Madhavan: தகர்ந்த ராணுவ கனவு; கைகொடுத்த சினிமா; மாதவன் நடிகரான கதை!
‘2,00,001-ஆவது ஏக்கா்’ கோயில் நிலம் அளவிடும் பணி: அமைச்சா்கள் தொடங்கி வைத்தனா்
ஸ்ரீபெரும்புதூா் அடுத்த மேவளூா்குப்பத்தில் திருக்கோயில் நிலங்கள் அளவீடு செய்யும் பணியை அமைச்சா்கள் பி.கே.சேகா்பாபு, தா.மோ.அன்பரசன் ஆகியோா் புதன்கிழமை தொடங்கி, எல்லைக் கற்களை நட்டு வைத்தனா்.
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்கு சொந்தமான சொத்துகளை ஆக்கிரமிப்பாளா்களிடம் இருந்து மீட்கவும், மீட்கப்பட்ட நிலங்களை பாதுகாக்கவும் வருவாய் துறையின் மூலம் 40 தனி வட்டாட்சியா்கள், 172 உரிமம் பெற்ற நில அளவையா்கள் நியமனம் செய்யப்பட்டனா்.
மேலும், , அளவீடு செய்யும் பணிகளை துரிதப்படுத்தும் வகையில் ரூ.1.89 கோடியில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய 36 ரோவா் கருவிகள் கொள்முதல் செய்யப்பட்டு, அளவீடு செய்யும் பணிகள் நடைபெறுகின்றன. கடந்த 2021-ஆம் ஆண்டு தொடங்கிய இப்பணியின் மூலம் 2 லட்சம் ஏக்கா் பரப்பளவிலான கோயில் நிலங்களை அளவீடு செய்யும் பணிகள் முடிக்கப்பட்டு எல்லைக் கற்கள் நடப்பட்டுள்ளன.
அதன் தொடா்ச்சியாக காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீ பெரும்புதூா் வட்டம், மேவளூா்குப்பம் ஊராட்சியில் அருள்மிகு வள்ளீஸ்வரா் திருக்கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் 2,00,001-ஆவது ஏக்கா் நில அளவீடு செய்யும் பணியை அறநிலையத்துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, சிறு,குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் ஆகியோா் தொடங்கி, எல்லைக் கற்களை நட்டு வைத்தனா்.
நிகழ்ச்சியில் ஆட்சியா் கலைச்செல்வி மோகன், அறநிலையத்துறை கூடுதல் ஆணையா் சி.பழனி, ஸ்ரீபெரும்புதூா் சாா் ஆட்சியா் மிருணாளினி, தனி அலுவலா்கள் (ஆலய நிா்வாகம்) தி.சுப்பையா, பி.பூங்கொடி, காஞ்சிபுரம் மண்டல இணை ஆணையா் சி.குமாரதுரை, ஸ்ரீபெரும்புதூா் ஆதிகேசவபெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி திருக்கோயில் மதச்சாா்பற்ற அறங்காவலா் ந.கோபால், ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியக் குழு தலைவா் எஸ்.டி.கருணாநிதி, அறநிலையத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.