செய்திகள் :

35 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களுக்கு 5.9 லட்சம் பேர் விண்ணப்பம்!

post image

மேற்கு வங்கத்தில் ஆசிரியர் பணிக்கு 5.9 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக அம்மாநில பள்ளிக் கல்வி சேவை ஆணையம் அறிவித்துள்ளது.

கடந்த 2016 உடன் ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை இரு மடங்காகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் 2016ஆம் ஆண்டு ஆசிரியர் பணியிடங்களை நிறப்புவதற்காக நடைபெற்ற தகுதித் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறி, அந்த நியமனங்களை செல்லாது என உச்சநீதிமன்றம் அறிவித்தது.

இந்த உத்தரவைத் தொடர்ந்து மேற்கு வங்க பள்ளிக் கல்வி சேவை ஆணையம் சார்பில் பணியமர்த்தப்பட்டவர்கள் திரும்பப் பெறப்பட்டனர். இதனை அடுத்து மாநில பள்ளிக் கல்வி சேவை ஆணையம் சார்பில் தற்போது ஆசிரியர் பணிக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.

பேசிய பள்ளிக் கல்வி சேவை ஆணையத்தின் மூத்த அதிகாரி ஒருவர் இது குறித்து கூறியதாவது,

அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 35,726 உதவி ஆசிரியர் பணியிடங்களுக்கு 5.9 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். 2016ஆம் ஆண்டு 3.16 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர்.

உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி, ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான தளம் அறிமுகம் செய்யப்பட்டது. விண்ணப்பிக்க ஜூலை 21 வரை அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. இந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதிக்குள் மாநில அரசும் பள்ளிக் கல்வி சேவை ஆணையமும் ஆசிரியர் பணியிடங்களை முழுவதுமாக நிரப்ப இலக்கு நிர்ணயித்துள்ளது எனக் குறிப்பிட்டார்.

இதையும் படிக்க |11,000 யூடியூப் சேனல்களை நீக்கியது கூகுள்! காரணம் என்ன?

5.9 lakh candidates apply for teaching jobs in Bengal schools in SSC's fresh recruitment drive

பாபநாசம் பட பாணியில் மகாராஷ்டிரத்தில் நடந்த கொலை! காட்டிக் கொடுத்த டைல்ஸ்!

பாபாநாசம் படத்தில், இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டு, யாருக்கும் தெரியாமல் பூமிக்கு அடியில் புதைக்கப்படும் சம்பவத்தையே விஞ்சும் வகையில், மகாராஷ்டிரத்தில், தனது கணவரைக் கொன்று வீட்டுக்குள் குழிதோண்டி பு... மேலும் பார்க்க

ரூ.29 லட்சம் வரி! தெருவோர வியாபாரிகளுக்கு வந்த ஜிஎஸ்டி நோட்டீஸ்!

கர்நாடக மாநிலம் பெங்களூரில், சாலையோர காய்கறி மற்றும் பழ வியாபாரிகள் பலருக்கும் ஜிஎஸ்டி வரி செலுத்துமாறு வருமான வரிதுறையிடமிருந்த வந்திருக்கும் நோட்டீஸ் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.ஆண்டு மு... மேலும் பார்க்க

எலான் மஸ்க்கின் இரும்புக் குதிரை ‘டெஸ்லா மாடல் ஒய்’.! வாங்கலாமா? வேண்டாமா?!

அமெரிக்காவின் முன்னணி மின்சார கார் நிறுவனமான டெஸ்லாவின் முதல் விற்பனையகம் மும்பையில் கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) திறக்கப்பட்டது. டெஸ்லா மாடல் ஒய் காரின் சிறப்பம்சங்கள், விலை குறித்து இங்கு ப... மேலும் பார்க்க

பெண் கடத்தல் வழக்கில் கைதான பாஜக எம்பி மகன்.. அரசு உதவி தலைமை வழக்கறிஞராக நியமனம்!

ஹரியாணாவில் இளம்பெண்ணை கடத்த முயன்ற வழக்கில் கைதான பாஜக முன்னாள் தலைவரின் மகன், அரசு உதவி தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட்டுள்ளார்.சண்டீகரில் கடந்த 2017 ஆம் ஆண்டு முன்னாள் மூத்த ஐஏஎஸ் அதிகாரியின் மகள் ... மேலும் பார்க்க

நாடாளுமன்றம் 3-வது நாளாக முடங்கியது! எதிர்க்கட்சிகள் அமளியால் ஒத்திவைப்பு!

நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் எதிர்க்கட்சியினர் அமளியால் மூன்றாவது நாளாக முடங்கியுள்ளது.மழைக்கால கூட்டத்தொடர் இரு அவைகளிலும் திங்கள்கிழமை காலை தொடங்கியது. பிகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம், ... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தில் ராகுல் தலைமையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டம்!

பிகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் 2-வது நாளாக போராட்டம் நடத்தினர்.நிகழாண்டு நடைபெறும் பிகார் பேரவைத் தேர்தலை முன்னிட்டு, 22 ஆ... மேலும் பார்க்க