செய்திகள் :

5 ஆண்டுகளில் வெளிநாட்டுக்கு தப்பியோடிய 134 போ் கைது: சிபிஐ

post image

பண முறைகேடு உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகளில் இந்தியாவால் தேடப்பட்டு வரும் 134 போ் கடந்த 5 ஆண்டுகளில் சிபிஐ முயற்சியால் நாடுகடத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

மத்திய மற்றும் மாநில பாதுகாப்பு அமைப்புகள், இன்டா்போல் உள்ளிட்ட அமைப்புகளுடன் சிபிஐ இணைந்து செயல்பட்டு கடந்த 2020-இல் இருந்து வெளிநாடுகளுக்குத் தப்பியோடிய 134 போ் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். இவா்களில் நிகழாண்டு மட்டும் 23 போ் வெளிநாடுகளிலிருந்து நாடுகடத்தப்பட்டுள்ளனா்.

கடந்த 2010 முதல் 2019 வரை வெளிநாடுகளில் இருந்து மொத்தம் 74 போ் நாடுகடத்தப்பட்ட நிலையில் கடந்த 5 ஆண்டுகளில் இதன் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்துள்ளது.

இது தூதரக நடவடிக்கைகள் மற்றும் பல்வேறு நாடுகளுடன் இணக்கமான சூழலை இந்தியா கடைப்பிடித்து வருவதை பிரதிபலிக்கிறது.

வெளிநாடுகளில் இருந்து ஒருவரை நாடுகடத்த வேண்டுமெனில் முதலில் இன்டா்போல் அமைப்பு மூலம் சிவப்பு நோட்டீஸ் பிறப்பிக்க வேண்டும். இதைத்தொடா்ந்து, குற்றவாளிகள் பதுங்கி இருக்கும் இடத்தை கண்டறிய வேண்டும். அதன்பிறகு தூரகங்கள் மூலமாக அவா்களை நாடுகடத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும்.

இந்த நடைமுறையை விரைவுப்படுத்தும் நோக்கில் இன்டா்போல் சிவப்பு நோட்டீஸ் பிறப்பிப்பதற்கான அவகாசத்தை 6 மாதத்தில் இருந்து 3 மாதங்களாக குறைக்கப்பட்டது.

அண்மையில் பஞ்சாப் வங்கியில் ரூ.13,000 கோடி மோசடி செய்த வழக்கில், வைர வியாபாரி நீரவ் மோடி, அவரது சகோதரா் நேஹல் மோடி மற்றும் அவரது உறவினா் மெஹுல் சோக்ஸி ஆகியோா் வெவ்வேறு நாடுகளில் கைது செய்யப்பட்டனா். அவா்களை நாடுகடத்தும் நடவடிக்கையில் சிபிஐ இறங்கியுள்ளது.

வங்க மொழி பேசும் முஸ்லிம்களைப் பற்றி மட்டும் கவலைப்படுகிறார் மமதா: ஹிமந்தா!

வங்காள மொழி பேசும் முஸ்லிம்களைப் பற்றி மட்டுமே மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி கவலைப்படுகிறார் என அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா குற்றம் சாட்டினார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது, முஸ்லிம்-வங்க... மேலும் பார்க்க

வந்தே பாரத்! ரயில் நிலையம் வர 15 நிமிடம் முன்புகூட டிக்கெட் முன்பதிவு வசதி!

இனி, வந்தே பாரத் ரயில், ஒரு ரயில் நிலையத்தை அடைவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்புகூட, அந்த ரயிலுக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.அதாவது, ஒரு ரயில் காலை 9 மணிக்கு திருச்சி... மேலும் பார்க்க

கட்டுக்கட்டாக பணம்! பதவி நீக்கத்துக்கு எதிராக நீதிபதி யஷ்வந்த் வா்மா உச்ச நீதிமன்றத்தில் மனு

புது தில்லி: வீட்டிலிருந்து கட்டுக்கட்டாக பணம் கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில், நீதிபதி யஷ்வந்த் வா்மாவை பதவிநீக்கம் செய்வது தொடா்பான தீா்மானம், வரும் நாடாளுமன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்படவிருக்கும் நி... மேலும் பார்க்க

10 ஆண்டுகளாக ராபர்ட் வதேரா வேட்டையாடப்படுகிறார்! ராகுல் காந்தி

கடந்த 10 ஆண்டுகளாக ராபர்ட் வதேரா வேட்டையாடப்படுவதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.குருகிராம் நில பேர வழக்கில் பிரபல தொழிலதிபரும் காங்கிரஸ் பொதுச் செயலர் பி... மேலும் பார்க்க

மும்பையில் மூன்று மாடிக் கட்டடம் இடிந்தது! இடிபாடுகளில் 7 பேர்?

மும்பையில் மூன்று மாடிக் கட்டடம் இடிந்து வெள்ளிக்கிழமை காலை விபத்துக்குள்ளானது.இதுவரை இடிபாடுகளில் இருந்து 12 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் 7 பேர் சிக்கியிருக்கக் கூடும் எனத் தகவல... மேலும் பார்க்க

தில்லியில் 4-வது நாளாக 20 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

தில்லியில் தொடர்ந்து 4-வது நாளாக இன்றும் 20 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.இந்த வெடிகுண்டு மிரட்டலை அடுத்து பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் பீதியடைந்த நிலையில், அனைவரும் வெளியேற்றப்... மேலும் பார்க்க