செய்திகள் :

3.6 கோடி சொத்துக்காக சண்டையிட்ட பிள்ளைகள்! கடைசியாக தெரிய வந்த உண்மை!!

post image

சீனாவில், தந்தைக்குச் சொந்தமான ரூ.3.6 கோடி மதிப்புள்ள சொத்துகளுக்கு அண்ணன், தங்களை சண்டையிட்டுக் கொண்ட நிலையில், இருவருமே தத்துப் பிள்ளைகள் என்பது தெரிந்து அதிர்ச்சியடைந்தனர்.

சீனாவின் தியான்ஜின் நகரைச் சேர்ந்த சன் என்பவர் கடந்த மார்ச் மாதம் உயிரிழந்தார். அவர் இறப்பதற்கு முன்பு, தன்னுடைய சொத்துகளை மகன் பெயரில் எழுதிவைத்துவிட்டு, குறிப்பிட்ட சொத்துகளை மகளுக்கு அளிக்குமாறு அறிவுறுத்தியிருந்தார்.

ஆனால், அதனை அப்பெண் ஏற்காமல் நீதிமன்றம் சென்றிருந்தார். இது குறித்து சன் மனைவி கூறுகையில், மகளை நாங்கள் தத்தெடுத்து வளர்த்து வந்தோம். ஆனால் சொந்த மகளைப் போலவே வளர்த்து வந்தோம். எங்களது இறுதிக் காலத்தில் மகன்தான் எங்களைப் பார்த்துக் கொண்டார். அதனால் வீட்டை அவனுக்குக் கொடுத்து விட்டோம். அதற்கு மாற்றாக தங்கைக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினோம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், சொத்துகளை பெயர் மாற்றும் ஆவணங்களில் தந்தையின் கையெழுத்து மட்டும்தான் இருக்கிறது. அதனால், தாயின் பங்கை தனக்கு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இருவரும் நீதிமன்றம் சென்றனர்.

அப்போது, நீதிமன்றத்தில், சகோதரனை தத்தெடுத்து வளர்த்ததற்கான சான்றிதழ்களை தங்கை தாக்கல் செய்தார். இதைக் கேட்டதும், சகோதரன் நீதிமன்றத்திலேயே கதறி அழுதார். இந்த நிலையில், அப்பெண்ணையும் நாங்கள் தத்தெடுத்துதான் வளர்த்தோம் என்ற உண்மையை தாய் சொல்ல, அப்போதுதான் உண்மை வெளிச்சத்துக்கு வந்தது. சொத்துக்காக சண்டையிடும் இருவருமே அவர்களுக்குப் பிறந்த பிள்ளைகள் இல்லை என்பது.

மேலும், பெற்றோரிடமிருந்து அப்பெண் பல ஆண்டுகளுக்கு முன்பே பிரிந்து சென்றுவிட்டதையும், மகன்தான் பெற்றோரை கடைசி காலம் வரை பார்த்துக் கொள்வதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சொத்துகளை மகனே வைத்துக் கொள்ளவும், அதற்குரிய இழப்பீட்டைக் குறிப்பிட்டு, தங்கைக்கு சகோதரன் தர வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இது குறித்த செய்திகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பலரும் சொத்து கிடைத்துவிட்டது. நீங்கள் பிள்ளைகள் இல்லை என்பது தெரிந்துவிட்டது என்றும், பெண்ணுக்கு தத்தெடுத்து வளர்த்ததைச் சொன்ன பெற்றோர், பிள்ளையிடம் சொல்லவில்லையே என்று விமர்சனம் செய்திருக்கிறார்கள்.

பெலாரஸில் ‘ஆரெஷ்னிக்’ ஏவுகணை: புதின்

ஒலியைப் போல் 10 மடங்கு வேகத்தில பாயக்கூடிய தங்களின் புதிய வகை ஏவுகணையான ‘ஆரெஷ்னிக்’, அண்டை நாடான பெலாரஸில் நிலைநிறுத்தப்படும் என்று ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் கூறியுள்ளாா்.ரஷியா வந்துள்ள பெலாரஸ் அத... மேலும் பார்க்க

இந்தியா மீதான 25% வரி ஆக.7 முதல் அமல்: எந்தெந்த நாடுகளுக்கு எவ்வளவு வரி?

‘இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகள் மீது அமெரிக்கா விதித்துள்ள புதிய வரி விதிப்பு வரும் ஆகஸ்ட் 7-ஆம் தேதிமுதல் நடைமுறைக்கு வரும்’ என்று அமெரிக்க அதிபரின் அலுவலகமான வெள்ளை மாளிகை வியாழக்கிழமை அறிவிப்... மேலும் பார்க்க

காஸாவில் அமெரிக்க தூதா் சுற்றுப் பயணம்

இஸ்ரேலின் முற்றுகையால் காஸாவில் ஏற்பட்டுள்ள பஞ்சம் மற்றும் உணவு விநியோக மையங்களில் ஏற்படும் உயிரிழப்புகளால் சா்வதேச அளவில் கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில், அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் சிறப்பு ... மேலும் பார்க்க

டிரம்ப்புக்கு நோபல் பரிசு: வெள்ளை மாளிகை வலியுறுத்தல்

அமைதிக்கான நோபல் பரிசு அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்புக்கு வழங்கப்பட வேண்டும் என்று அவரின் வெள்ளை மாளிகை வலியுறுத்தியுள்ளது.இது குறித்து அதன் செய்தித் தொடா்பாளா் கரோலின் லீவிட் (படம்) கூறியதாவது:இந... மேலும் பார்க்க

அயா்லாந்தில் இனவெறி தாக்குதல்கள்: இந்தியா்களுக்கு தூதரகம் அறிவுறுத்தல்

அயா்லாந்தில் இனவெறி தாக்குதல் அதிகரித்துவரும் நிலையில், அந்நாட்டில் வாழும் இந்தியா்கள் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையுடன் செயல்பட இந்தியத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.அயா்லாந்து தலைநகா் டப்லின் மற்றும் பி... மேலும் பார்க்க

மருந்துகளின் விலைகளைக் குறைக்க 17 மருந்து நிறுவனங்களுக்கு டிரம்ப் அழுத்தம்!

உலக நாடுகளில் விற்பனையாகும் மருந்துகளின் விலைக்கு ஏற்ப, அமெரிக்காவிலும் மருந்துகளின் விலைகளைக் குறைக்குமாறு 17 மருந்து உற்பத்தி நிறுவனங்களுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அழுத்தம் கொடுத்துள்ளார்... மேலும் பார்க்க