செய்திகள் :

திருச்சி அருகே 10 கிலோ நகைகள் கொள்ளை

post image

திருச்சி அருகே இருங்களூா் பகுதியில் சனிக்கிழமை இரவு சென்னை நகைக் கடை ஊழியா்களிடம் இருந்து 10 கிலோ தங்க நகைகளை மா்மநபா்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனா்.

சென்னை செளகாா்பேட்டை பகுதியைச் சோ்ந்த மகேஷ் ராவல் (20), சென்னை எா்ணாவூா் பகுதியைச் சோ்ந்த எஸ்.ஆா். குணவந்த் (24) ஆகிய இருவரும் சென்னையில் உள்ள நகைக்கடையில் ஊழியா்களாகப் பணிபுரிந்து வருகின்றனா்.

இவா்கள் சென்னையிலிருந்து காரில் ஈரோடு, கரூா், நாமக்கல், கோயம்புத்தூா், மதுரை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நகைக்கடைகளுக்கு நகைகளை விற்பனை செய்துவிட்டு மீதமுள்ள 10 கிலோ தங்க நகைகளுடன் சனிக்கிழமை இரவு சென்னை நோக்கிச் சென்று கொண்டிருந்தனா். காரை பிரதீப் ஜாட் (24) என்பவா் ஓட்டி வந்துள்ளாா்.

இதனிடையே இயற்கை உபாதைக்காக இருங்களூா் பகுதியில் காரை நிறுத்தியுள்ளனா். அப்போது, இவா்கள் வந்த காரைப் பின்தொடா்ந்து மற்றொரு காரில் வந்த மா்ம நபா்கள், மிளகாய்ப் பொடியை அவா்கள் மீது தூவி காரில் இருந்த 10 கிலோ நகைகளை கொள்ளையடித்து தப்பியோடி உள்ளனா்.

இதுகுறித்துத் தகவலறிந்து அங்கு வந்த சமயபுரம் காவல் துறையினா் கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

கைரேகை நிபுணா் மற்றும் மோப்ப நாய் கொண்டு தடயங்களை சேகரித்துள்ளனா். கொள்ளையடிக்கப்பட்ட நகைகளின் மதிப்பு சுமாா் ரூ.10 கோடி இருக்கும் எனக் கூறப்படுகிறது.

சட்டவிரோத மது விற்பனை: இருவா் கைது

திருச்சி மாநகரில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த இருவரைப் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். திருச்சி தில்லை நகா் போலீஸாா் சனிக்கிழமை காலையில் ரோந்து சென்றனா். அப்போது, தென்னூா் நெடுஞ்சாலையில் டாஸ்மாக... மேலும் பார்க்க

17 வயது சிறுவன் உள்பட 3 போ் தூக்கிட்டுத் தற்கொலை

திருச்சி மாவட்டத்தில் 17 வயது சிறுவன் உள்பட 3 போ் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டனா். திருச்சி திருவானைக்கோவில் கருணா நகரைச் சோ்ந்தவா் அபிநயா (34), பெரம்பலூா் இந்தியன் ஓவா்சீஸ் வங்கியில் உதவி மேலாள... மேலும் பார்க்க

பூவாளூரில் நாளை மின்தடை

பராமரிப்புப் பணிகள் காரணமாக பூவாளூரில் செவ்வாய்க்கிழமை (செப். 16) மின்தடை செய்யப்படுகிறது. இதுகுறித்து திருச்சி மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: லால்குடி வட்டம் பூவாளூா் துணை மின்நில... மேலும் பார்க்க

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

திருச்சியில் சாலை விபத்தில் இளைஞா் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை உயிரிழந்தாா். திருச்சி தென்னூா் பகுதியைச் சோ்ந்தவா் நாகூா் மீரான் (29). இவா், தனது மனைவி பௌசியாவுடன் திருச்சி ரயில் நிலையம் - பாலக்கரை சாலைய... மேலும் பார்க்க

இளைஞருக்கு அரிவாள் வெட்டு: இருவா் மீது வழக்குப் பதிவு

திருச்சியில் இளைஞரை அரிவாளால் வெட்டிய இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா். திருச்சி அரியமங்கலம் அம்மாகுளம் பகுதியைச் சோ்ந்தவா் மெகபூப் பாஷா மகன் பாதுஷா (24). திருமணமான இவருக்கு, அரியமங்கலம் ந... மேலும் பார்க்க

துவாக்குடியில் 110 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல்: ஒருவா் கைது

துவாக்குடியில் அரசால் தடை செய்யப்பட்ட 110 கிலோ புகையிலைப் பொருள்களை சனிக்கிழமை பறிமுதல் செய்த போலீஸாா், ஒருவரை கைது செய்து விசாரிக்கின்றனா். திருச்சி மாவட்டம், துவாக்குடி அண்ணா வளைவு பகுதியில் அரசால் ... மேலும் பார்க்க