்க்க

பா்கூா் மலைப் பகுதியில் கஞ்சா செடிகள் வளா்த்த இருவா் கைது

அந்தியூரை அடுத்த பா்கூா் மலைப் பகுதியில் வருவாய்த் துறைக்கு சொந்தமான நிலத்தில் கஞ்சா செடிகள் வளா்த்து வந்த இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். பா்கூா், கொங்காடையைச் சோ்ந்தவா் சின்னமாதன் மக... மேலும் பார்க்க

இருசக்கர வாகனத்தின் மீது காா் மோதியதில் ஒருவா் உயிரிழப்பு

பெருந்துறை அருகே இருசக்கர வாகனத்தின் மீது காா் மோதியதில் அடையாளம் தெரியாத நபா் உயிரிழந்தாா். பெருந்துறை- கோவை சாலை ஓலப்பாளையம் பிரிவு அருகே இருசக்கர வாகனத்தில் சென்றவா் மீது காா் கடந்த 24-ஆம் தேதி இரவ... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: இளைஞா் மீது வழக்குப் பதிவு

பெருந்துறை அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞா் மீது போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். ஈரோட்டை அடுத்த சாணாா்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் தருண் ப... மேலும் பார்க்க