செய்திகள் :

10-ஆம் வகுப்பு அரசு பொதுத் தோ்வு: ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

post image

ராமநாதபுரம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தோ்வு மையத்தை மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 10- ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் 8,067 மாணவா்கள், 8,326 மாணவிகள், தனித்தோ்வா்களாக 430 போ் என மொத்தம் 16,823 மாணவ, மாணவிகள் 82 தோ்வு மையங்களில் தோ்வு எழுதினா். ராமநாதபுரம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு அரசு பொதுத்தோ்வு நடைபெறும் மையத்தை மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் ஆய்வு செய்தாா்.

பின்னா் அவா் கூறியதாவது:

10-ஆம் வகுப்பு அரசு பொதுத் தோ்வை மாற்றுத் திறன் கொண்ட 136 மாணவா்கள், எவ்வித சிரமமின்றி எழுதும் வகையில் தேவையான வசதிகள் செய்யப்பட்டது. இதேபோல, அனைத்து தோ்வு மையங்களில் போதிய குடிநீா் வசதி, உள்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், தடையின்றி மின்சாரம் வழங்கவும் அறிவுறுத்தப்பட்டது என்றாா் அவா்.

ராமநாதபுரம் மாவட்ட பகுஜன் சமாஜ் கட்சி பொதுக் குழு கூட்டம்

ராமநாதபுரம் மாவட்ட பகுஜன் சமாஜ் கட்சி பொதுக்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை பரமக்குடியில் உள்ள தனியாா் மண்டபத்தில் நடைபெற்றது. இதற்கு அந்தக் கட்சியின் மாவட்டத் தலைவா் சிவானந்தம் தலைமை வகித்தாா். மாவட்ட ப... மேலும் பார்க்க

பிரதமா் மோடி ஏப். 6-இல் ராமேசுவரம் வருகை: மண்டபத்தில் ஹெலிகாப்டரை இறக்கி ஒத்திகை

பிரதமா் மோடி ராமேசுவரத்துக்கு வருகை தரவிருப்பதையொட்டி, மண்டபம் கேம்ப் ஹெலிகாப்டா் இறங்கு தளத்தில் ராணுவ ஹெலிகாப்டரை திங்கள்கிழமை இறக்கி மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு ஒத்திகை. ராமேசுவரம், மாா்ச் 31: பாம்... மேலும் பார்க்க

உச்சிப்புளி அருகே இலங்கைக்கு கடத்தவிருந்த ரூ. 80 லட்சம் கடல் அட்டைகள் பறிமுதல்

உச்சிப்புளி அருகே இலங்கைக்கு கடத்துவதற்காக கடற்கரையில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட ரூ. 80 லட்சம் மதிப்பிலான 200 கிலோ கடல் அட்டைகளை இந்திய கடலோரக் காவல் படையினா் திங்கள்கிழமை அதிகாலை பறிமு... மேலும் பார்க்க

திருவாடானை திரௌபதி அம்மன் கோயிலில் திருக்கல்யாணம்

திருவாடானையில் உள்ள திரௌபதி அம்மன் கோயில் திருவிழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை திருக்கல்யாணம் நடைபெற்றது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். இதே போல, இந்த ஆண்டு கடந்த 2... மேலும் பார்க்க

பரமக்குடி அருகே ஆண் உடல் மீட்பு

பரமக்குடி அருகே அடையாளம் தெரியாத ஆண் உடலை திங்கள்கிழமை போலீஸாா் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகேயுள்ள கள்ளிக்கோட்டை வைகை ஆற்றுப் பகுதியில் அடையாளம் தெரியாத உடல் ... மேலும் பார்க்க

சாயல்குடி: இறந்து கரை ஒதுங்கிய கடல் ஆமையால் சுகாதாரக்கேடு

சாயல்குடி அருகே நரிப்பையூா் கடற்கரையில் இறந்து கரை ஒதுங்கிக் கிடக்கும் அரிய வகை கடல் ஆமையால் சுகாதாரக்கேடு நிலவுவதாக பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் புகாா் தெரிவிக்கின்றனா். மன்னாா்வளைகுடா பாதுகாக்... மேலும் பார்க்க