செய்திகள் :

35 ஆண்டுகள் பழையது..! டியூக்ஸ் பந்து விவகாரத்தில் இந்திய அணி அதிருப்தி!

post image

இங்கிலாந்தில் நடந்து வரும் டெஸ்ட் தொடரின் போது பந்து மாற்ற நெறிமுறைகளில் இந்திய அணி நிர்வாகம் அதிருப்தி அடைந்துள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததற்கு பழைய பந்து பயன்படுத்தப்பட்டதாகவும் சர்ச்சைகள் எழுந்திருக்கின்றன.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ‘ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபி’ தொடரில் விளையாடி வருகிறது. 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலை வகிக்கும் நிலையில், கடைசியாக நடைபெற்ற 4-வது டெஸ்ட் போட்டியை இந்திய அணி போராடி டிரா செய்தது.

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது போட்டியில் 193 ரன்கள் இலக்கை எட்டிப்பிடிக்க முடியாமல் 22 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

இந்தத் தொடரில் டியூக்ஸ் வகை பந்துகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அவ்வாறு பயன்படுத்தப்படும் டியூக்ஸ் பந்து அதன் வடிவமைப்பை சீக்கிரம் இழந்து விடுகிறது. இதுவே பல்வேறு சர்ச்சைகளை எழுப்பியிருக்கிறது.

லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் 80-வது ஓவருக்கு பிறகு புதிய பந்து எடுக்கப்பட்ட போதிலும் அதன் தன்மையும் விரைவாக மாறியது. இதனால், பந்தை மாற்றக்கோரி இந்திய அணியினர் அடிக்கடி நடுவரிடம் முறையிட்டனர்.

இதையடுத்து 90.4-வது ஓவரிலும், 98.4-வது ஓவரிலும் பந்து இரண்டு முறை மாற்றப்பட்டது. இது பல்வேறு சர்ச்சைகளை எழுப்பி நிலையில், பல முன்னாள் வீரர்களும் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

இதுகுறித்து இந்திய அணி நிர்வாகி ஒருவர் கூறுகையில், “இந்த டியூக்ஸ் வகை பந்துகள் 10 ஓவர்களிலேயே அதன் வடிவம் மாறி, 30 முதல் 35 ஆண்டுகள் பழைமையான பந்து போன்று மாறிவிடுகிறது. நடுவர்கள் பந்து வளையங்கள் வைத்து ஆய்வு செய்தாலும், அது முறையாக இல்லை.

10 ஓவர்கள் முடிந்த பின்னர் 30 ஓவர்கள் பழைமையான பந்தே கொடுக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார். மேலும், ஐசிசியின் பந்தை மாற்றும் நெறிமுறைகளில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதாகவும் புகார்கள் எழுந்தன.

இந்த விவகாரம் குறித்து ஐசிசி அதிகாரி ஒருவர் கூறுகையில், “நீங்கள் பந்தை மாற்றும் போது அது எத்தனை ஓவர் விளையாடிய பந்து என்பதைக் குறிப்பிட்டிருக்க வேண்டும். அவ்வாறு நீங்கள் தெரிவித்திருந்தால் 10 ஓவர்கள் விளையாடிய பந்தையே கொடுத்திருப்போம். இந்த விவகாரத்தில் ஐசிசி தலையிட்டு விதிகளை மாற்றியமைக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

India Given '30-35 Years Old Ball' At Lord's, Huge Controversy Triggered

இதையும் படிக்க :தொடரை டிரா செய்யும் முனைப்பில் இந்தியா- இன்று கடைசி டெஸ்ட் தொடக்கம்

டெவான் கான்வே, டேரில் மிட்செல் அரைசதம்; 2-வது இன்னிங்ஸில் ஜிம்பாப்வே தடுமாற்றம்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 307 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.நியூசிலாந்து மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி குயின்ஸ் ஸ்போர்ட்... மேலும் பார்க்க

ஓவல் டெஸ்ட்டில் மழை குறுக்கீடு!

இந்தியா - இங்கிலாந்து இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி மழையால் தாமதமாகிறது.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஓவலில் இன்று (ஜூலை 31) தொடங்கியது. இந்தப் போ... மேலும் பார்க்க

டெஸ்ட் போட்டிகளில் வரலாறு படைத்த ஷுப்மன் கில்!

இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் டெஸ்ட் போட்டிகளில் வரலாறு படைத்துள்ளார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஓவலில் இன்று (ஜூலை 31) தொடங்கியது. இந்த... மேலும் பார்க்க

கடைசி டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் இந்தியா நிதானம்!

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்டில் இந்திய அணி அதன் முதல் இன்னிங்ஸில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஓவல... மேலும் பார்க்க

இந்திய அணியின் சிறந்த கேப்டன்களை வரிசைப்படுத்திய அம்பத்தி ராயுடு; முதலிடம் யாருக்கு?

இந்திய அணியின் சிறந்த கேப்டன்களை முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு வரிசைப்படுத்தியுள்ளார்.இந்திய அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸின் முன்னாள் வீரரான அம்பத்தி ராயுடு அண்மையில் கிரிக்கெட் தொடர்பான நிகழ்ச்ச... மேலும் பார்க்க

முதல் டெஸ்ட்: டெவான் கான்வே அரைசதம்; நியூசி. 174 ரன்கள் குவிப்பு!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் உணவு இடைவேளையின்போது, முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 3 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் எடுத்துள்ளது.நியூசிலாந்து மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையே... மேலும் பார்க்க