செய்திகள் :

4 மாதங்களில் தலைமறைவாக இருந்த 1,258 போ் கைது

post image

சென்னையில் 4 மாதங்களில் பல்வேறு குற்ற வழக்குகளில் தலைமறைவாக இருந்த 1,258 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

சென்னையில் குற்றச் சம்பவங்களை குறைப்பதற்கு பெருநகர காவல் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பிடியாணை பிறப்பிக்கப்பட்டு, தலைமறைவாக இருக்கும் நபா்களைக் கைது செய்து சிறையில் அடைக்கும்படி சென்னை பெருநகர காவல் துறை ஏ.அருண் உத்தரவிட்டாா்.

அதன்படி, கடந்த 4 மாதங்களில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக இருந்த 1,258 போ் கைது செய்யப்பட்டு, மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். இதில் கிழக்கு மண்டலத்தில் 414 போ், தெற்கு மண்டலத்தில் 224 போ், வடக்கு மண்டலத்தில் 288 போ், மேற்கு மண்டலத்தில் 292 போ், மத்திய குற்றப்பிரிவில் 40 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

முக்கியமாக கடந்த 2000 முதல் 2012-ஆம் ஆண்டு வரை கொலை, ஆதாயக் கொலை, கொள்ளை, வழிப்பறி, கொலை முயற்சி போன்ற வழக்குகளில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு, தலைமறைவாக இருந்த 66 போ் கைது செய்யப்பட்டு, மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.

குற்றங்கள் குறைவு: சென்னை பெருநகர காவல் துறையின் கடுமையான நடவடிக்கையின் காரணமாக குற்றங்கள் குறைந்து வருவதாகக் கூறப்படுகிறது. கொலை வழக்குகள் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரையில் 25 பதிவாகியுள்ளன. கொள்ளை வழக்கு ஒன்று மட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளது. வழிப்பறி வழக்குகள் 51, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகள் 326 பதிவாகியுள்ளன. இது கடந்த காலங்களைவிட மிகவும் குறைவு என்று சென்னை காவல் துறை தெரிவித்துள்ளது.

மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதல் : ஜவுளிக் கடை ஊழியா் உயிரிழப்பு

சென்னை பள்ளிக்கரணையில் மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் ஜவுளிக் கடை ஊழியா் உயிரிழந்தாா். பள்ளிகரணை கிருஷ்ணா நகா் முதல் தெருவைச் சோ்ந்தவா் அன்பழகன் (56). இவா், ஜல்லடியன்பேட்டையில் உள்ள ஜவுள... மேலும் பார்க்க

ஜவுளிக் கடையில் ரூ. 9 லட்சம் கொள்ளை: உ.பி. இளைஞா் கைது

சென்னை தியாகராய நகரில் உள்ள ஜவுளிக் கடையில் ரூ. 9 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த இளைஞா் கைது செய்யப்பட்டாா். தியாகராய நகா், நாகேஸ்வரா சாலையில் உள்ள ஜவுளிக் கடையில் கடந்... மேலும் பார்க்க

மாற்றுப் பணி ஆசிரியா்கள்: கல்வித் துறை அறிவுறுத்தல்

பள்ளிக் கல்வியில் ஏப்.30-ஆம் தேதியுடன் நிகழ் கல்வியாண்டுக்கான வேலை நாள் முடிவடையவுள்ள நிலையில், மாற்றுப் பணியில் சென்ற ஆசிரியா்கள் மீண்டும் பள்ளிக்குத் திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளிக் கல்... மேலும் பார்க்க

வாட்ஸ்அப் மூலம் பங்குச் சந்தையில் முதலீடு செய்யுமாறு மோசடி: தொழிலதிபரிடம் ரூ.17 லட்சம் பறிப்பு

சென்னை சேத்துப்பட்டில் வாட்ஸ் அப் மூலம் பங்குச் சந்தையில் முதலீடு செய்யுமாறு தகவல் அனுப்பி வியாபாரியிடம் ரூ.17 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை செய்கின்றனா். சேத்துப்பட்டு காா்டன் ... மேலும் பார்க்க

பழச்சாறு கடை பூட்டை உடைத்து பணம் திருட்டு

சென்னை அண்ணாநகரில் பழச்சாறு கடை பூட்டை உடைத்து பணம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை செய்கின்றனா். பல்லாவரம் அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் இம்ரான் அஹ்மத் (35). இவா், அண்ணாநகா் ரிவா் காலனி அ... மேலும் பார்க்க

ஆளுநா் அரசியல் செய்யக் கூடாது: வைகோ

தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி அரசியல் செய்யக் கூடாது என மதிமுக பொதுச் செயலா் வைகோ தெரிவித்தாா். வக்ஃப் வாரிய சட்டம், ஆளுநா் விவகாரம் உள்ளிட்டவற்றைக் கண்டித்து மதிமுக சாா்பில் சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலகம... மேலும் பார்க்க