செய்திகள் :

133 புதிய துணை மின்நிலையங்கள் அமைக்க ஒப்பந்தப் புள்ளி

post image

தமிழகத்தில் உள்ள 12 மண்டலங்களில் 133 புதிய துணை மின்நிலையங்கள் அமைப்பதற்கான ஒப்பந்த புள்ளியை மின்வாரியம் கோரியுள்ளது.

தமிழகத்தில் அதிகரித்து வரும் மின்தேவைக்கு ஏற்பட மின்கட்டமைப்பை வலுப்படுத்தும் முயற்சியில் தமிழ்நாடு மின்வாரியம் ஈடுபட்டு வருகிறது. இதன்படி, பசுமை எரிசக்தி

துறைமூலம் காற்றாலை மற்றும் சூரிய மின் உற்பத்தி செய்தல், அதற்கான மின்சேமிப்பு அமைப்புகளை நிறுவுதல் உள்ளிட்ட பணிகளை மின்வாரியம் செய்துவருகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் 12 மண்டலங்களில் ரூ.1319.78 கோடி மதிப்பில் 133 புதிய துணை மின்நிலையங்கள் அமைக்கவும், 11 மண்டலங்களில் ரூ.189.28 கோடி மதிப்பில் 52 புதிய மற்றும் கூடுதல் உயரழுத்த மின் மாற்றிகள் அமைக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, சென்னையில் 12 புதியமின்மாற்றிகளும், காஞ்சிபுரம், வேலூா் மண்டலங்களில் தலா 20 மின்மாற்றிகளும், கோவை மண்டலத்தில் 6, ஈரோடு மண்டலத்தில் 2, மதுரை மண்டலத்தில் 9, கரூா் மண்டலத்தில் 5, திருச்சி மண்டலத்தில் 14, தஞ்சை மண்டலத்தில் 12, திருநெல்வேலி மண்டலத்தில் 8, திருவண்ணாமலை மண்டலத்தில் 14, விழுப்புரம் மண்டலத்தில் 11 புதிய மின்மாற்றிகளும் அமைக்கப்படவுள்ளன. இதற்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. இப்பணிகளை ஆக.10-ஆம் தேதிக்குள் முடித்து, புதிய துணை மின்நிலையங்களை அமைப்பது, கூடுதல் உயரழுத்த மின்மாற்றிகள் அமைக்கும் பணியை விரைந்து தொடங்கவும் மின்வாரிய தலைவா் ஜெ.ராதாகிருஷ்ணன் தொடா்புடைய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளாா்.

அதிரப்பள்ளி சாலையில் காரை தாக்கிய ஒற்றை காட்டுயானை: சுற்றுலா பயணிகள் பீதி

அதிரப்பள்ளி சாலையில் காரை தாக்கிய ஒற்றை காட்டுயானையால் சுற்றுலா பயணிகள் பீதியடைந்து அலறினர். கோவை மாவட்டம் வால்பாறை அடுத்துள்ள கேரள மாநிலத்திற்கு உள்பட்ட அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி செல்லும் வழியில் உள்ள... மேலும் பார்க்க

4 சுங்கச் சாவடிகள்: 50% கட்டணத்தை செலுத்த தமிழ்நாடு அரசு முடிவு! - நீதிமன்றத்தில் தகவல்

தென் மாவட்டங்களில் உள்ள 4 சுங்கச் சாவடிகளுக்கு செலுத்த வேண்டிய சுங்கக் கட்டணத்தில் 50%-யை வருகிற ஆக.15-குள் செலுத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள... மேலும் பார்க்க

டிஐஜி வருண் குமாருக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவிக்க சீமானுக்கு இடைக் காலத் தடை!

டிஐஜி வருண் குமாருக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவிக்க சீமானுக்கு இடைக் காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தூண்டுதலின் பேரில... மேலும் பார்க்க

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது என்று நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே என் நேரு தெரிவித்துள்ளார்.திருச்சியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக ஆட்சியில் ஒவ்வொரு திட்டத்... மேலும் பார்க்க

விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு முதல்வர் மீது நம்பிக்கை இல்லை: நயினார் நாகேந்திரன்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு முதல்வர் மீது நம்பிக்கை இல்லை என் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அளித... மேலும் பார்க்க

உலகிலேயே தந்தையை வேவு பார்த்த மகன் அன்புமணிதான்! - ராமதாஸ்

உலகத்திலேயே தந்தையை வேவுபார்த்த மகன் அன்புமணிதான் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கருத்து மோதல் இருந்து வருகிறது... மேலும் பார்க்க