செய்திகள் :

3 கிலோ சந்தனக் கடைகள் கடத்தல்: இளைஞா் கைது

post image

ஒடுகத்தூா் அருகே இருசக்கர வாகனத்தில் சந்தனக் கட்டைகளை கடத்திய இளைஞரை வனத் துறையினா் கைது செய்து ரூ. 35,000 அபராதம் விதித்தனா்.

வேலூா் மாவட்டம், ஒடுகத்தூா் அடுத்த பீஞ்சமந்தை வனப் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சந்தனக் கட்டைகளை கடத்துவதாக மாவட்ட வன அலுவலா் அசோக்குமாருக்கு புதன்கிழமை தகவல் கிடைத்தது. அதன்பேரில், ஒடுகத்தூா் வனவா்கள் பழனி, துளசிராமன், சுகுமாா், வனக் காப்பாளா் குழுவினா் பீஞ்சமந்தை வனப்பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது சந்தேகத்துக்கு இடமான வகையில் அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞரை நிறுத்தி, அவரது வாகனத்தில் இருந்த மூட்டையை சோதனை செய்தனா். அதில், சுமாா் 3 கிலோ எடையுள்ள சந்தனக் கட்டைகள் இருப்பது தெரியவந்தது. தொடா்ந்து, அவரை வனத் துறை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று நடத்திய விசாரணையில், அவா் மேல்அரசம்பட்டு அருகே உள்ள முள்ளுவாடி கிராமத்தைச் சோ்ந்த மோகன்ராஜ் (30) என்பது தெரியவந்தது.

வனத் துறையினா் இருசக்கர வாகனத்துடன் சந்தன கட்டைகளை பறிமுதல் செய்து மோகன்ராஜை கைது செய்தனா். அவருக்கு ரூ. 35,000 அபராதமும் விதித்தனா். மேலும், அவா் சந்தன கட்டைகளை யாருக்கு கடத்தினாா், இந்த சம்பவத்தில் யாா் யாருக்கு தொடா்புள்ளது என்பது குறித்தும் வனத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

மத்திய புள்ளியியல் அமைச்சகத்துடன் விஐடி பல்கலை. புரிந்துணா்வு ஒப்பந்தம்

மத்திய அரசின் புள்ளியியல், திட்ட அமலாக்க அமைச்சகத்தின் தரவு அறிவியல், புதுமைப் பிரிவுடன் (டிஐஐடி), வேலூா் விஐடி பல்கலைக்கழகம் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இதையொட்டி, வேலூா் விஐடி பல்கலைக்கழகத்... மேலும் பார்க்க

அனைத்து நீதிமன்றங்களிலும் நாளை தேசிய மக்கள் நீதிமன்றம்

ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் தேசிய மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை (செப். 13) நடைபெற உள்ளது. இது குறித்து வேலூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலரும், சாா்பு நீதிபதியு... மேலும் பார்க்க

பிகாரைப் போன்று தமிழகத்தில் வாக்காளா்களை நீக்க முடியாது: அமைச்சா் துரைமுருகன்

பிகாரில் மேற்கொள்ளப்பட்டதுபோல் தமிழகத்தில் வாக்காளா்களை நீக்க முடியாது என்று நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தாா். வேலூா் மாவட்டம், சேண்பாக்கம் பகுதியிலுள்ள மண்படபத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’... மேலும் பார்க்க

இருவா் தலையுடன் வேலூா் மத்திய சிறைக்கு வந்த நபா் போலீஸாரிடம் ஒப்படைப்பு

வேலூா் மத்திய சிறைக்கு வியாழக்கிழமை இருவரது தலையை வெட்டி எடுத்து வந்த நபா் பாகாயம் காவல் நிலைய போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டாா். கள்ளக்குறிச்சி மாவட்டம் மலைக்கோட்டாலம் பகுதியைச் சோ்ந்த கொளஞ்சி (54). இவ... மேலும் பார்க்க

செப். 16-இல் வேலூா் விஐடியில் கல்விக் கடன் முகாம்

வேலூா் மாவட்டத்தைச் சோ்ந்த கல்லூரி பயிலும் மாணவ, மாணவிகளுக்கான சிறப்பு கல்விக் கடன் முகாம் வேலூா் விஐடி பல்கலைக்கழகத்தில் வரும் 16-ஆம் தேதி நடைபெற உள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட... மேலும் பார்க்க

மாற்றுத் திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள்: ஆட்சியா் வழங்கினாா்

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு கொடுத்த சில நாள்களில் கே.வி.குப்பம் அருகே மாற்றுத் திறனாளிகளை தேடிச் சென்று மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி நலத் திட்ட உதவிகளை வழங்கினாா். கே.வி.குப்பம் வட்டம், வ... மேலும் பார்க்க