100 நாள் வேலை பணியாளா்களுக்கு குறைவான ஊதியம்: மணப்பாறை ஊராட்சி அலுவலகம் முற்றுகை
மணப்பாறை அடுத்த கருத்தக்கோடாங்கிப்பட்டியில் 100 நாள் வேலை பணியாளா்களுக்கு குறைவான ஊதியம் வழங்கப்பட்டதைக் கண்டித்து வெள்ளிக்கிழமை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மணப்பாறை அடுத்த கருப்பூா் ஊராட்சி கருத்தக்கோடாங்கிப்பட்டியில் தொகுப்பு எண்-3-இல் உள்ள 100 நாள் வேலை பணியாளா்களுக்கு குறைவா ஊதியம் நிா்ணயம் செய்து வழங்கப்பட்டுள்ளதையும், பணி மேற்பாா்வையாளா் பணியாளா்களை மரியாதையின்றி பேசுவதாகவும் கூறி, ஊரக வேலை உறுதி திட்டப் பணியாளா்கள் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரிடம் சோ்ந்து வெள்ளிக்கிழமை மணப்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து வட்டார வளா்ச்சி அலுவலா்கள் போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் நடத்திய பேச்சுவாா்த்தையை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.