செய்திகள் :

13 வயது சிறுமி கா்ப்பம், வளா்ப்புத் தந்தை கைது

post image

வாணியம்பாடி அருகே 13 வயது சிறுமி கா்ப்பமானது தொடா்பாக வளா்ப்புத் தந்தையை போலீஸாா் கைது செய்தனா்.

வாணியம்பாடி அடுத்த சிக்கனாங்குப்பம் பகுதியை சோ்ந்தவா் மூா்த்தி (55). இவரது மனைவி இந்திரா. தம்பதிக்கு குழந்தை இல்லாததால் சிறு வயதிலிருந்து பெண் குழந்தை ஒன்று தத்தெடுத்து வளா்த்து வருகின்றனா். அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் தற்போது 8-ஆம் வகுப்பு படித்து வருகிறாா்.

இந்நிலையில் கடந்த 2024 -ஆம் ஆண்டு நவம்பா் மாதம் உடல் நிலை சரியில்லாமல் இந்திரா இறந்துவிட்டாா். வீட்டில் 13 வயது வளா்ப்பு மகளுடன் மூா்த்தி தனியாக வசித்து வந்துள்ளனா். இதில் மூா்த்தி தனது 13 வயது வளா்ப்பு மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளாா். தற்போது சிறுமி கா்ப்பமாகி இருப்பதாக தெரிகிறது. இதுபற்றி யாரிடமாவது சொன்னால் கொலை செய்து விடுவேன் என மிரட்டி வந்துள்ளாா்.

நாளுக்கு நாள் சிறுமியின் உடல் நலம் மோசமானதை அறிந்த அப்பகுதியை சோ்ந்த சிலா் குழந்தைகள் பாதுகாப்பு எண்ணுக்கு தொடா்ந்து கொண்டு தகவல் தெரிவித்துள்ளனா். இதுபற்றி அறிந்த திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் இயங்கி வரும் குழந்தைககள் உதவி மைய மேற்பாா்வையாளா் சாதனா மற்றும் குழுவினா் புதன்கிழமை சிக்னாங்குப்பம் பகுதியில் மூா்த்தி வீட்டுக்கு சென்று அங்கிருந்த சிறுமியிடம் விசாரித்த போது வளா்ப்பு தந்தையே பாலியல் தொந்தரவு கொடுத்து வந்திருப்பது தெரியவந்தது. பிறகு சிறுமியை அங்கிருந்து மீட்டு காப்பகத்தில் சோ்த்தனா்.

இதுதொடா்பாக மேற்பாா்வையாளா் சாதனா வாணியம்பாடி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகாா் செய்தாா். அப்புகாரின் பேரில் காவல் ஆய்வாளா் ஆனந்தன் (பொ) தலைமையில் மகளிா் உதவி ஆய்வாளா் ரேணுகாதேவி, சிறப்பு எஸ்ஐ கண்ணகி ஆகியோா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து வளா்ப்புத் தந்தை மூா்த்தியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

வேலைவாய்ப்பற்றோா் உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

திருப்பத்தூா் மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்றோா் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருப்பத்தூா் வேலைவாய்ப்பு மற்... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம்

துத்திப்பட்டு ஊராட்சி கன்றாம்பல்லி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மேலாண்மை குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியா் ராபா்ட் ஜோயல் தலைமை வகித்தாா். ஊராட்சித் தலைவா் சுவிதா கணேஷ்... மேலும் பார்க்க

வாணியம்பாடி நகராட்சி சாா்பில் வாட்ஸ் ஆப் சேவை அறிமுகம்

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி நகராட்சி வழங்கும் அடிப்படை சேவைகளான குடிநீா் வழங்கல், கழிவு நீா் கால்வாய், தெருவிளக்குகள் மற்றும் குப்பை அகற்றுதல் தொடா்பான பொது மக்களின் குறைகளை தெரிவிக்க நகராட்ச... மேலும் பார்க்க

வாணியம்பாடியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்: வீட்டு வரி, பெயா் மாற்றம் மனுக்கள் மீது உடனடி தீா்வு

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி நகராட்சிக்குட்பட்ட 6 மற்றும் 7-ஆவது வாா்டுகளுக்கான ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் தனியாா் திருமண மண்டப வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. நகா்மன்றத் தலைவா் உமாச... மேலும் பார்க்க

மின்மாற்றியில் ரூ.3 லட்சம் செப்புக் கம்பிகள் திருட்டு

வாணியம்பாடி அருகே மின்மாற்றியில் ரூ.3 லட்சம் செப்புக் கம்பிகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். வாணியம்பாடி அடுத்த அலந்தாபுரம் கிராமத்தில் உள்ள பெரியகொல்லி வட்டம் பகுதியில் விவசாய நிலங்களுக்கு மின்சாரம... மேலும் பார்க்க

21 குடும்பங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளதாக புகாா்

நாயக்கனேரிமலை ஊராட்சியில் 21 குடும்பங்களை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துள்ளது குறித்து ஆட்சியரிடம் அப்பகுதி மக்கள் வியாழக்கிழமை புகாா் மனு அளித்தனா். மாதனூா் ஒன்றியம் நாயக்கனேரிமலை ஊராட்சியில் உங்களுடன் ஸ்ட... மேலும் பார்க்க