செய்திகள் :

2015-ல் 25 கோடி பேர்; தற்போது 95 கோடி பேருக்கு பயன்! பிரதமர் மோடி பெருமிதம்!

post image

இந்தியாவில் 95 கோடி பேர் சமூகப் பாதுகாப்பு சலுகையைப் பயன்படுத்தி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை ‘மனதின் குரல்’ வானொலி நிகழ்ச்சி வாயிலாக பிரதமா் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.

இதன்படி, ஜூன் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான இன்று நடைபெற்ற 123 ஆவது மனதின் குரல் நிகழ்ச்சியில் சமூகப் பாதுகாப்பு சலுகை குறித்து பிரதமர் மோடி பேசினார்.

நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், இந்தியாவில் தற்போது பெரும்பாலான மக்கள் ஏதேனும் ஒரு சமூகப் பாதுகாப்பு சலுகையைப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றன. இதுதொடர்பான அறிக்கையை சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) வெளியிட்டுள்ளது.

இந்திய மக்கள்தொகையில் 64 சதவிகிதத்துக்கும் அதிகமானோர், ஏதேனும் ஒரு சமூகப் பாதுகாப்பு சலுகையைப் பயன்படுத்தி வருவதாக அறிக்கையில் கூறுகிறது.

2015 வரையில் அரசின் திட்டங்கள் 25 கோடிக்கும் குறைவான மக்களையே சென்றடைந்தன. ஆனால், தற்போது 95 கோடி பேர் சமூகப் பாதுகாப்பு சலுகையால் பயனடைகின்றனர்.

சுகாதாரம் முதல் சமூகப் பாதுகாப்பு வரையில், ஒவ்வொரு துறையிலும் இந்தியா குறிப்பிடத்தக்க வகையில் முன்னேறி வருகிறது.

இதன் மூலம் சமூக நீதி வெளிக்கொணரப்படுகிறது. இந்த வெற்றிகள் அனைத்தும், வரும் காலங்களில் இன்னும் சிறப்பாக இருக்கும் என்ற நம்பிக்கையைக் கொடுக்கிறது; இந்தியாவின் ஒவ்வோர் அடியிலும் வலுப் பெறும் என்ற நம்பிக்கையும் தருகிறது என்று தெரிவித்தார்.

மேலும், இந்தியாவை டிராக்கோமா (பாக்டீரியா நோய்த் தொற்று) இல்லாத நாடாக உலக சுகாதார அமைப்பு அறிவித்ததை, குறிப்பிட்ட மைல்கல் என்று சுட்டிக் காட்டிய பிரதமர் மோடி, இந்த வெற்றிக்காக சுகாதாரப் பணியாளர்களையும் பாராட்டினார்.

இதையும் படிக்க:சொல்லப் போனால்... டிரம்ப்பின் நோபல் காய்ச்சல்!

தில்லிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு: கொல்கத்தாவில் பத்திரமாக தரையிறக்கம்

ஏர் இந்தியாவின் போயிங் ட்ரீம்லைனர் ரக விமானம் ‘ஏஐ - 357’ ஞாயிற்றுக்கிழமை(ஜூன் 29) ஜப்பான் தலைநகர் டோக்கியோ நகரிலுள்ள ஹனேடா விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு புது தில்லிக்குச் சென்று கொண்டிருந்தபோது, ... மேலும் பார்க்க

ஹிந்தி எதிர்ப்பு எதிரொலி: மகாராஷ்டிரத்தில் மும்மொழிக் கொள்கை திரும்பப் பெறப்பட்டதாக அறிவிப்பு!

மும்பை: மகாராஷ்டிரத்தில் மும்மொழிக் கொள்கை திரும்பப் பெறப்படுவதாக முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் தலைமையிலான மாநில அரசு ஞாயிற்றுக்கிழமை(ஜூன் 29) அறிவித்துள்ளது. மகாராஷ்டிரத்தில் மும்மொழிக் கொள்கையை அமல்ப... மேலும் பார்க்க

புரி ரத யாத்திரை கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணம்!

ஒடிஸாவில் உலகப் புகழ்பெற்ற புரி ஜெகந்நாதர் ரத யாத்திரை கோலாகலமாக நடைபெற்றுவரும் நிலையில், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனா்.இந்த விழாவில்... மேலும் பார்க்க

தில்லியில் காற்று மாசுபாட்டைக் குறைக்க செயற்கை மழை சோதனை: ஜூலை 4 தொடக்கம்!

புது தில்லி: தில்லியில் காற்று மாசு பிரச்னையை எதிா்க்கொள்ளும் விதமாக செயற்கை மழையை பொழியச் செய்யும் முன்னோட்ட சோதனை ஜூலை 4 முதல் 11 வரை செயல்படுத்தப்படவிருக்கிறது. ஐஐடி கான்பூர் இதற்கு தேவையான தொழில்ந... மேலும் பார்க்க

மஞ்சள் வாரியத்துக்கான புதிய தலைமையகம் திறப்பு! - எங்கே?

தேசிய மஞ்சள் வாரியத்துக்கான புதிய தலைமையகம் திறக்கப்பட்டுள்ளது. மஞ்சள் வாரிய தலைமையகத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று(ஜூன் 29) திறந்து வைத்தார்.தெலங்கானாவிலுள்ள நிஸாமாபாத் நகரில் மஞ்சள் வாரி... மேலும் பார்க்க

புதுப்பொலிவுடன் பஹல்காம்! சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

பஹல்காமில் பயங்கரவாத தாக்குதலின் வடு மறைந்து வருகிறது. சுற்றுலா பயணிகள் வருகையால் பஹல்காம் புதுப்பொலிவு பெற்றுள்ளது. ஜம்மு-காஷ்மீரின் பிரபல சுற்றுலா நகரான பஹல்காம் அருகேயுள்ள பைசாரன் பள்ளத்தாக்கு பகுத... மேலும் பார்க்க