செய்திகள் :

உலகக் கோப்பையைவிட சாம்பியன்ஸ் டிராபி மிகவும் சவாலானது: டெம்பா பவுமா

post image

உலகக் கோப்பைத் தொடரைக் காட்டிலும் சாம்பியன்ஸ் டிராபி மிகவும் சவாலானது என தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா தெரிவித்துள்ளார்.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் பிப்ரவரி 19 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. தொடரின் முதல் போட்டியில் போட்டியை நடத்தும் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடுகின்றன. சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

இதையும் படிக்க: கடைசி ஒருநாள் போட்டிக்காக இங்கிலாந்து அணியில் புதிதாக வீரர் ஒருவர் சேர்ப்பு!

டெம்பா பவுமா கூறுவதென்ன?

சாம்பியன்ஸ் டிராபி தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பைத் தொடரைக் காட்டிலும், சாம்பியன்ஸ் டிராபி தொடர் சவாலானது என தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: உலகக் கோப்பைத் தொடரில் உங்களுக்கு தோல்வியிலிருந்து மீண்டு வர நேரம் இருக்கும். ஆனால், சாம்பியன்ஸ் டிராபி தொடர் குறுகிய கால தொடர் என்பதால், அணி தோல்வியைத் தழுவினால் அடுத்த சுற்றுக்கு முன்னேறுவது மிகவும் கடினம். வெளிநாடுகளில் விளையாடுவது புதிய வீரர்களுக்கு மிகவும் சவாலானதாக இருக்கும்.

இதையும் படிக்க: சாம்பியன்ஸ் டிராபி: பிரபல வேகப் பந்துவீச்சாளருக்கு பதிலாக மாற்று வீரரை அறிவித்த தென்னாப்பிரிக்கா!

பாகிஸ்தானில் முத்தரப்பு தொடரில் விளையாடுவதால், இங்குள்ள மைதானங்களின் தன்மைக்கு ஏற்றவாறு புதிய வீரர்கள் தங்களது ஆட்டத்தை மாற்றிக் கொள்கிறார்கள். கேசவ் மகாராஜ் மற்றும் ஷம்சி இருவரும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் மிகப் பெரிய பங்களிப்பை வழங்க உள்ளனர் என்றார்.

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பிப்ரவரி 21 ஆம் தேதி தனது முதல் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி, ஆப்கானிஸ்தானை எதிர்த்து விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

அறிமுக ஆட்டத்தில் 150 ரன்கள்! சாதனை புரிந்த தென்னாப்பிரிக்க வீரர்!

முத்தரப்பு தொடரில் தென்னாப்பிரிக்க வீரர் அறிமுக ஆட்டத்திலேயே அதிக ரன்களை அடித்து சாதனை புரிந்துள்ளார்.பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய மூன்று அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு கிரிக... மேலும் பார்க்க

ரோஹித், கில் அதிரடி: 305 ரன்கள் இலக்கை விரட்டிப் பிடித்து தொடரை வென்றது இந்தியா!

கேப்டன் ரோஹித் சர்மா, ஷுப்மன் கில் அதிரடியால் 305 ரன்கள் இலக்கை விரட்டிப் பிடித்து இந்திய கிரிக்கெட் அணி தொடரை வென்றது.இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் 2-வது ... மேலும் பார்க்க

யுபி வாரியர்ஸ் அணியின் கேப்டனாக தீப்தி சர்மா நியமனம்!

மகளிர் பிரீமியர் லீக் தொடரில் யுபி வாரியர்ஸ் அணியின் கேப்டனாக தீப்தி சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் வருகிற பிப்ரவரி 14 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. தொடரின் முதல் ப... மேலும் பார்க்க

திமுத் கருணாரத்னேவுக்கு ஐசிசி பாராட்டு!

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ள இலங்கை வீரர் திமுத் கருணாரத்னேவை ஐசிசி வெகுவாக பாராட்டியுள்ளது.இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அண்மையில் ... மேலும் பார்க்க

2-வது ஒருநாள்: பென் டக்கெட், ஜோ ரூட் அரைசதம்; இந்தியாவுக்கு 305 ரன்கள் இலக்கு!

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 304 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி கட்டாக்கில் இன்று (பிப்ரவரி 9) நட... மேலும் பார்க்க

கடைசி ஒருநாள் போட்டிக்காக இங்கிலாந்து அணியில் புதிதாக வீரர் ஒருவர் சேர்ப்பு!

இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டிக்காக இங்கிலாந்து அணியில் புதிதாக வீரர் ஒருவர் சேர்க்கப்பட்டுள்ளார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றன. இரு அணிகளுக்கும் இடை... மேலும் பார்க்க