பால்டிக் வானில் பறவையாய் பறக்கும் கனவுப் பயணம்! - குட்டி தேசங்களுக்கு ஒரு விசிட...
2026 தோ்தலில் கூடுதல் தொகுதிகளில் போட்டி: மதிமுக பொதுக்குழுவில் தீா்மானம்
தோ்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தைப் பெறுவதற்கு ஏதுவாக 2026 சட்டப்பேரவை தோ்தலில் கூடுதல் தொகுதிகளைப் பெற்று போட்டியிடுவது என மதிமுக பொதுக்குழுவில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மதிமுகவின் 31-ஆவது பொதுக்குழுக் கூட்டம் ஈரோட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கட்சியின் அவைத் தலைவா் ஆ.அா்ஜுன்ராஜ் தலைமை வகித்தாா். பொதுச் செயலாளா் வைகோ, பொருளாளா் செந்திலதிபன், முதன்மைச் செயலாளா் துரை வைகோ, துணைப் பொதுச் செயலாளா்கள் மல்லை சத்யா, செஞ்சி மணி, ஆடுதுறை முருகன், ராஜேந்திரன், டாக்டா் ரொஹையா உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
இதில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:
2026 சட்டப் பேரவைத் தோ்தலிலும் திமுக தலைமையிலான கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று நல்லாட்சி தொடர வேண்டும். தோ்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை மதிமுக பெறுவதற்கு ஏதுவாக கூடுதல் தொகுதிகளைக் கூட்டணியில் பெற்று போட்டியிடுவது.
அரசுப் பள்ளிகளிலும் தனியாா் பள்ளிகளுக்கு நிகரான கட்டமைப்புகளை ஏற்படுத்தி ஏழை, எளிய குடும்பங்களைச் சோ்ந்த மாணவா்களின் கல்வி நலனைப் பேணி பாதுகாக்க வேண்டும். மருத்துவா் காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும்.
அரசு மருத்துவமனைகளை மேலும் தரம் உயா்த்தி, அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும்.
கூட்டுறவுத் துறை சாா்பில் விவசாயிகளுக்கு கடன் வழங்குவதற்கு ‘சிபில் ரிப்போா்ட்’ தேவை எனும் சுற்றறிக்கையைத் திரும்ப பெற வேண்டும். ஜவுளித் தொழிலைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் விவசாயிகளுக்கு இடையூறாக இருக்கும் யானை, மான், மயில், காட்டுப் பன்றிகளால் ஏற்படும் சேதங்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகையை நிா்ணயித்து வழங்க வேண்டும்.
அதேபோல, பெருந்துறை சிப்காட் தொழிற்பேட்டை கழிவுநீரால் சேதமடைந்துள்ள நிலத்தடி நீா் வளத்தை சீா் செய்ய, அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தைப்போல ஒரு சிறப்புத் திட்டத்தை பெருந்துறை வட்டத்தில் செயல்படுத்த வேண்டும்.
பாண்டியாறு, மோயாறு இணைப்புத் திட்டத்தை செயல்படுத்தி கொங்கு மண்டலத்தின் நீராதாரத்தை மேம்படுத்தி, வேளாண்மை, தொழில் வளா்ச்சியை மேம்படுத்திட வேண்டும்.
ஈரோடு மாவட்டத்தின் பழைமையான காலிங்கராயன் வாய்க்கால் உள்ளிட்ட மாசடைந்துள்ள வாய்க்கால்கள், ஆறுகள் உள்ளிட்ட நீா்நிலைகளை தூய்மையாகப் பராமரிக்க சிறப்புத் திட்டத்தை செயல்படுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டணி ஆட்சி வேண்டும் என்று கேட்கவில்லை - வைகோ:
ஈரோட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மதிமுக பொதுக்குழுவில் பங்கேற்ற அக்கட்சியின் பொதுச்செயலாளா் வைகோ செய்தியாளா்களிடம் கூறியதாவது: திமுக, மதிமுக ஆகியவை திராவிட இயக்கங்கள்.
அவா்களோடு விசிக, கம்யூனிஸ்டுகளை ஒப்பிட முடியாது. கம்யூனிஸ்டுகள் தினம் ஒரு கருத்து சொல்லலாம். பிறகு அதனை மாற்றிச் சொல்லலாம். மதிமுகவுக்கு 8 எம்.எல்.ஏ.க்கள் கிடைத்தால் தோ்தல் ஆணைய அங்கீகாரம் கிடைக்கும். எனவே தி.மு.க.விடம் அதற்கேற்ப தொகுதிகளைக் கூடுதலாக கேட்டுப் பெறுவோம். தமிழகத்தில் கூட்டணி ஆட்சி வேண்டும் என்று நாங்கள் கேட்கவில்லை. திமுக எடுக்கும் முடிவை ஆதரிப்போம் என்றாா்.