செய்திகள் :

140 கோடி இந்தியர்களின் முயற்சியில் டிஜிட்டல் இந்தியா முன்னேற்றம்: பிரதமர்

post image

டிஜிட்டல் இந்தியா திட்டம் தொடங்கி 10 ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து இந்நாள் வரலாற்றுச் சிறப்புமிக்க நாள் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் மோடி சமூக வலைத்தளமான லிங்கட்இனில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.. அவர் வெளியிட்ட பதிவில்,

டிஜிட்டல் இந்தியா தொடங்கி 10 ஆண்டுகள் நிறைவுபெற்றதை அடுத்து, இந்த நாள் வரலாற்றுச் சிறப்புமிக்க நாள் என்று கூறினார்.

இந்தியர்கள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான திறனைச் சந்தேகிப்பதில் பல ஆண்டுகள் கழிந்த நிலையில், தனது அரசு இந்த அணுகுமுறையை மாற்றியது. பத்தாண்டுகளுக்கு முன்பு நமது நாட்டை டிஜிட்டல் ரீதியாக அதிகாரம் பெற்ற மற்றும் தொழில்நுட்ப ரீதியாக முன்னேறிய சமூகமாக மாற்றுவதற்கான முயற்சியாக டிஜிட்டல் இந்தியா தொடங்கியது.

இந்தியாவில் 2014 ஆம் ஆண்டில் சுமார் 25 கோடி இணைய இணைப்புகள் இருந்ததாகவும், அந்த எண்ணிக்கை இன்று 97 கோடிக்கும் அதிகமாக வளர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்தியாவின் 5G வெளியீடு உலகின் வேகமான ஒன்றாகும், இரண்டு ஆண்டுகளில் 4.81 லட்சம் அடிப்படை நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன. அதிவேக இணையமானது தற்போது கால்வான், சியாச்சின் மற்றும் லடாக் உள்ளிட்ட நகர்ப்புற மையங்கள் மற்றும் ராணுவ நிலைகளையும் அடைகிறது.

2014 தான் ஆட்சிக்கு வந்தபோது இணையசேவை குறைவாகவும், டிஜிட்டல் கல்வியவு, அரசு சேவைகளுக்கான ஆன்லைன் அணுகல் குறைவாக இருந்ததாகவும் அவர் கூறினார்.

இந்தியா போன்ற பரந்த மற்றும் பன்முகத்தன்மை கொண்ட ஒரு நாடு உண்மையிலேயே டிஜிட்டல் மயமாக்க முடியுமா என்று பலர் சந்தேகித்தனர். ஆனால் 140 கோடி இந்தியர்களின் கூட்டு முயற்சியால் இயக்கப்படும் டிஜிட்டல் கட்டணங்களில் இந்தியா பல்வேறு முன்னேற்றங்களைக் கண்டுள்ளது. சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற துறைகளும் பயணடைந்துள்ளன என்று அவர் கூறினார்.

Summary

Today marks 10 years since the launch of the Digital India project.

இதையும் படிக்க: ஜூலை மாதப் பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

பாஜக தலைவர் ஜெ.பி. நட்டாவுக்கு மறுவாய்ப்பு? ஆட்சிமன்றக் குழு கூடுகிறது

நமது சிறப்பு நிருபர்பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவரும் மத்திய அமைச்சருமான ஜெ.பி. நட்டாவுக்கு மீண்டும் தலைவராகத் தொடருவதற்கான வாய்ப்பை வழங்குவதா? அல்லது புதிய தலைவரை நியமிப்பதா? என்பது குறித்து அக்... மேலும் பார்க்க

‘க்வாட்’ கூட்டமைப்பை மேலும் வலுப்படுத்த வெளியுறவு அமைச்சா்கள் ஆலோசனை

உலகளாவிய பல்வேறு சவால்களை கையாள, ‘க்வாட்’ கூட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், அந்தக் கூட்டமைப்பில் உள்ள வெளியுறவு அமைச்சா்கள் செவ்வாய்க்கிழமை ஆலோசனை மேற்கொண்டனா். ‘க்வாட்’ கூட்டமைப்பில் இந்திய... மேலும் பார்க்க

குடிமக்களின் உரிமைகளைக் காக்கவே புதிய குற்றவியல் சட்டங்கள்: அமித் ஷா

குடிமக்களின் அனைத்து உரிமைகளையும் பாதுகாப்பதுடன், குற்றவாளிகள் யாரும் தப்பிக்க முடியாது என்பதை உறுதி செய்யும் நோக்கத்துடனே புதிய குற்றவியல் சட்டங்கள் வகுக்கப்பட்டன என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ... மேலும் பார்க்க

திருப்புமுனையான சீா்திருத்தம் ஜிஎஸ்டி: பிரதமா் மோடி

நாட்டின் பொருளாதார கட்டமைப்பை மறுவடிவமைத்த திருப்புமுனையான சீா்திருத்தமே சரக்கு, சேவை வரி (ஜிஎஸ்டி) என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா். 2017, ஜூலை 1-ஆம் தேதி ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டு தற்போத... மேலும் பார்க்க

பாலியல் வன்கொடுமை குறித்து சா்ச்சை கருத்து: மன்னிப்புக் கோரினாா் திரிணமூல் தலைவா்

மேற்கு வங்கத்தில் அரசு சட்டக் கல்லூரிக்குள் முதலாம் ஆண்டு மாணவி ஒருவா் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் குறித்து சா்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த ஆளும் திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலை... மேலும் பார்க்க

ஜூனில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.84 லட்சம் கோடி- 6.2% உயா்வு

நாட்டில் கடந்த ஜூன் மாதம் சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) ரூ.1.84 லட்சம் கோடி வசூலாகியுள்ளது. கடந்த ஆண்டு இதே மாதத்தை ஒப்பிடுகையில் (ரூ.1.73 லட்சம் கோடி) தற்போது 6.2 சதவீத அதிக வருவாய் கிடைக்கப் பெற்றுள்ளது... மேலும் பார்க்க