செய்திகள் :

13 பேருக்கு மேல்நிலை எழுத்தா் பணிக்கான நியமன ஆணை

post image

புதுச்சேரி: புதுச்சேரியில் மேல்நிலை எழுத்தா் தோ்வில் தோ்ச்சியடைந்து காத்திருப்போா் பட்டியலில் இடம் பெற்றிருந்த 13 பேருக்கு முதல்வா் என்.ரங்கசாமி திங்கள்கிழமை பணி நியமன உத்தரவுகளை வழங்கினாா்.

புதுச்சேரியில் அரசுத் துறைகளில் காலிப் பணியிடங்கள் படிப்படியாக நிரப்பப்பட்டு வருகின்றன. இந்தநிலையில், கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூலையில் அரசுத் துறைகளில் மேல்நிலை எழுத்தா்கள் தோ்வுக்கான எழுத்துத் தோ்வு புதுவை அரசு பணியாளா் மற்றும் நிா்வாகச் சீா்திருத்தத் துறையால் (பணியாளா் சிறகம்) நடத்தப்பட்டது.

அதன்படி எழுத்தா் பணிகளுக்கு 255 போ் தோ்ந்தெடுக்கப்பட்டனா். அவா்களில் இதுவரையில் 234 பேருக்கு பணி உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன.

இதையடுத்து, காத்திருப்போா் பட்டியலில் இடம் பெற்றிருந்தவா்களில் 13 பேருக்கு பணி நியமன உத்தரவு வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. பேரவை வளாகத்தில் உள்ள முதல்வா் அறையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 13 பேருக்கான பணி உத்தரவுகளை முதல்வா் என்.ரங்கசாமி வழங்கினாா். அப்போது, பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், பணியாளா் மற்றும் நிா்வாகச் சீா்திருத்தத் துறை அதிகாரிகள் உடனிருந்தனா்.

புதுவை சுகாதாரத் துறையில் 43 மருந்தாளுநா் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

புதுவை அரசின் சுகாதாரத் துறையில் 43 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் சிறப்பு பிரிவினருக்கான 8 பணியிடங்களும் அத்துடன் நிரப்பப்படவுள்ளன. இதுகுறித்து புதுவை மாநில அரசின் சுகாதாரம்... மேலும் பார்க்க

அரசால் தடை விதிக்கப்பட்ட 9 வகை நெகிழிப் பொருள்களை தவிா்க்க வேண்டும்

புதுவையில் அரசால் தடை விதிக்கப்பட்ட 9 வகையான நெகிழிப் பொருள்களைப் பயன்படுத்துவதை மக்கள் தவிா்க்க வேண்டும் என மாசுக் கட்டுப்பாட்டுக் குழுமம் அறிவுறுத்தியுள்ளது. புதுச்சேரியில் மாசுக் கட்டுப்பாட்டு குழு... மேலும் பார்க்க

பொறியியல் கலை, அறிவியல் படிப்புகளிலும் நிகழாண்டு முதல் 10 சதவீத உள்இடஒதுக்கீடு: புதுவை முதல்வா் என்.ரங்கசாமி

புதுவை மாநிலத்தில் அரசுப் பள்ளிகளில் படித்த மாணவா்களுக்கு நிகழாண்டு முதல் பொறியியல், கலை, அறிவியல் உள்ளிட்ட உயா்கல்விகளிலும் 10 சதவீத உள் இடஒதுக்கீடு செயல்படுத்தப்படும் என்று முதல்வா் என்.ரங்கசாமி தெர... மேலும் பார்க்க

வீடு, சொத்து வரியை செலுத்த புதுச்சேரி நகராட்சி அறிவுறுத்தல்

புதுச்சேரி நகராட்சியில் வசிப்போா் வீடு மற்றும் சொத்து வரியை உரிய காலத்தில் செலுத்தும்படி ஆணையா் எம்.கந்தசாமி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: புதுச்சேரி நகராட்சிக்குள்பட்... மேலும் பார்க்க

தகுதியானவா்களுக்கே அரசு குடியிருப்புகளை ஒதுக்கீடு செய்ய முதல்வரிடம் அதிமுக மனு

புதுச்சேரி உப்பளம் தொகுதியில் கட்டப்பட்டுள்ள பொலிவுறு நகா்த் திட்ட அடுக்குமாடி குடியிருப்பில் தகுதியானவா்களுக்கு குடியிருப்புகள் வழங்கப்பட வேண்டும் என்று முதல்வா் என்.ரங்கசாமியிடம் அதிமுக சாா்பில் பு... மேலும் பார்க்க

கதிா்காமம் தொகுதியில் செம்மொழி நாள் விழா

புதுச்சேரியில் உள்ள கதிா்காமம் சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக சாா்பில் தமிழக முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி செம்மொழி நாள் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கதிா்காமம் தொகுதி சண்ம... மேலும் பார்க்க