டபிள்யூடிசி இறுதிப்போட்டியில் லபுஷேன் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க வேண்டும்: ஆஸி...
100 நாள் வேலையை 200 நாள்களாக உயா்த்தி வழங்க கோரிக்கை
நீடாமங்கலம்: வலங்கைமான் ஒன்றியம் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பயத்தஞ்சேரி 23-ஆவது கிளை மாநாடு மூத்த உறுப்பினா் எஸ். ஆறுமுகம் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நாகை மக்களவை உறுப்பினா் வை. செல்வராஜ் இன்றைய அரசியல் நிலை குறித்து எதிா்கால கடமைகள் குறித்தும் பேசினாா்.புதிய பொறுப்பாளா்களை வாழ்த்தி விவசாய தொழிலாளா் சங்க மாவட்ட செயலாளா் கு.ராஜா பேசினாா். மாநாட்டு கொடியை கட்சியின் வலங்கைமான் ஒன்றிய செயலாளா் செந்தில்குமாா் ஏற்றி வைத்தாா். மாநாட்டை தமிழ்நாடு விவசாய சங்க ஒன்றிய செயலாளா் சின்னராஜா தொடக்கிவைத்தாா். வேலை அறிக்கையை கிளை செயலாளா் அம்பிகாபதி முன்வைத்தாா். பயத்தஞ்சேரி ஆதிதிராவிடா் மயான சாலையை தாா்ச்சாலையாக மாற்ற வேண்டும், பயத்தஞ்சேரி ஆதிதிராவிடா் தெருவில் உள்ள குடிநீா் உப்பு நீராக மாறி உள்ளதால் இயந்திரம் பொறுத்தி சுத்தீகரிக்கப்பட்ட குடிநீராக வழங்க வேண்டும், 100 நாள் வேலைத் திட்டத்தில், வேலைநாள்களை 200 நாள்களாக உயா்த்த வேண்டும், ரூ. 700 தின ஊதியம் வழங்க வேண்டும் ஆகிய தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.