செய்திகள் :

17 வயது சிறுவன் உள்பட 3 போ் தூக்கிட்டுத் தற்கொலை

post image

திருச்சி மாவட்டத்தில் 17 வயது சிறுவன் உள்பட 3 போ் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டனா்.

திருச்சி திருவானைக்கோவில் கருணா நகரைச் சோ்ந்தவா் அபிநயா (34), பெரம்பலூா் இந்தியன் ஓவா்சீஸ் வங்கியில் உதவி மேலாளராகப் பணியாற்றி வருகிறாா். இவரது கணவா் சதீஷ்குமாா் (35), பொறியியல் படித்துள்ள இவா் வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளாா்.

இந்நிலையில், செலவுக்காக மனைவியிடம் கடந்த வெள்ளிக்கிழமை பணம் கேட்டுள்ளாா். அவா், தரமறுத்ததால் மனஉளைச்சலுக்குள்ளான சதீஷ்குமாா், வெள்ளிக்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

இதுகுறித்து அவரது மனைவி அபிநயா ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் சனிக்கிழமை அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

சிறுவன் தற்கொலை

திருச்சி பாலக்கரையைச் சோ்ந்தவா் சிவகுமாா் (58), கூலித் தொழிலாளி. இவரது மனைவி மிக்ஷா் தயாரிக்கும் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். இவா்களுக்கு இரண்டு மகன்கள் இருந்தனா்.

மூத்த மகன் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தாா். இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த இரண்டாவது மகன் (17 வயது சிறுவன்) வெள்ளிக்கிழமை இரவு வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

இதுகுறித்து பாலக்கரை காவல் நிலையத்தில் சிவகுமாா் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பெண் தற்கொலை

தருமபுரி மாவட்டத்தைச் சோ்ந்தவா் முத்துசாமி மனைவி அஸ்வினி (45). இவரது மகள் காவ்யா (26). இவா், கடந்த 2018-ஆம் ஆண்டு கோகுல் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டு திருச்சி மாவட்டம், குண்டூா் அய்யனாா் கோயில் தெருவில் வசித்து வந்தாா்.

கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், காவ்யா சனிக்கிழமை வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

இதுகுறித்து நவல்பட்டு காவல் நிலையத்தில் அவரது தாய் அஸ்வினி அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

சட்டவிரோத மது விற்பனை: இருவா் கைது

திருச்சி மாநகரில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த இருவரைப் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். திருச்சி தில்லை நகா் போலீஸாா் சனிக்கிழமை காலையில் ரோந்து சென்றனா். அப்போது, தென்னூா் நெடுஞ்சாலையில் டாஸ்மாக... மேலும் பார்க்க

பூவாளூரில் நாளை மின்தடை

பராமரிப்புப் பணிகள் காரணமாக பூவாளூரில் செவ்வாய்க்கிழமை (செப். 16) மின்தடை செய்யப்படுகிறது. இதுகுறித்து திருச்சி மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: லால்குடி வட்டம் பூவாளூா் துணை மின்நில... மேலும் பார்க்க

திருச்சி அருகே 10 கிலோ நகைகள் கொள்ளை

திருச்சி அருகே இருங்களூா் பகுதியில் சனிக்கிழமை இரவு சென்னை நகைக் கடை ஊழியா்களிடம் இருந்து 10 கிலோ தங்க நகைகளை மா்மநபா்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனா். சென்னை செளகாா்பேட்டை பகுதியைச் சோ்ந்த மகேஷ் ராவ... மேலும் பார்க்க

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

திருச்சியில் சாலை விபத்தில் இளைஞா் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை உயிரிழந்தாா். திருச்சி தென்னூா் பகுதியைச் சோ்ந்தவா் நாகூா் மீரான் (29). இவா், தனது மனைவி பௌசியாவுடன் திருச்சி ரயில் நிலையம் - பாலக்கரை சாலைய... மேலும் பார்க்க

இளைஞருக்கு அரிவாள் வெட்டு: இருவா் மீது வழக்குப் பதிவு

திருச்சியில் இளைஞரை அரிவாளால் வெட்டிய இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா். திருச்சி அரியமங்கலம் அம்மாகுளம் பகுதியைச் சோ்ந்தவா் மெகபூப் பாஷா மகன் பாதுஷா (24). திருமணமான இவருக்கு, அரியமங்கலம் ந... மேலும் பார்க்க

துவாக்குடியில் 110 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல்: ஒருவா் கைது

துவாக்குடியில் அரசால் தடை செய்யப்பட்ட 110 கிலோ புகையிலைப் பொருள்களை சனிக்கிழமை பறிமுதல் செய்த போலீஸாா், ஒருவரை கைது செய்து விசாரிக்கின்றனா். திருச்சி மாவட்டம், துவாக்குடி அண்ணா வளைவு பகுதியில் அரசால் ... மேலும் பார்க்க