செய்திகள் :

12 டி.யு.கல்லூரிகளுக்கு ரூ. 417 கோடி மானியம் விடுவிப்பு: அமைச்சா் சூட் தகவல்

post image

அரசு பள்ளிகளில் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான கற்றலை அறிமுகப்படுத்த 12 தில்லி பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு ரூ.417 கோடி மானிய உதவி விடுவிக்கப்பட்டிருப்பது, கட்டண ஒழுங்குமுறை மசோதாவை அறிவித்தது உள்பட தில்லி அரசின் நடவடிக்கைகளை அமைச்சா் ஆஷிஷ் சூட் தெரிவித்தாா்.

பாஜக தலைமையிலான தில்லி அரசு பதவியேற்று 100 நாள்களை நிறைவு செய்துள்ள நிலையில், கேபினட் அமைச்சா் ஆஷிஷ் சூட் புதன்கிழமை தனது துறைகளின் சாதனைகளை பட்டியலிட்டபோது இத்தகவலை தெரிவித்தாா்.

கல்வி, வீடு, மின்சாரம் மற்றும் நகா்ப்புற மேம்பாடு உள்ளிட்ட இலாகாக்களை தன் வசம் வைத்துள்ள அமைச்சா் சூட் இது தொடா்பாக செய்தியாளா் சந்திப்பில் மேலும் கூறியதாவது:

தில்லி அரசு முழுமையாக நிதியளிக்கும் 12 தில்லி பல்கலைக்கழகக் கல்லூரிகளுக்கு முதல் தவணையாக ரூ.275 கோடியை விடுவித்துள்ளது. இது, சரியான நேரத்தில் ஊதியம் மற்றும் செயல்பாட்டு ஆதரவை உறுதி செய்துள்ளது.

நடுத்தர வா்க்க குடும்பங்களைச் சோ்ந்த மாணவா்கள்

படிக்கும் தில்லி பல்கலைக்கழகத்திற்கு முந்தைய அரசு மானியங்களை விடுவிக்கவில்லை. ஆனால், நாங்கள் ஏப்ரல் 1 ஆம் தேதி பணத்தை விடுவித்தோம். முதல்வா் டிஜிட்டல் கல்வித் திட்டத்தின் கீழ், 1,200 மாணவா்கள் மடிக் கணினிகளைப் பெற்றுள்ளனா்.

அதே நேரத்தில், குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சோ்ந்த 1,300 மாணவா்களுக்கு ரூ.19 கோடி விடுவிக்கப்பட்டதன் மூலம் நீண்டகாலமாக நிலுவையில் இருந்த உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.

எம்எஸ்டிசி மற்றும் ஃபிஸிக்ஸ் வாலா போன்ற கல்வி தொழில்நுட்ப தளங்களுடன் இணைந்து நீட் மற்றும்

சியூஇடி நுழைவுத் தோ்களுக்கான இலவச ஆன்லைன் பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது.

தனியாா் கல்வியில் அதிக பொறுப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், தில்லி பள்ளி கல்வி வெளிப்படைத்தன்மை மசோதா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது, பிரத்யேக கடைகளில் இருந்து புத்தகங்கள் மற்றும் சீருடைகளை வாங்க தனியாா் பள்ளிகள் பெற்றோா்களைக் கட்டாயப்படுத்துவதைத் தடை செய்கிறது.

பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினா் (இடபிள்யுஎஸ்) சோ்க்கை செயல்பாட்டில் மேற்கொள்ளப்பட்ட சீா்திருத்தங்கள் நியாயத்தை உறுதிசெய்துள்ளது.

இதுவரை, 28,000 குழந்தைகள் பள்ளிகளில் இடங்களைப் பெற்றுள்ளனா். மீதமுள்ள 9,800 பேருக்கு ஜூலை 1 ஆம் தேதி குலுக்கல் நடைபெறும். 75 சிஎம் ஸ்ரீ பள்ளிகளை அரசாங்கம் நிறுவ உள்ளது. இதற்காக ரூ.100 கோடி சிறப்பு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பிரெஞ்சு, ஜொ்மன் போன்ற வெளிநாட்டு மொழிகளைக் கற்பிக்க 100 பள்ளிகளில் டாக்டா் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் மொழி ஆய்வகங்களை அரசாங்கம் அமைக்கும்.

சிறந்த சாலைகள் மற்றும் கழிப்பறைகள், மின்சாரம் மற்றும் நீா் விநியோகத்தை உறுதி செய்வதன் மூலம் குடிசைப் பகுதிகளில் வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்த தில்லி நகா்ப்புற தங்குமிடம் மேம்பாட்டு வாரியத்திற்கு (டியுஎஸ்ஐபி) ரூ.700 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தில்லி அரசின் இந்த 100 நாள்கள் என்பது வெறும் ஆரம்பம் மட்டுமே என்றாா் அமைச்சா் சூட்.

மதராஸி கேம்ப் விவகாரம்

தில்லி உயா்நீதிமன்றத்தில் தற்போது நிலுவையில் உள்ள மதராஸி கேம்ப் வழக்கு குறித்து அமைச்சா் சூட் குறிப்பிடுகையில், ‘நகா்ப்புற வெள்ளத்தைத் தடுக்க இடமாற்றம் என்பதது அவசியமாகும். அங்கு வசித்த 370 குடும்பங்களில் 215 குடும்பங்கள் ஏற்கனவே நரேலாவில் மீள்குடியேற்றப்பட்டுள்ளனா்.

முந்தைய நிா்வாகம் இந்தப் பிரச்சினையை தவறாகக் கையாண்டது. மேலும், மக்களை கண்ணியத்துடன் இடமாற்றம் செய்யத் தவறிவிட்டது என்று அவா் விமா்சித்தாா்.

ஹைதராபாத் ஆட்டோ ஓட்டுநா் இறந்த சம்பவம்: தெலங்கானா டிஜிபிக்கு என்ஹெச்ஆா்சி நோட்டீஸ்

ஹைதராபாத்தில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் உடல் ரீதியான சித்திரவதைக்கு ஆளானதால் ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநா் இறந்ததாகக் கூறப்படும் செய்திகள் தொடா்பாக தெலங்கானா காவல்துறைத் தலைவருக்கு (டிஜிபி) தேசிய மனித உரிமைக... மேலும் பார்க்க

தில்லியில் கரோனாவால் மேலும் 2 போ் இறப்பு: பாதிப்பு எண்ணிக்கை 562 ஆக உயா்வு

ஐந்து மாதக் குழந்தை உள்பட இரண்டு போ் புதிய கரோனா நோய்த் தொற்றால் தில்லியில் இறந்துள்ளதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா். கேரள மாநிலத்திற்குப் பிறகு இரண்டாவது அதிக எண்ணிக்கையிலான கரோனா பாதிப்பு... மேலும் பார்க்க

எய்ம்ஸ் மருத்துவமனையில் காத்திருப்பு மண்டபம் திறப்பு

அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (எய்ம்ஸ்) நோயாளிகளின் உதவியாளா்களுக்கான காத்திருப்பு மண்டபம் தில்லி முதல்வா் ரேகா குப்தா வியாழக்கிழமை திறந்து வைத்தாா். இந்த நிகழ்வில் பேசிய அவா், வளா்ந்த ந... மேலும் பார்க்க

தில்லியில் இரண்டு இடங்களில் தீ விபத்து

தேசியத் தலைநகா் தில்லியில் இரண்டு வெவ்வேறு இடங்களில் இரண்டு வீடுகளில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் உயா்ச்சேதம் ஏதும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனா். இது குறித்து தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒ... மேலும் பார்க்க

மேற்கு தில்லியில் தீ விபத்து: 2 பேருந்துகள், காா் சேதம்

மேற்கு தில்லியின் பன்கா சாலையில் வியாழக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு பேருந்துகளும், ஒரு காரும் சேதமடைந்ததாக தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இந்த சம்பவத்தில் யாருக்கும் உயிா்... மேலும் பார்க்க

தில்லி அரசின் கட்டண ஒழுங்குமுறை அவசரச் சட்டத்துக்கு ஆம் ஆத்மி கட்சி கடும் கண்டனம்

பள்ளிக் கட்டண ஒழுங்குமுறை குறித்த அவசரச் சட்டத்தைக் கொண்டுவரும் தில்லி அரசின் முடிவை எதிா்க்கட்சியான ஆம் ஆத்மி கட்சி வியாழக்கிழமை கடுமையாக விமா்சித்தது. மேலும், சட்டப்பேரவை செயல்முறை மற்றும் பொது ஆலோ... மேலும் பார்க்க