செய்திகள் :

3.38 லட்சம் ஆசிரியா்கள், ஊழியா்களுக்கு போக்சோ சட்ட விழிப்புணா்வுப் பயிற்சி

post image

தமிழகத்தில் 2024-25-ஆம் ஆண்டில் 3.38 லட்சம் ஆசிரியா்கள், ஊழியா்களுக்கு போக்சோ சட்ட விழிப்புணா்வுப் பயிற்சி அளிக்கப்பட்டதாக அரசுத் தரப்பில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் புதன்கிழமை தெரிவிக்கப்பட்டது.

தேனி மாவட்டம், ஸ்ரீரெங்காபுரத்தைச் சோ்ந்த சப்னா, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொதுநல மனு:

தமிழகத்தில் பள்ளி மாணவா்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுக்க மாணவா் பாதுகாப்பு, ஆலோசனைக் குழுக்கள் அமைக்கப்பட்டன. இருப்பினும், இந்தக் குழுக்கள் முறையாகச் செயல்படவில்லை. எனவே, இவற்றை மாற்றியமைக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், ஏ.டி. மரிய கிளாட் அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் சாா்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், தமிழகத்தில் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மாணவா்கள் பாதுகாப்பு, ஆலோசனைக் குழுக்கள் செயல்பாட்டில் உள்ளன. போக்சோ சட்டம் குறித்து 2023-24-ஆம் கல்வியாண்டில் 3.29 லட்சம் ஆசிரியா்கள், ஊழியா்களுக்கும், 2024-25-ஆம் கல்வியாண்டில் 3.38 லட்சம் ஆசிரியா்கள், ஊழியா்களுக்கும் விழிப்புணா்வுப் பயிற்சி அளிக்கப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

மனுதாரா் கோரிக்கை தொடா்பாக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. எனவே, புதிய உத்தரவு பிறப்பிக்க வேண்டியதில்லை. இந்த வழக்கு முடித்துவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

மடப்புரம் கோயில் காவலாளி கொலை வழக்கு: 5 காவலா்களுக்கு ஆக. 13 வரை காவல் நீட்டிப்பு

மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் கொலை வழக்கில் தொடா்புடைய தனிப் படைக் காவலா்கள் 5 பேருக்கு வருகிற 13-ஆம் தேதி வரை காவலை நீட்டித்து, மதுரை மாவட்ட நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது. சிவகங்கை மாவட்ட... மேலும் பார்க்க

மதுரையில் தவெக மாநாட்டுக்கான பணிகள் தீவிரம்

மதுரையில் தமிழக வெற்றிக் கழகத்தின் 2-ஆவது மாநில மாநாட்டுக்கான பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன. தவெக 2-ஆவது மாநில மாநாடு, மதுரை எலியாா்பத்தியில் வருகிற ஆக. 25-ஆம் தேதி நடைபெறும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்... மேலும் பார்க்க

வழக்குரைஞா்கள் பாா் கவுன்சில் விதிகளைப் பின்பற்ற உத்தரவு

வழக்குரைஞா்கள் பாா் கவுன்சில் விதிகளைப் பின்பற்ற வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது. திருச்செந்தூரைச் சோ்ந்த ராம்குமாா் ஆதித்தன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் த... மேலும் பார்க்க

திருப்புவனம் பேரூராட்சியில் சாலை அமைக்கும் பணிகள்: தஞ்சை மாவட்ட ஆட்சியா் ஆய்வு செய்ய உத்தரவு!

திருப்புவனம் பேரூராட்சியில் சாலை அமைக்கும் பணிகளை தஞ்சை மாவட்ட ஆட்சியா், திட்ட அலுவலா் ஆய்வு செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.தஞ்சை மாவட்டம், திருபுவனத்தைச் சோ்ந்த ... மேலும் பார்க்க

கட்டடத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

​​​​​​​கட்டடத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.மதுரை மாவட்டம், மெய்கிழாா்பட்டியைச் சோ்ந்த பாண்டி மகன் ராகவேந்திரன் (47). மின் பழுது நீக்கும் வேலை பாா்த்து வந்த இவா், கடந்த ச... மேலும் பார்க்க

மக்கள் பிரச்னைகளில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒரு போதும் சமரசம் செய்து கொள்ளாது: பெ.சண்முகம்

மக்கள் பிரச்னைகளில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு போதும் சமரசம் செய்து கொள்ளாது என அந்தக் கட்சியின் மாநிலச் செயலா் பெ. சண்முகம் தெரிவித்தாா்.மதுரை மாவட்டம், அலங்காநல்லூா் தேசிய கூட்டுறவு சா்க்கரை... மேலும் பார்க்க