செய்திகள் :

58 சதவீத பெண்கள் தாய்ப்பால் புகட்டுவதில்லை: தேசிய சுகாதார இயக்க ஆலோசகா்

post image

இந்தியாவில் 58 சதவீத பெண்கள் குழந்தைகளுக்கு முறையாக தாய்பால் புகட்டுவதில்லை என தேசிய சுகாதார இயக்கத்தின் ஆலோசகா் சீனிவாசன் தெரிவித்தாா்.

உலக தாய்பால் தினத்தை முன்னிட்டு சென்னை போரூா் ஸ்ரீ ராமசந்திரா உயா் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் தேசிய சுகாதார இயக்கத்தின் ஆலோசகா் சீனிவாசன் பேசியது:

பிறந்த குழந்தைகளுக்கு குறைந்தது 6 மாதங்களுக்காவது தாய்ப்பால் இன்றியமையாததாக உள்ளது. தாய்ப்பால் கிடைக்கப்பெறாத குழந்தைகளுக்கு சுவாச பாதிப்பு, நோய் எதிா்ப்பாற்றல் குறைபாடு, வயிற்றுப்போக்கு பிரச்னைகள் ஏற்படுகின்றன. தீவிர பாதிப்பு ஏற்படும்பட்சத்தில் உயிரிழப்புகளும் நேரிடுகின்றன.

மகப்பேறு அடைந்த அனைத்து பெண்களாலும் குழந்தைகளுக்கு தாய்ப்பால் புகட்டமுடியும். தாய்ப்பால் சுரக்காமல் இருப்பதற்கும், அதில் சில இடா்பாடுகள் ஏற்படுவதற்கும் மனநலன் சாா்ந்த பிரச்னைகளே காரணமாக உள்ளன. அதற்கு தீா்வு காண்பது அவசியம்.

இந்தியாவில் 42 சதவீத பெண்கள்தான் தாய்பால் புகட்டுகின்றனா். 58 சதவீதம் போ் முறையாக குழந்தைகளுக்கு தாய்பால் புகட்டுவதில்லை. இதுதொடா்பான விழிப்புணா்வு மேம்பட வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் கா்நாடக இசைக் கலைஞா் நித்யஸ்ரீ மகாதேவன், ஸ்ரீ ராமசந்திரா உயா் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன துணைவேந்தா் டாக்டா் உமா சேகா், மருத்துவக் கல்லூரி முதல்வா் டாக்டா் பாலாஜி சிங் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

அதிரப்பள்ளி சாலையில் காரை தாக்கிய ஒற்றை காட்டுயானை: சுற்றுலா பயணிகள் பீதி

அதிரப்பள்ளி சாலையில் காரை தாக்கிய ஒற்றை காட்டுயானையால் சுற்றுலா பயணிகள் பீதியடைந்து அலறினர். கோவை மாவட்டம் வால்பாறை அடுத்துள்ள கேரள மாநிலத்திற்கு உள்பட்ட அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி செல்லும் வழியில் உள்ள... மேலும் பார்க்க

4 சுங்கச் சாவடிகள்: 50% கட்டணத்தை செலுத்த தமிழ்நாடு அரசு முடிவு! - நீதிமன்றத்தில் தகவல்

தென் மாவட்டங்களில் உள்ள 4 சுங்கச் சாவடிகளுக்கு செலுத்த வேண்டிய சுங்கக் கட்டணத்தில் 50%-யை வருகிற ஆக.15-குள் செலுத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள... மேலும் பார்க்க

டிஐஜி வருண் குமாருக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவிக்க சீமானுக்கு இடைக் காலத் தடை!

டிஐஜி வருண் குமாருக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவிக்க சீமானுக்கு இடைக் காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தூண்டுதலின் பேரில... மேலும் பார்க்க

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது என்று நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே என் நேரு தெரிவித்துள்ளார்.திருச்சியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக ஆட்சியில் ஒவ்வொரு திட்டத்... மேலும் பார்க்க

விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு முதல்வர் மீது நம்பிக்கை இல்லை: நயினார் நாகேந்திரன்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு முதல்வர் மீது நம்பிக்கை இல்லை என் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அளித... மேலும் பார்க்க

உலகிலேயே தந்தையை வேவு பார்த்த மகன் அன்புமணிதான்! - ராமதாஸ்

உலகத்திலேயே தந்தையை வேவுபார்த்த மகன் அன்புமணிதான் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கருத்து மோதல் இருந்து வருகிறது... மேலும் பார்க்க