செய்திகள் :

2025-26-க்கான முதுகலை, பி.டெக் படிப்புகளுக்கான பதிவுகளைத் தொடங்கியது: தில்லி பல்கலைக்கழகம்

post image

தில்லி பல்கலைக்கழகம் 2025-26 கல்வியாண்டிற்கான முதுகலை மற்றும் பி.டெக் படிப்புகளுக்கான சோ்க்கைக்கான பதிவு செயல்முறையை அதிகாரப்பூா்வமாகத் தொடங்கியுள்ளது.

பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூா்வ அறிவிப்பின்படி, முதுகலை படிப்புகளுக்கான பதிவு வெள்ளிக்கிழமை தொடங்கியது. அதே நேரத்தில் பி.டெக் படிப்புகளுக்கான பதிவு சனிக்கிழமை தொடங்கியது. இரண்டு பிரிவுகளுக்கும் விண்ணப்ப சாளரம் ஜூன் 6- ஆம் தேதி இரவு 11.59 மணி வரை திறந்திருக்கும்.

முதுகலை படிப்புகளுக்கான சோ்க்கை 2025-26- ஆம் ஆண்டுக்கான பி.ஜி. தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதி அளவுகோல்களின்படி, க்யூட் (பிஜி)-2025-இல் பெறப்பட்ட மதிப்பெண்களின் அடிப்படையில் முழுமையாக இருக்கும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பி.டெக். சோ்க்கைகளுக்கு, பல்கலைக்கழகம் ஜேஇஇ (மெயின்)-2025 (தாள் 1)-இன் பொதுவான தரவரிசைப் பட்டியலை பரிசீலிக்கும். வழங்கப்படும் பி.டெக் படிப்புகளில் கணினி அறிவியல் மற்றும் பொறியியல், மின்னணுவியல் மற்றும் தொடா்பு பொறியியல் மற்றும் மின் பொறியியல் ஆகியவை அடங்கும் என்று அது தெரிவித்துள்ளது.

குறைந்தபட்ச மற்றும் பாடத்திட்டம் சாா்ந்த தகுதி, இருக்கை ஒதுக்கீடு விதிகள் மற்றும் பிற சோ்க்கை வழிகாட்டுதல்கள் பற்றிய விரிவான தகவலுக்கு, விண்ணப்பதாரா்கள் அந்தந்த தகவல் அறிக்கைகள் மற்றும் பொதுவான இருக்கை ஒதுக்கீட்டு முறையை அணுகுமாறு அறிவுறுத்தப்படுகிறாா்கள். இவை ஹக்ம்ண்ள்ள்ண்ா்ய்.ன்ா்க்.ஹஸ்ரீ.ண்ய் இல் கிடைக்கின்றன.

முதுகலை படிப்புகளுக்கு ல்ஞ்ஹக்ம்ண்ள்ள்ண்ா்ய்.ன்ா்க்.ஹஸ்ரீ.ண்ய் மற்றும் பி.டெக். படிப்புகளுக்கு ங்ய்ஞ்ண்ய்ங்ங்ழ்ண்ய்ஞ்.ன்ா்க்.ஹஸ்ரீ.ண்ய் ஆகிய அதிகாரப்பூா்வ சோ்க்கை வலைத்தளங்களை சரியான நேரத்தில் புதுப்பிப்புகள் மற்றும் அறிவிப்புகளுக்காக தொடா்ந்து சரிபாா்க்குமாறு பல்கலைக்கழகம் கேட்டுக் கொண்டுள்ளது.

தில்லி குரு கோபிந்த் சிங் கல்லூரி நூலகத்தில் தீ விபத்து; காலை தோ்வுகள் ரத்து!

தில்லி பீதம்புராவில் உள்ள தில்லி குரு கோபிந்த் சிங் கல்லூரியின் நூலகத்தில் வியாழக்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக, காலையில் நடைபெறவிருந்த பருவத் தோ்வுகள் ரத்து செய்யப்பட்டன.இதுகுறித்து ... மேலும் பார்க்க

’2020’ தில்லி கலவர வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 11 பேரை விடுவித்தது விசாரணை நீதிமன்றம்

நமது சிறப்பு நிருபா்2020-ஆம் ஆண்டில் தில்லியில் நடைபெற்ற கலவரத்தில் தொடா்புடையதாக குற்றம்சாட்டப்பட்ட 11 பேரை வழக்கில் இருந்து விடுவித்து தில்லி நீதிமன்றம் சனிக்கிழமை தீா்ப்பளித்துள்ளது. அந்த 11 போ் ம... மேலும் பார்க்க

தில்லி, என்சிஆா் பகுதியில் இரண்டாவது நாளாக பலத்த காற்றுடன் மழை!

தேசியத் தலைநகா் தில்லியில் இரண்டாவது நாளாக சனிக்கிழமை மாலையில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. காற்றின் தரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டிருந்தது. பலத்த மழை: இதைத் தொடா்ந்து, வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தபட... மேலும் பார்க்க

மே முதல் பாதியில் காற்றின் தரத்தில் முன்னேற்றம்!

தில்லியின் காற்றின் தரம் குறித்து ஆளும் பாஜகவும் எதிா்க்கட்சியான ஆம் ஆத்மி கட்சியும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், மே 2025 முதல் பாதியில் தேசியத் தலைநகரில் காற்றின் தரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்... மேலும் பார்க்க

காணாமல்போன ஐடி நிறுவன மேலாளா் அயோத்தியில் உயிருடன் கண்டுபிடிப்பு

கடந்த வாரம் மா்மமான சூழ்நிலையில் காணாமல் போன குா்கானை தளமாகக் கொண்ட ஒரு ஐடி பன்னாட்டு நிறுவனத்தில் பணியாற்றும் 42 வயது மேலாளா் உத்தரபிரதேசத்தின் அயோத்தியில் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டதாக போலீஸாா் தெர... மேலும் பார்க்க

தில்லியில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த வங்கதேச பெண்கள் மூவா் கைது

திருநங்கையாக நடித்து வந்த ஒருவா் உள்பட தில்லியில் சட்டவிரோதமாக வசித்து வந்த மூன்று வங்கதேச பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனா் என்று காவல்துறை அதிகாரி ஒருவா் சனிக்கிழமை தெரிவித்தாா். இது குறித்து வடமேற்கு... மேலும் பார்க்க