செய்திகள் :

2-வது ஒருநாள்: பென் டக்கெட், ஜோ ரூட் அரைசதம்; இந்தியாவுக்கு 305 ரன்கள் இலக்கு!

post image

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 304 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி கட்டாக்கில் இன்று (பிப்ரவரி 9) நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.

இதையும் படிக்க: உலகக் கோப்பையைவிட சாம்பியன்ஸ் டிராபி மிகவும் சவாலானது: டெம்பா பவுமா

பென் டக்கெட், ஜோ ரூட் அரைசதம்

இங்கிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக பில் சால்ட் மற்றும் பென் டக்கெட் களமிறங்கினர். இந்த இணை இங்கிலாந்துக்கு சிறப்பான தொடக்கத்தைத் தந்தது. இருப்பினும், பில் சால்ட் 26 ரன்களில் வருண் சக்கரவர்த்தி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து, பென் டக்கெட் மற்றும் ஜோ ரூட் ஜோடி சேர்ந்தனர். தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் பவுண்டரிகளை விரட்டிய பென் டக்கெட் அரைசதம் கடந்து அசத்தினார். அவர் 56 பந்துகளில் 65 ரன்கள் எடுத்தார். அதில் 10 பவுண்டரிகள் அடங்கும்.

அதன் பின், ஜோ ரூட் மற்றும் ஹாரி ப்ரூக் ஜோடி சேர்ந்தனர். இருவரும் நிதானமாக விளையாடி அணிக்கு ரன்களை சேர்த்தனர். ஹாரி ப்ரூக் 52 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கேப்டன் ஜோஸ் பட்லர் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோ ரூட் 72 பந்துகளில் 69 ரன்கள் எடுத்தார். அதில் 6 பவுண்டரிகள் அடங்கும். அடில் ரஷீத் ஹாட்ரிக் பவுண்டரி அடித்து அசத்தினார். இறுதிக்கட்டத்தில், லியம் லிவிங்ஸ்டன் 32 பந்துகளில் 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 2 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும்.

இதையும் படிக்க: 14 ஆண்டுகளில் முதல் முறையாக இலங்கையில் டெஸ்ட் தொடரை வென்ற ஆஸ்திரேலியா!

49.5 ஓவர்களின் முடிவில் இங்கிலாந்து அணி 304 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்தியா தரப்பில் ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். முகமது ஷமி, ஹர்ஷித் ராணா, ஹார்திக் பாண்டியா மற்றும் வருண் சக்கரவர்த்தி தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

305 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடி வருகிறது.

அறிமுக ஆட்டத்தில் 150 ரன்கள்! சாதனை புரிந்த தென்னாப்பிரிக்க வீரர்!

முத்தரப்பு தொடரில் தென்னாப்பிரிக்க வீரர் அறிமுக ஆட்டத்திலேயே அதிக ரன்களை அடித்து சாதனை புரிந்துள்ளார்.பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய மூன்று அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு கிரிக... மேலும் பார்க்க

ரோஹித், கில் அதிரடி: 305 ரன்கள் இலக்கை விரட்டிப் பிடித்து தொடரை வென்றது இந்தியா!

கேப்டன் ரோஹித் சர்மா, ஷுப்மன் கில் அதிரடியால் 305 ரன்கள் இலக்கை விரட்டிப் பிடித்து இந்திய கிரிக்கெட் அணி தொடரை வென்றது.இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் 2-வது ... மேலும் பார்க்க

யுபி வாரியர்ஸ் அணியின் கேப்டனாக தீப்தி சர்மா நியமனம்!

மகளிர் பிரீமியர் லீக் தொடரில் யுபி வாரியர்ஸ் அணியின் கேப்டனாக தீப்தி சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் வருகிற பிப்ரவரி 14 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. தொடரின் முதல் ப... மேலும் பார்க்க

திமுத் கருணாரத்னேவுக்கு ஐசிசி பாராட்டு!

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ள இலங்கை வீரர் திமுத் கருணாரத்னேவை ஐசிசி வெகுவாக பாராட்டியுள்ளது.இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அண்மையில் ... மேலும் பார்க்க

உலகக் கோப்பையைவிட சாம்பியன்ஸ் டிராபி மிகவும் சவாலானது: டெம்பா பவுமா

உலகக் கோப்பைத் தொடரைக் காட்டிலும் சாம்பியன்ஸ் டிராபி மிகவும் சவாலானது என தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா தெரிவித்துள்ளார்.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் பிப்ரவரி 19 ஆம் தேதி முதல் தொடங்கவ... மேலும் பார்க்க

கடைசி ஒருநாள் போட்டிக்காக இங்கிலாந்து அணியில் புதிதாக வீரர் ஒருவர் சேர்ப்பு!

இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டிக்காக இங்கிலாந்து அணியில் புதிதாக வீரர் ஒருவர் சேர்க்கப்பட்டுள்ளார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றன. இரு அணிகளுக்கும் இடை... மேலும் பார்க்க