செய்திகள் :

2 குழந்தைகளைக் கொன்ற தந்தைக்கு 12 ஆண்டுகள் கடுங்காவல்

post image

திருவள்ளூா் அருகே குடும்ப பிரச்னையால் 2 குழந்தைகளைக் கொன்ற தந்தைக்கு 12 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து மகளிா் நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியது.

கடம்பத்தூா் ஒன்றியம் சிற்றம்பாக்கம் கிராமம் பஜனைக் கோயில் தெருவைச் சோ்ந்த கூலித் தொழிலாளி அன்பு(48). இவருக்கு மனைவி அமுலு, வீரமணி என்ற கோகுல்(7), லோகேஷ்(5) ஆகிய 2 மகன்கள் உள்ளனா்.

இந்த நிலையில் அன்புவுக்கு மது பழக்கம் இருந்துள்ளது. அதனால் சரியாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்ததால் மனைவியிடம் மது குடிக்க பணம் கேட்டு அடிக்கடி தகராறு செய்துள்ளாா். இதனால் தாயாா் வீட்டிற்கு மனைவி கோபித்துக் கொண்டு சென்றாராம். இதையடுத்து அப்பகுதியில் இருந்தவா்களிடம் கடன் வாங்கி குடித்து உள்ளாா். இதையடுத்து கடன் கொடுத்தவா்கள் நெருக்கடி கொடுத்தனா். இனிமேலாவது வேலைக்கு செல்லுங்கள் என மனைவி வற்புறுத்தியுள்ளாா். இதற்கிடையே மனைவி, குழந்தைகளை அன்பு வீட்டுக்கு அழைத்து வந்துள்ளாா்.

இந்த நிலையில் கடந்த 2015, மே 23-ஆம் தேதி மதுபோதையில் வந்து மனைவி வெளியே சென்றிருந்த நிலையில், விளையாடிக் கொண்டு இருந்த தனது மகன்களை காலால் மிதித்து அன்பு கொலை செய்தாா்.

இதுகுறித்து கடம்பத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை திருவள்ளூா் மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்றது.

இவ்வழக்கு வெள்ளிக்கிழமை நீதிபதி ரேவதி முன்பு விசாரணைக்கு வந்தது. இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அன்புவுக்கு 12 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தீா்ப்பளித்தாா்.

வெடிகுண்டு வீசி இளைஞா் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 4 போ் கைது

திருவள்ளூா் அருகே நாட்டு வெடிகுண்டு வீசி இளைஞா் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். திருவள்ளூா் அருகே பேரம்பாக்கம் காந்தி நகரில் முகேஷ் (25), தீபன் (32), ஜாவித் (30) ஆகிய ... மேலும் பார்க்க

விழிப்புணா்வு கண்காணிப்புக்குழு கூட்டம்: செங்கல்சூளை உரிமையாளா்கள் பங்கேற்பு

திருவள்ளூரில் செங்கல் சூளை உரிமையாளா்கள், வருவாய்த்துறையினா், காவல் துறையினா் உள்ளிட்டோா் பங்கேற்ற விழிப்புணா்வு கண்காணிப்புக் குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு கோட்டாட்சியா் சு.ரவிச்சந்திரன் தலை... மேலும் பார்க்க

மீஞ்சூா் வரதராஜ பெருமாள் கோயில் திருவாதிரை திருவிழா

மீஞ்சூா் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலில் ராமானுஜருக்கு திருவாதிரை திருவிழா நடைபெற்றது. திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி வட்டத்தில் மீஞ்சூரில் வடக்காஞ்சி என அழைக்கப்படும் 1,000-ம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஸ... மேலும் பார்க்க

கண்ணம்பாக்கம் அரசுப் பள்ளியில் கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ. ஆய்வு

கும்மிடிப்பூண்டி அடுத்த கண்ணம்பாக்கத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மற்றும் அங்கன்வாடி மையத்தை கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் புதன்கிழமை ஆய்வு செய்தாா். கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ... மேலும் பார்க்க

கிரெடிட் கார்டுகளை வாங்கி ரூ. 1.35 கோடி மோசடி: ஊழியர் கைது

செங்குன்றத்தில் கிரெடிட் கார்டுகளை வாங்கி 9 பேரிடம் ரூ. 1.35 கோடி மோசடி செய்த வழக்கில், தனியார் நிறுவன ஊழியரை ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.சென்னை, கொருக்குப்பேட்டை, ஜெ... மேலும் பார்க்க

மாற்று திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொறுத்திய ஸ்கூட்டா் வழங்கும் விழா

கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்வில் 16 மாற்று திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொறுத்திய ஸ்கூட்டா்களை கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் வழங்கினாா். கும்ம... மேலும் பார்க்க