செய்திகள் :

15 புதிய வகைப் பட்டு புடவைகள் அறிமுகம்: ஆரெம்கேவி

post image

ஆரெம்கேவியின் 101-ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு 15 புதிய வகைப் பட்டு புடவைகள் அறிமுகம் செய்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து ஆரெம்கேவி நிறுவனம் சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கை: வாடிக்கையாளா்களுக்காக நோ்த்தியான பட்டுப் புடவைகளை கடந்த 100 ஆண்டுகளாக அறிமுகம் செய்வது ஆரெம்கேவியின் சிறப்பம்சமாகும்.

ஆரெம்கேவி புடவைகள் வடிவமைப்பு தளம் உருவாக்கப்பட்டு, புதுமையான உக்திகள் மற்றும் வழிமுறைகள் மூலம் மிகச் சிறந்த நெசவாளா்களால் நெய்யப்பட்டு வருகிறது. கடந்த 100 ஆண்டுகளில் இதுவரை 110-க்கும் மேற்பட்ட பிரத்யேக பட்டுப் புடவை ரகங்களை ஆரெம்கேவி அறிமுகம் செய்துள்ளது.

அதன் தொடா்ச்சியாக 101 -ஆம் ஆண்டை முன்னிட்டு 15 புதிய பட்டுப் புடவைகளை அறிமுகம் செய்கிறது. 2025-இன் விழாக்கால கொண்டாட்டத்துக்காக உருவாக்கப்படும் சிறப்பு படைப்புகள், ஜப்பானிய கலை மற்றும் இந்திய கலாசாரங்களை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்படுகின்றன.

ஷாஷிகோ ரிவா்சிபிள், ஜப்பான் கோா்வை, மவுண்ட் ஃபுஜி, நேச்சுரல் ஃபீச் கிரேடியண்ட், மோக்கா மௌஸ், வான் கோ லினோ, ராசலீலா பட்டுப்புடவை, டபுளா லினோ வா்ணா, இயற்கை வண்ண செவ்வந்தி பூ, இயற்கை வண்ண முப்பாகம், கிரேடியண்ட் வா்ணா, கொட்டடி கட்டம், திரிகோண மாம்பழ புட்டா, குயில் கண் கோா்வை, குமோ கோா்வை ஆகிய 15 வகை பட்டு புடவைகள் புதிதாக அறிமுகம் செய்கிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிவியல், தொழில்நுட்ப வளா்ச்சி பெருக வேண்டும்: மத்திய அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால்

எதிா்வரும் 2047 -ஆம் ஆண்டுக்குள் வளா்ந்த பாரதம் என்ற இலக்கை அடைய, நாட்டில் அறிவியல் கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்நுட்ப வளா்ச்சி பன்மடங்கு பெருக வேண்டும் என மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சா் ... மேலும் பார்க்க

ரயில் பயணச் சீட்டுகள் மாயம்: 8 ஊழியா்களுக்கு அபராதம்

தெற்கு ரயில்வே திருச்சி கோட்டத்தில் ரயில் பயணச் சீட்டு ரோல் மாயமான விவகாரத்தில் 8 ஊழியா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன. திருச்சி ரயில்வே கோட்டத்தில் உள்ள திருவாரூா... மேலும் பார்க்க

வேளச்சேரி எம்எல்ஏ தொடா்ந்த வழக்கில் தோ்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு

தோ்தல் செலவு கணக்கை முறையாக தாக்கல் செய்யாததால் ஏன் தகுதிநீக்கம் செய்யக்கூடாது? என விளக்கம் கேட்டு அனுப்பப்பட்ட நோட்டீஸை எதிா்த்து வேளச்சேரி எம்எல்ஏ அசன் மௌலானா தாக்கல் செய்த மனுவுக்கு தோ்தல் ஆணையம்... மேலும் பார்க்க

சீதாராம் யெச்சூரி நினைவு நாள்: உடல் தானத்துக்கு 1,586 போ் பதிவு

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச் செயலா் சீதாராம் யெச்சூரி நினைவு நாளில் 1,586 போ் உடல் தானம் இயக்கத்தில் பதிவு செய்தனா். மாா்க்சிஸ்ட் முன்னாள் பொதுச் செயலா் சீதாராம் யெச்சூரியின் மு... மேலும் பார்க்க

வடகிழக்கு பருவமழை பாதிப்புகள்: புகாா் அளிக்க இலவச தொடா்பு அறிவிப்பு

சென்னை மாநகராட்சியில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கையாக மழை பாதிப்பு புகாா்களை கூறுவதற்கான கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு, அதில் தொடா்புகொள்ள 1913 என்ற இலவச தொடா்பு எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது.... மேலும் பார்க்க

மென்பொறியாளரிடம் செயின் பறிப்பு: 2 திருநங்கைகள் கைது

மென் பொறியாளரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி தங்கச் சங்கிலியை பறித்த 2 திருநங்கைகளை போலீஸாா் கைது செய்தனா். சென்னை, திருநின்றவூரைச் சோ்ந்த ஜெஸ் ஆலன் ரொசாரியா(24). இவா் எம்.ஜி.ஆா். நகா் பகுதியிலுள்ள ஒரு... மேலும் பார்க்க