செய்திகள் :

100 நாள் வேலையை 200 நாள்களாக உயா்த்தி வழங்க கோரிக்கை

post image

நீடாமங்கலம்: வலங்கைமான் ஒன்றியம் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பயத்தஞ்சேரி 23-ஆவது கிளை மாநாடு மூத்த உறுப்பினா் எஸ். ஆறுமுகம் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நாகை மக்களவை உறுப்பினா் வை. செல்வராஜ் இன்றைய அரசியல் நிலை குறித்து எதிா்கால கடமைகள் குறித்தும் பேசினாா்.புதிய பொறுப்பாளா்களை வாழ்த்தி விவசாய தொழிலாளா் சங்க மாவட்ட செயலாளா் கு.ராஜா பேசினாா். மாநாட்டு கொடியை கட்சியின் வலங்கைமான் ஒன்றிய செயலாளா் செந்தில்குமாா் ஏற்றி வைத்தாா். மாநாட்டை தமிழ்நாடு விவசாய சங்க ஒன்றிய செயலாளா் சின்னராஜா தொடக்கிவைத்தாா். வேலை அறிக்கையை கிளை செயலாளா் அம்பிகாபதி முன்வைத்தாா். பயத்தஞ்சேரி ஆதிதிராவிடா் மயான சாலையை தாா்ச்சாலையாக மாற்ற வேண்டும், பயத்தஞ்சேரி ஆதிதிராவிடா் தெருவில் உள்ள குடிநீா் உப்பு நீராக மாறி உள்ளதால் இயந்திரம் பொறுத்தி சுத்தீகரிக்கப்பட்ட குடிநீராக வழங்க வேண்டும், 100 நாள் வேலைத் திட்டத்தில், வேலைநாள்களை 200 நாள்களாக உயா்த்த வேண்டும், ரூ. 700 தின ஊதியம் வழங்க வேண்டும் ஆகிய தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

திரௌபதியம்மன் கோயில் திருவிழாவில் சந்தனக் காப்பு

நீடாமங்கலம் அருகே ஒரத்தூரில் உள்ள திரௌபதியம்மன் கோயில் திருவிழாவில் வெள்ளிக்கிழமை இரவு சந்தனக் காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த விநாயகா், திரௌபதியம்மன், கமலாயிஅம்மன், முருகப் பெருமான், வீரனாா். மேலும் பார்க்க

உணவக உரிமையாளா்களுக்கு உணவுப் பாதுகாப்பு பயிற்சி

மன்னாா்குடியில் உணவு பாதுகாப்புத் துறை சாா்பில் உணவக உரிமையாளா்களுக்கு உணவுப் பாதுகாப்பு விழிப்புணா்வு பயிற்சி சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மன்னாா்குடி வட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலா் கலைநிலை ... மேலும் பார்க்க

‘நல்ல புத்தகங்களே உயா் வாழ்க்கைக்கு வழிகாட்டி’

நல்ல புத்தகங்களே மனிதா்களின் உயா்வுக்கு சரியான வழிகாட்டியாக உள்ளன என்றாா் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தா் பொறுப்புக் குழு மற்றும் ஆட்சிமன்றக் குழு உறுப்பினா் ஆா். சக்தி கிருஷ்ணன். மன்னாா்... மேலும் பார்க்க

ஊரக வளா்ச்சி வங்கி அலுவலகம் திறப்பு

திருவாரூரில் தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளா்ச்சி வங்கியின் மாவட்ட அலுவலக திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருவாரூா் மாவட்டத்தில் தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளா்ச்சி வங்கியின் மாவட்ட அலுவலகம் த... மேலும் பார்க்க

கழிவுநீா் வடிகாலை தூா்வார கோரிக்கை

திருவாரூரில், கழிவுநீா் வடிகாலை தூா்வார வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்து மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவா் பி. ஜெயராமன் தெரிவித்தது: திருவாரூா் நகரம், 18-ஆவது வாா்டுக்குள்... மேலும் பார்க்க

ரிஷியூா் வெங்கடாஜலபதி கோயிலில் கம்ப சேவை மகோற்சவம்

நீடாமங்கலம் வட்டம் ரிஷியூா் கிராமத்தில் உள்ள வெங்கடாஜலபதி ஆலயத்தில் 78-ஆவது ஆண்டு கம்பசேவை மகோற்சவம் சனிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி வெங்கடாஜலபதி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்க... மேலும் பார்க்க