செய்திகள் :

2006 குண்டுவெடிப்பு: லஷ்கரா-முஜாகிதீனா? பாத்திரமா-குக்கரா? விடை காணாத வினாக்கள்!

post image

மும்பை: 2006ஆம் ஆண்டு மும்பை ரயில் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 19 ஆண்டுகளுக்குப் பிறகு, குற்றஞ்சாட்டப்பட்டிருந்த 12 பேர் விடுதலை செய்யப்பட்டிருப்பதோடு, இன்னமும் பல கேள்விகளுக்கு விடை காணாமலேயே இருப்பதும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.

கடந்த 2006, ஜூலை 11-இல் மும்பையில் பல்வேறு பகுதிகளில் சென்ற புறநகா் ரயில்களில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 180 போ் பலியாகினர். பலா் படுகாயமடைந்தனா்.

இந்தச் சம்பவத்தில் தொடா்புடையவர்கள் என்று 12 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் மகாராஷ்டிர பயங்கரவாத தடுப்புப் படை (ஏடிஎஸ்) விசாரணை நடத்தியது. கைது செய்யப்பட்ட 12 பேரும் தடைசெய்யப்பட்ட இந்திய இஸ்லாமிய இயக்கத்தைச் (சிமி) சோ்ந்தவா்கள் என்றும் பாகிஸ்தானைச் சோ்ந்த லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்புடன் இணைந்து இந்தச் சதித்திட்டத்தில் ஈடுபட்டதாகவும் ஏடிஎஸ் குற்றஞ்சாட்டியது.

அது மட்டுமல்ல, குண்டுவெடிப்புக்கு சமையலறை பாத்திரங்கள் பயன்படுத்தப்பட்டிருந்ததாகவும் ஏடிஎஸ் விசாரணையின்போது கூறியிருந்தது.

இதற்கு முரணாக, விசாரணைத் தொடங்கி 2 ஆண்டுகளுக்குப் பின், மும்பை குற்றவியல் பிரிவு காவல்துறை, இந்த பயங்கரவாதத் தாக்குதல் இந்தியன் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பின் பாணியில் நடத்தப்பட்டிருப்பதாகக் கூறியிருந்தது.

அது மட்டுமல்ல, விசாரணை நீதிமன்றத்துக்கு வந்தபோதுதான், பிஷர் குக்கரில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டு வெடிக்க வைக்கப்பட்டதாகத் தகவல் வெளியானது.

சரி அவ்வாறே பிரஷர் குக்கர் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்ற ஏடிஎஸ் வாதத்தை எடுத்துக் கொண்டாலும் கூட, அதில் சில கேள்விகள் எழுகின்றன. அதாவது, பயங்கரவாதிகள், இந்த குக்கர்களை எந்தக் கடையிலிருந்து வாங்கினர், அந்தக் கடையின் உரிமையாளரிடம் விசாரிக்கப்பட்டதா, அவர் சொன்ன தகவலின் அடிப்படையில், குக்கர் வாங்கியவரின் முகம் வரையப்பட்டு, வெளியிடப்படாதது ஏன்? என்பதுதான் அது.

குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவரின் வீட்டிலிருந்து குக்கர் மற்றும் சில பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டிருந்தாலும், அவரது வாக்குமூலத்தில் அது தொடர்பான ஒரு தகவலும் இடம்பெற்றிருக்கவில்லை.

மற்றொரு குற்றவாளியின் வாக்குமூலத்தில் ஆர்டிஎக்ஸ், டைமர் போன்றவை வெடிகுண்டுகள் தயாரிக்கப் பயன்படுத்தியதாகக் கூறப்பட்டிருக்கிறது. ஆனால், அதில் பிரஷர் குக்கர் பற்றி குறிப்பிடப்படவில்லை.

60 ஆண்டுகால சேவைக்குப் பிறகு "மிக்-21' போர் விமானங்களுக்கு ஓய்வு

இந்திய விமானப்படையில் 60 ஆண்டுகளுக்கும் மேல் சேவையில் இருந்த ரஷிய தயாரிப்பான "மிக்-21' போர் விமானங்கள், செப்டம்பர் மாதத்தில் ஓய்வு பெற உள்ளன.இந்திய விமானப்படையின் 93 ஆண்டுகால வரலாற்றில் எந்த ஒரு போர் ... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் இடஒதுக்கீடு இல்லை: கனிமொழி கேள்விக்கு மத்திய அரசு விளக்கம்

நமது நிருபர்உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசியல் இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை என்று மக்களவையில் நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் கனிமொழி எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள... மேலும் பார்க்க

நாடாளுமன்ற வளாகத்தில் விரைவில் மக்களிடம் முழு உடல் ஸ்கேனர் கருவிகள் மூலம் பரிசோதனை

நமது சிறப்பு நிருபர்நாடாளுமன்ற வளாகத்துக்கு வரும் பொதுமக்களை முழு உடல் ஸ்கேனர்கள் மூலம் பரிசோதனை செய்யும் வசதி விரைவில் அறிமுகமாகவுள்ளது. இதையொட்டி, பாடி ஸ்கேனர்கள் எனப்படும் முழு உடல் பரிசோதனை கருவிக... மேலும் பார்க்க

ஊரக வேலை திட்டம் நிறுத்தப்படாது: மத்திய அமைச்சர் விளக்கம்

நமது நிருபர்மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை (மன்ரேகா) நிறுத்தும் திட்டம் ஏதும் மத்திய அரசிடம் இல்லை என்று மக்களவையில் மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் சிவ்ராஜ் சிங் சௌகான் த... மேலும் பார்க்க

விமானக் கட்டணம் கடும் உயர்வு பிரச்னை: மத்திய அமைச்சர் பதில்

விமானக் கட்டணங்கள் அவ்வப்போது கடுமையாக உயர்த்தப்படுவதை மத்திய அரசு ஒழுங்குமுறைப்படுத்துவதில்லை என்று அத்துறையின் இணை அமைச்சர் முரளீதர் மோஹோல் பதிலளித்துள்ளார். இதுதொடர்பாக மாநிலங்களவையில் திமுக உறுப்ப... மேலும் பார்க்க

8-ஆவது ஊதியக் குழு அமைப்பதில் தாமதம் ஏன்?: மத்திய அமைச்சர் பதில்

மத்திய அரசு ஊழியர்களுக்கான எட்டாவது ஊதியக் குழு அமைப்பதில் தாமதம் ஏன் என்று மக்களவையில் திருப்பெரும்புதூர் தொகுதி திமுக உறுப்பினரும், மக்களவை திமுக குழுத் தலைவருமான டி.ஆர். பாலு கேள்வி எழுப்பினார்.இதற... மேலும் பார்க்க