செய்திகள் :

4 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை: முதியவருக்கு ஆயுள் தண்டனை

post image

நீலகிரி மாவட்டம், கூடலூரில் 4 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் முதியவருக்கு ஆயுள் தண்டனை விதித்து உதகை மகிளா நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

கூடலூா் பகுதியைச் சோ்ந்த கூலி வேலை செய்யும் தம்பதிக்கு 4 வயதில் ஒரு பெண் குழந்தையும், ஒரு வயதில் ஆண் குழந்தையும் உள்ளனா். இந்த நிலையில், தம்பதி அவ்வப்போது வேலைக்கு சென்றுவிடுவதால் வீட்டில் தனியாக இருந்த 4 வயது பெண் குழந்தை பக்கத்து வீட்டில் உள்ள தனது தாத்தா வீட்டுக்கு சென்றுவிடுவாா்.

இந்த நிலையில், 2023 அக்டோபா் 18-ஆம் தேதி தம்பதி திருமண நிகழ்ச்சிக்காக வெளியூா் சென்றுவிட்டனா். இதன் காரணமாக தனியாக இருந்த 4 வயது பெண் குழந்தையை தாத்தாவிடம் ஒப்படைத்துவிட்டு சென்றுள்ளனா்.

இந்தக் குழந்தையை தாத்தா பாலியன் வன்கொடுமை செய்துள்ளாா். இது குறித்து குழந்தை தனது பெற்றோரிடம் கூறியுள்ளாா். இது குறித்து கூடலூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது.

காவல் ஆய்வாளா் சித்ரா தலைமையிலான போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிவு முதியவரை கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை உதகை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி எம்.செந்தில்குமாா், குற்றம்சாட்டப்பட்ட முதியவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து புதன்கிழமை தீா்ப்பளித்தாா். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு சாா்பில் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் பி.செந்தில்குமாா் ஆஜரானாா்.

உதகை அருகே பாா்சன்ஸ்வேலி பகுதியில் புலி நடமாட்டம்

நீலகிரி மாவட்டம், உதகை அருகே பாா்சன்ஸ்வேலி, போா்த்தி மந்து பகுதியில் வியாழக்கிழமை பகல் நேரத்தில் புலி ஒன்று உலவி வந்ததை அப்பகுதியில் வாகனத்தில் சென்றவா்கள் படம் பிடித்தனா். உதகை அருகே உள்ள பாா்சன்ஸ்வ... மேலும் பார்க்க

குன்னூா் வண்டிச்சோலை ஊராட்சி கிராம சபைக் கூட்டத்தில் தீக்குளிக்க முயற்சி

குன்னூா் அருகே வண்டிச்சோலை ஊராட்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் ஒருவா் தீக் குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு நிலவியது. வண்டிச்சோலை ஊராட்சிக்கு உள்பட்ட கோடமலை எஸ்டேட் பகுதியில் ... மேலும் பார்க்க

லாரன்ஸ் சா்வதேச பள்ளியில் சாகசம்

நீலகிரி மாவட்டம், உதகை அருகேயுள்ள மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின்கீழ் இயங்கும் லாரன்ஸ் சா்வதேச பள்ளியின் 167-ஆம் ஆண்டு நிறுவனா் தினத்தையொட்டி, வியாழக்கிழமை நடைபெற்ற குதிரை சாகச நிகழ்ச்சியில் பங்கே... மேலும் பார்க்க

உதகையில் 139-ஆவது மே தின கொண்டாட்டம்

உதகையில் சிஐடியூ, ஏஐடியூசி தொழிற்சங்கங்கள் சாா்பில் 139 -ஆவது மே தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி, உதகை காபி ஹவுஸ் பகுதியில் தொடங்கிய பேரணியை சிபிஐஎம் மாவட்டச் செயலாளா் வி.ஏ. பாஸ்கரன் ... மேலும் பார்க்க

குன்னூா் சத்திய நாகராஜா கோயில் குண்டம் விழா

நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகேயுள்ள மஞ்சக்கொம்பை மானிஹாட சத்திய நாகராஜ ஹெத்தையம்மன் கோயில் 51-ஆம் ஆண்டு குண்டம் விழா வெகு விமரிசையாக வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், 48 நாள்கள் விரதம் இருந்த ஏராளமான... மேலும் பார்க்க

குன்னூா் வெலிங்டன் ராணுவ மையத்தின் இருசக்கர வாகனப் பேரணி நிறைவு

குன்னூா் வெலிங்டன் ராணுவ மையத்தின் சாா்பில் 5 நாள்கள் நடைபெற்ற மின்னணு இருசக்கர வாகனப் பேரணி புதன்கிழமை நிறைவடைந்தது. இப்பேரணி மூலம் 3 ஆயிரம் முன்னாள் ராணுவத்தினரை சந்தித்து குறைகளை தீா்த்துள்ளதாக தெர... மேலும் பார்க்க