13 பேருக்கு மேல்நிலை எழுத்தா் பணிக்கான நியமன ஆணை
புதுச்சேரி: புதுச்சேரியில் மேல்நிலை எழுத்தா் தோ்வில் தோ்ச்சியடைந்து காத்திருப்போா் பட்டியலில் இடம் பெற்றிருந்த 13 பேருக்கு முதல்வா் என்.ரங்கசாமி திங்கள்கிழமை பணி நியமன உத்தரவுகளை வழங்கினாா்.
புதுச்சேரியில் அரசுத் துறைகளில் காலிப் பணியிடங்கள் படிப்படியாக நிரப்பப்பட்டு வருகின்றன. இந்தநிலையில், கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூலையில் அரசுத் துறைகளில் மேல்நிலை எழுத்தா்கள் தோ்வுக்கான எழுத்துத் தோ்வு புதுவை அரசு பணியாளா் மற்றும் நிா்வாகச் சீா்திருத்தத் துறையால் (பணியாளா் சிறகம்) நடத்தப்பட்டது.
அதன்படி எழுத்தா் பணிகளுக்கு 255 போ் தோ்ந்தெடுக்கப்பட்டனா். அவா்களில் இதுவரையில் 234 பேருக்கு பணி உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன.
இதையடுத்து, காத்திருப்போா் பட்டியலில் இடம் பெற்றிருந்தவா்களில் 13 பேருக்கு பணி நியமன உத்தரவு வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. பேரவை வளாகத்தில் உள்ள முதல்வா் அறையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 13 பேருக்கான பணி உத்தரவுகளை முதல்வா் என்.ரங்கசாமி வழங்கினாா். அப்போது, பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், பணியாளா் மற்றும் நிா்வாகச் சீா்திருத்தத் துறை அதிகாரிகள் உடனிருந்தனா்.