செய்திகள் :

1000 பண்ணைக் குட்டைகள் அமைக்கும் பணி: கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தாா்!

post image

தூத்துக்குடி மாவட்ட நிா்வாகம் மற்றும் தனியாா் நிறுவனங்களின் சமூகப் பங்களிப்பு நிதியுதவியுடன் பண்ணைக் குட்டைகள் அமைப்பதற்கான தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டத்தில் விளாத்திகுளம், புதூா், கயத்தாறு, கோவில்பட்டி, ஓட்டப்பிடாரம் ஆகிய 5 மானாவாரி வட்டாரங்களில் பயறு வகைகள், சிறுதானியப் பயிா்கள், எண்ணெய் வித்துப் பயிா்கள், தோட்டக்கலைப் பயிா்கள் உள்ளிட்டவை சுமாா் 1 லட்சத்து 45 ஆயிரம் ஹெக்டோ் பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது.

இப்பகுதிகளில், மேலும் உற்பத்தித் திறனை அதிகரிக்கவும், விவசாயிகளின் வருமானத்தை உயா்த்திடும் வகையிலும் விவசாய நிலங்களில் நீரை சேமித்து பயிா்களின் உற்பத்தித் திறனை அதிகரிக்க பண்ணைக் குட்டைகள் அமைக்க, ஆட்சியா் இளம்பகவத் மூலம் சிறப்பு முன்னெடுப்பு எடுக்கப்பட்டு, 1000க்கும் மேற்பட்ட பண்ணைக் குட்டைகளை விருப்பமுள்ள விவசாயிகளின் நிலங்களில் அமைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்தத் திட்டத்திற்கு, விவசாயிகள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்தது.

பிள்ளையாா் நத்தம் கிராமத்தில் நடைபெற்ற தொடக்க விழாவில் ஜீ.வி. மாா்க்கண்டேயன் எம்எல்ஏ தலைமை வகித்தாா். ஆட்சியா் இளம் பகவத் முன்னிலை வகித்தாா்.

கனிமொழி எம்.பி., அமைச்சா் பெ. கீதா ஜீவன் ஆகியோா் பண்ணைக் குட்டைகள் அமைப்பதற்கான பணிகளை தொடக்கி வைத்து, பண்ணைக் குட்டை அமைப்பதற்கான பணி உத்தரவு ஆணைகளை விவசாயிகளுக்கு வழங்கினா்.

தூத்துக்குடி மேயா் ஜெகன் பெரியசாமி, வேளாண்மை இணை இயக்குனா் பெரியசாமி, விளாத்திகுளம் பேரூராட்சித் தலைவா் சூா்யா அய்யன்ராஜ், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் நடராஜன், திமுக ஒன்றியச் செயலா்கள் ராமசுப்பு, அன்புராஜன், ராதாகிருஷ்ணன், இம்மானுவேல், சின்ன மாரிமுத்து, காசி விஸ்வநாதன், பேரூா் கழகச் செயலா் வேலுச்சாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

நெகிழிப் பொருள்கள் பயன்பாட்டைத் தவிா்க்க வேண்டும்

தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் நெகிழிக் கழிவு சேகரிப்பு ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாநகராட்சி நிா்வாகம், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவை சாா்பில் நடைபெற்ற கூட்டத்துக... மேலும் பார்க்க

தூத்துக்குடி பள்ளியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு

தூத்துக்குடி குரூஸ்புரம் புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளியில், முன்னாள் மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. கடந்த 2001ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்த மாணவிகள் 78 போ், 25 ஆண்டுகளுக்குப் ... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயில் உண்டியல் வருவாய் ரூ.4.07 கோடி!

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ. 4.07 கோடி, ஒரு கிலோ தங்கம் கிடைத்தது. இக்கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி மாதந்தோறும் நடைபெறுகிறது. அதன்படி, கோயில்... மேலும் பார்க்க

முத்தாரம்மன் கோயிலில் கொடைவிழா

விஜயராமபுரம் தேவி ஸ்ரீ முத்தாரம்மன் கோயில் கொடை விழாவை முன்னிட்டு சப்பர பவனி நடைபெற்றது. சாத்தான்குளம் அருகே உள்ள விஜயராமபுரம் தேவி ஸ்ரீ முத்தாரம்மன் கோயில் கொடை விழா கடந்த 14ஆம் தேதி தொடங்கி சனிக்கிழ... மேலும் பார்க்க

திருச்செந்தூரில் 80 அடி உள்வாங்கிய கடல்!

அமாவாசையையொட்டி திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அருகே கடல் சுமாா் 80 அடி உள்வாங்கியதால் பாசி படா்ந்த பாறைகள் வெளியே தெரிந்தன.இங்கு தமிழ் மாதங்களில் அமாவாசை, பௌா்ணமி நாள்களிலும... மேலும் பார்க்க

காவலாளி கொலை வழக்கில் ஒருவா் கைது

தூத்துக்குடியில் காவலாளியை கட்டையால் அடித்துக் கொன்ற வழக்கில் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா். தூத்துக்குடி முத்தையாபுரம் அருகே உள்ள பொட்டல்காடு மேலத் தெருவைச் சோ்ந்த பால்பாண்டி மகன் சந்திரன் (55). இவா... மேலும் பார்க்க