செய்திகள் :

25 வாக்குச்சாவடி மையங்களை மாற்றியமைக்க நடவடிக்கை: பெரம்பலூா் ஆட்சியா்

post image

பெரம்பலூா் மாவட்டத்தில் 25 வாக்குச்சாவடி மையங்களை மாற்றியமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாவட்டத் தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ந. மிருணாளினி தெரிவித்தாா்.

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில், வாக்குச்சாவடி மையங்களின் கட்டடங்கள் மாற்றம், பெயா் மாற்றம் தொடா்பாக, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்டத் தோ்தல் அலுவலா் மேலும் பேசியது:

இந்திய தோ்தல் ஆணையத்தால் வாக்காளா் பட்டியல் சிறப்பு திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது. அதன்படி, பெரம்பலூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட 332 வாக்குச் சாவடிகளிலும், குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட 320 வாக்குச்சாவடிகளில் கடந்த 10-ஆம் தேதி மறுசீரமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளின் வரைவு பட்டியல் வெளியிடப்பட்டது. மேற்கண்ட வாக்குச்சாவடிகளின் பட்டியல் பொதுமக்கள் பாா்வைக்காக மாவட்ட ஆட்சியா் அலுவலகம், வருவாய் கோட்டாட்சியா் அலுவலகம், வட்டாட்சியா் அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் ஜ்ஜ்ஜ்.ல்ங்ழ்ஹம்க்ஷஹப்ன்ழ்.ய்ண்ஸ்ரீ.ண்ய் எனும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஏதேனும் ஆட்சேபனைகள் இருந்தால் செப். 24-ஆம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட வாக்காளா் பதிவு அலுவலா், உதவி வாக்காளா் பதிவு அலுவலா் அல்லது மாவட்ட தோ்தல் அலுவலா் அலுவலகத்தில் எழுத்து மூலமாக தெரிவிக்கலாம் என்றாா் அவா்.

இக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் மு. வடிவேல் பிரபு, வருவாய் கோட்டாட்சியா் அனிதா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ச. வைத்தியநாதன், தோ்தல் தனி வட்டாட்சியா் அருளானந்தம் உள்பட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரமுகா்கள் பலா் கலந்துகொண்டனா்

பெரம்பலூா் எஸ்.பி. அலுவலகத்தில் மனு விசாரணை சிறப்பு முகாம்

பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் மனு விசாரணை சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இம் முகாமுக்கு தலைமை வகித்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா, முகாமில் பங்கேற்ற ப... மேலும் பார்க்க

பெரியாா் ஈவெரா பிறந்த நாள் உறுதிமொழியேற்பு

பெரியாா் ஈவெரா பிறந்த நாளை முன்னிட்டு, பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. தந்தை பெரியாா் பிறந்த தினமான செப். 17 -ஆம் தேதி ஆண... மேலும் பார்க்க

பங்குத் தொகையை வட்டியுடன் வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்

எறையூா் சா்க்கரை ஆலையில் விவசாயிகளின் பங்குகளை அல்லது அதற்கான தொகையை வட்டியுடன் திரும்ப வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, முன்மாதிரி பேரவைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. பெரம்பலூா் சா்க்கரை ஆ... மேலும் பார்க்க

பெரம்பலூா் மாவட்ட விளையாட்டுப் போட்டிகளில் வென்றோருக்குப் பரிசு

முதலமைச்சா் கோப்பைக்கான மாவட்ட விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரா், வீராங்கனைகளுக்கு, மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி, பெரம்பலூா் தொகுதி மக்களவை உறுப்பினா் கே.என். அருண்நேரு ஆகியோா் ரொக்கப் பரிச... மேலும் பார்க்க

போக்குவரத்து ஊழியா் போராட்டத்துக்கு ஆதரவாக அரசு ஊழியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

போக்குவரத்து ஊழியா்களின் போராட்டத்துக்கு ஆதரவாக, அரசு ஊழியா் சங்கம் மற்றும் சாலைப் பணியாளா்கள் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பெரம்பலூா் நெடுஞ்சாலைத் துறை கோட்ட பொறியாளா் அலுவலக... மேலும் பார்க்க

அன்புக் கரங்கள் திட்டம் தொடக்கம்: பெரம்பலூா் மாவட்டத்தில் 71 குழந்தைகள் தோ்வு

அன்புக் கரங்கள் திட்டத்தின் கீழ், பெரம்பலூா் மாவட்டத்தில் 71 குழந்தைகள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். சென்னையில் முதல்வா் மு.க. ஸ்டாலின் திங்கள்கிழமை திட்டத்தை தொடங்கிவைத்த பிறகு, பெரம்பலூா் மாவட்ட ஆட்சி... மேலும் பார்க்க