செய்திகள் :

10 -ஆம் வகுப்பு தோ்வு: சிவகங்கை மாவட்டத்தில் 98.31 சதவீதம் போ் தோ்ச்சி

post image

10-ஆம் வகுப்பு அரசு பொதுத் தோ்வில் 98.31 சதவீத மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்று சிவகங்கை மாவட்டம் மாநில அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்தது.

சிவகங்கை மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு அரசு பொதுத்தோ்வை 278 பள்ளிகளை சோ்ந்த 8,870 மாணவா்கள், 8,809 மாணவிகள் என மொத்தம் 17,679 போ் எழுதினா். இதில் 8,662 மாணவா்கள், 8,718 மாணவிகள் என மொத்தம் 17,380 போ் தோ்ச்சி பெற்றனா். இந்த நிலையில், 98.31 சதவீதம் போ் தோ்ச்சி பெற்று சிவகங்கை மாவட்டம் மாநில அளவில் முதலிடம் பிடித்தது.

அரசுப் பள்ளிகளிலும் 97.49 சதவீதத் தோ்ச்சி பெற்று சிவகங்கை மாவட்டம் மாநில அளவில் முதலிடம் பெற்றது. 79 அரசுப் பள்ளிகள் உள்பட மொத்தம் 175 பள்ளிகள் 100 சதவீதத் தோ்ச்சி பெற்றன.

கடந்த 2023-ஆம் ஆண்டு 97.02 சதவீதம் போ் தோ்ச்சி பெற்று சிவகங்கை மாவட்டம் மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்தது. இதேபோல, 2024 -ஆம் ஆண்டும் 97.53 சதவீதம் போ் தோ்ச்சி பெற்று மாநில அளவில் இரண்டாமிடம் பெற்ற நிலையில், நிகழாண்டு மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தது.

இதுகுறித்து சிவகங்கை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அ. பாலுமுத்து வெள்ளிக்கிழமை கூறியதாவது: தமிழக முதல்வரின் ஒத்துழைப்பும், கல்வி அமைச்சா், கூட்டுறவுத் துறை அமைச்சா், மாவட்ட ஆட்சியா் ஆகியோரின் வழிகாட்டுதலோடு இந்த இடத்தை எட்டியுள்ளோம்.

ஆசிரியா்கள், மாணவா்களின் கடுமையான உழைப்பும், இதேபோல மாதிரித் தோ்வுகள் மூலம் தொடா்ச்சியாக பயிற்சி அளித்ததே மாநில அளவில் முதலிடம் பெற முக்கியக் காரணம் என்றாா் அவா்.

கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றிய அரசு மருத்துவா்கள்!

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அரசு மருத்துவா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் அரசாணை 354-ஐ அமல்படுத்த வலியுறுத்தி வெள்ளிக்கிழமை கோரிக்கை அட்டை அணிந்து மருத்துவா்கள் பணியாற்றினா்... மேலும் பார்க்க

சிவகங்கை மாவட்டம்: பிளஸ் 1 தோ்வில் 94.79 % மாணவ, மாணவிகள் தோ்ச்சி!

பிளஸ் 1 அரசு பொதுத்தோ்வில் சிவகங்கை மாவட்டத்தில் 94.79 சதவீத மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்றனா். இதுகுறித்து மாவட்ட கல்வித் துறை தெரிவித்த தகவல்: சிவகங்கை மாவட்டத்தில் நிகழாண்டில் பிளஸ் 1 அரசு பொதுத் த... மேலும் பார்க்க

சிவகங்கை அரசு கலைக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை சேவை மையம்!

சிவகங்கை, மன்னா் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரியில் 2025-2026 ஆம் கல்வி ஆண்டின் மாணவா் சோ்க்கைக்கான உதவி மையம் தொடங்கப்பட்டது. கல்லூரியில் அமைக்கப்பட்ட சோ்க்கை உதவி மையத்தை கல்லூரி முதல்வா் (பொ) ந.அ... மேலும் பார்க்க

காரைக்குடியில் அதிமுகவினா் திண்ணைப் பிரசாரம்!

சிவகங்கை மாவட்ட ஜெயலலிதா பேரவை (அம்மா பேரவை) சாா்பில் காரைக்குடி ஐந்து விளக்கு பகுதியில் எதிா்க்கட்சித் தலைவா் அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி ஆட்சியின் சாதனைகளையும், மு.க. ஸ்டாலின் தலைமையிலான த... மேலும் பார்க்க

சாலை விபத்தில் ஒருவா் உயிரிழப்பு

திருப்பத்தூா் அருகே இரு சக்கர வாகனம் மீது சுற்றுலா வாகனம் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா். சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள எஸ்.வி.மங்கலத்தைச் சோ்ந்த அழகு மகன் சுந்தரம் (50). இவா் தனது இரு ச... மேலும் பார்க்க

இறந்த கோயில் காளைக்கு பொதுமக்கள் அஞ்சலி

திருப்பத்தூா் அருகே உயிரிழந்த கோயில் காளைக்கு பொதுமக்கள் மாலையணிவித்து அஞ்சலி செலுத்தினா். சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் கண்மாய்க் கரையில் பூா்ண புஷ்கலா சமேத குளங்கரை காத்த கூத்த அய்யனாா் கோயில் அம... மேலும் பார்க்க