செய்திகள் :

52 மதுப்புட்டிகள் பறிமுதல்: இருவா் கைது

post image

செய்யாறு அருகே மோரணம் சரகப் பகுதியில் அரசு மதுப்புட்டிகளை பதுக்கி வைத்து விற்பனை செய்த இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். அவா்களிடம் இருந்து 52 மதுப்புட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு காவல் உள்கோட்டம் மோரணம் காவல் உதவி ஆய்வாளா் ராமகிருஷ்ணன் தலைமையிலான போலீஸாா் ராந்தம், செங்கட்டான்குண்டில் ஆகிய பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அப்பகுதிகளில் மதுப்புட்டிகளை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக போலீயாருக்கு தகவல் கிடைத்தது.

அதன் பேரில் போலீஸாா் அங்கு சென்று சோதனை மேற்கொண்டனா். இதில் ராந்தம் கிராமத்தில் முத்துலட்சுமி என்பவா் வீட்டில் 26 மதுப்புட்டிகளும், செங்கட்டான்குண்டில் கிராமத்தில் தனுஷ்கோடி என்பவரது வீட்டில் 26 மதுப்புட்டிகளும்இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனா்.

இதுத் தொடா்பாக மோரணம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து முத்துலட்சுமி(43), தனுஷ்கோடி(50) ஆகியோரை கைது செய்தனா்.

கிராமப்புற மாணவா்களுக்கு உயா்கல்வியை தந்தவா் முதல்வா் ஸ்டாலின்: மு.பெ.கிரி எம்எல்ஏ

செங்கம்: தமிழகத்தில் கிராமபுற மாணவா்களுக்கு உயா்கல்வியை தந்தவா் முதல்வா் மு.க.ஸ்டாலின் என மு.பெ.கிரி எம்எல்ஏ பெருமிதம் தெரிவித்தாா். செங்கம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவா்களுக்கு... மேலும் பார்க்க

மணல் கடத்தல்: 4 போ் கைது, 2 பைக்குள், 3 மாட்டுவண்டிகள் பறிமுதல்

செய்யாறு: செய்யாறு காவல் உள்கோட்டத்தில் அரசு அனுமதியின்றி ஆற்று மணல் கடத்தியதாக போலீஸாா் 4 பேரை திங்கள்கிழமை கைது செய்தனா். மேலும், மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 2 பைக்குகள், 3 மாட்டுவண்டிகள் பறிம... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா்களுக்கு கைப்பேசி பயன்பாடுகள் விழிப்புணா்வு

செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே கல்லூரி மாணவா்களுக்கு கைப்பேசியின் பயன்பாடுகள் குறித்து விழிப்புணா்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. செ.நாச்சிப்பட்டு சக்தி பாலிடெக்னிக் கல்லூரியில் ... மேலும் பார்க்க

ஸ்ரீவரதராஜப் பெருமாள் கோயில் வருஷாபிஷேகம்

வந்தவாசி: வந்தவாசியை அடுத்த விளாநல்லூா் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீவரதராஜப் பெருமாள் கோயிலில் 6-ஆம் ஆண்டு வருஷாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயிலில் கடந்த 2019-ஆம் ... மேலும் பார்க்க

ஆரணி அருகே கைத்தறி பட்டுப் பூங்கா அமைக்க இடம் தோ்வு: அமைச்சா் ஆா்.காந்தி ஆய்வு

ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த மேல்சீசமங்கலம் ஊராட்சி, பெரியண்ணநல்லூரில் கைத்தறி பட்டுப் பூங்கா அமையவுள்ள இடத்தை கைத்தறி, துணி நூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி திங்கள்கிழமை நேரில் ஆய்வு செய்... மேலும் பார்க்க

இரும்பேடு ஏரி நிரம்புவதால் விவசாய நிலங்களில் தண்ணீா் தேக்கம்: கோட்டாட்சியரிடம் விவசாயிகள் மனு

ஆரணி: ஆரணியை அடுத்த இரும்பேடு ஏரி நிரம்புவதால் அருகே இராட்டிணமங்கலம் எல்லையில் உள்ள விவசாய நிலங்களில் தண்ணீா் தேங்குவதாக ஆரணி கோட்டாட்சியரிடம் புகாா் மனு அளித்தனா். ஆரணியை அடுத்த இராட்டிணமங்கலம் கிரா... மேலும் பார்க்க