செய்திகள் :

6 எஞ்சின்கள், 295 பெட்டிகள், 3.5 கி.மீ : உலகின் மிகப்பெரிய சரக்கு ரயில் `சூப்பர் வாசுகி’ தெரியுமா?

post image

நாட்டில் ரயில் சேவை மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. ரயில்களில் பண்டிகை காலத்தில் டிக்கெட் எடுப்பது என்பது சவாலான ஒன்றாக இருக்கிறது. இதனால் மக்கள் ஏஜென்டுகளின் துணையை நாடவேண்டிய நிலையில் இருக்கின்றனர். இதே போன்று நாட்டிற்குள் சரக்குகளை எடுத்துச்செல்லவும் சரக்கு ரயில்கள் முக்கியமான பங்கு வகிக்கிறது.

`சூப்பர் வாசுகி’

மகாராஷ்டிராவில் இயக்கப்படும் `சூப்பர் வாசுகி’ என்ற சரக்கு ரயில்தான் உலகிலேயே மிகப்பெரிய ரயிலாக கருதப்படுகிறது. நாட்டின் 75வது சுதந்திர தினத்தையொட்டி 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு 'ஆஷாதி கா அம்ரித் மஹோத்சவ்' திட்டத்தின் கீழ் இந்த ரயிலை அறிமுகம் செய்தது. இதில் மொத்தம் 295 ரயில் பெட்டிகள் இருக்கிறது. இதனை 6 ரயில் எஞ்சின்கள் சேர்ந்து இழுத்து வருகிறது.

3.5 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இந்த ரயில் நாக்பூரில் உள்ள அனல் மின் நிலையத்திற்கு தேவையான நிலக்கரியை எடுத்து வரும் வேலையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

சத்தீஷ்கரில் இருந்து நிலக்கரியுடன் பயணத்தை தொடங்கும் வாசுகி 11.20 மணி நேரத்தில் நாக்பூர் வந்து சேருகிறது. இந்த ரயிலின் ஒரு முனையில் இருந்து அடுத்த முனைக்கு நடந்து செல்வதாக இருந்தால் ஒரு மணி நேரம் பிடிக்கும். அதோடு இந்த ரயில் கிளம்விட்டால் மற்ற ரயில்கள் அனைத்தும் ஒதுங்கி நின்று வழிவிட ஆரம்பித்துவிடும். வாசுகியை வேறு எந்த ரயில் நிலையத்திலும் நிறுத்த முடியாது. பெரும்பாலான ரயில் நிலையத்தில் பிளாட்பார தண்டவாளம் மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களை நிறுத்தும் வகையில் மட்டுமே கட்டி இருப்பர். ஆனால் சூப்பர் வாசுகி 3.5 கிலோமீட்டர் நீளம் கொண்டது என்பதால் வழியில் வேறு எந்த இடத்திலும் அதனை நிறுத்திவிட்டு வேறு ரயில்களுக்கு வழிவிடுவது என்பது சாத்தியம் கிடையாது. வாசுகிக்கு பின்னால் வரும் ரயில் அதனை முந்திச்செல்வது முடியாத காரியம் ஆகும்.

மேலும் ஒரு ரயில்...

சத்தீஷ்கரில் இருந்து இந்த ரயில் மலைப்பகுதி வழியாக பாம்பு போன்று வளைந்து வளைந்து வருவதை பார்க்கும்போது மிகவும் ரம்மியமாக இருக்கிறது. இதில் 27 ஆயிரம் டன் நிலக்கரியை ஒரே நேரத்தில் எடுத்துச்செல்ல முடியும். இந்த ரயில் ஒரு முறை எதாவது லெவல் கிராசிங்கை கடக்கும்போது மற்ற வாகனங்கள் அதற்கு வழிவிட்டு மணிக்கணக்கில் காத்திருக்கவேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

இந்த ரயில் குறித்து மத்திய ரயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி மைக்கேலிடம் பேசியபோது, ''சரக்குகளை விரைவாகவும், அதிகமாகவும் எடுத்துச்செல்லும் நோக்கில் இந்த ரயில் சரக்கு போக்குவரத்திற்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அனல் மின் நிலையத்திற்கு அதிகப்படியான நிலக்கரி தேவையாக இருப்பதால் இந்த ரயில் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இது போன்ற மேலும் ஒரு ரயிலை இயக்குவது குறித்து மத்திய ரயில்வே பரிசீலித்து வருகிறது. அது குறித்து விரைவில் இறுதி முடிவு எடுக்கப்படும்''என்று தெரிவித்தார்.

இந்தியாவில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை தினமும் 13 ஆயிரம் ரயில்கள் இயக்கப்படுகிறது. இந்தியாவின் ஒவ்வொரு பகுதியும் ரயிலால் இணைக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் இயக்கப்படும் ரயில்களில் தினமும் 4 கோடி மக்கள் பயணம் செய்கின்றனர். ரயில்வே நிர்வாகம் தொடர்ந்து புதுப்புது ரயில்களை அறிமுகம் செய்து வருகிறது. கடைசியாக அறிமுகம் செய்யப்பட்டவந்தே பாரத் ரயிலில் இப்போது படுக்கை வசதியை கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. ஒரிரு ஆண்டில் புல்லட் ரயிலும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இது தவிர நாடு முழுவதும் மெட்ரோ நகரங்களில் மெட்ரோ ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

china: மகனின் 20 வயது வகுப்பு தோழனை திருமணம் செய்த தாய்; கர்ப்பத்தை அறிவித்து நெகிழ்ச்சி!

சீனாவை சேர்ந்த 50 வயதான ஜின் என்பவர் ஒரு தொழில் முனைவோராக இருந்து வருகிறார். அவரின் சொந்த மகனின் வகுப்புத் தோழனை மணம் முடித்து தற்போது கர்ப்பமாக இருப்பதாக சமூக ஊடகங்களில் அறிவித்துள்ளார். கணவர் மகன் எ... மேலும் பார்க்க

Gold: `கூமாப்பட்டி மாதிரியே இதுவும் வைரல்' சுவிட்ச் முதல் வாஷ்பேஷன் வரை தங்கம் - ஆச்சர்ய வீடு

தற்போது ஒரு பவுன் தங்கம் வாங்குவதே மிடிஸ் கிளாஸ் மக்களுக்கு பெரும்பாடாக இருக்கிறது. அந்த அளவிற்கு தங்கத்தின் விலை எகிறி உள்ளது. நாளுக்கு நாள் தங்கத்தின் விலை அதிகரித்து வரும் வேளையில், தங்கத்தைக் கொண்... மேலும் பார்க்க

ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோருக்கு கிடைத்த ‘பல கோடி லாட்டரி பரிசு’- கடைசியில் ட்விஸ்ட்; நடந்ததென்ன?

ஒரே நேரத்தில் பல கோடி ரூபாய் பரிசு வென்றதாக பலருக்கும் லாட்டரி டிக்கெட் நடத்தும் நிறுவனம் தகவல் அனுப்பி இருக்கிறது. ஆயிரக்கணக்கானோர் ஒரே நேரத்தில் கோடீஸ்வரர்கள் ஆனதாக எண்ணிக் கொண்டிருந்த வேளையில், அந்... மேலும் பார்க்க

இந்தியாவில் அனைத்து கட்சியிலும் பெண் வன்கொடுமை, பாகுபாடு; திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள சட்டக்கல்லூரியில் கடந்த வாரம் முதலாம் ஆண்டு மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இச்சம்பவம் கொல்கத்தா அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது... மேலும் பார்க்க

`ஏங்க, என்மேல இருக்க வழக்கால தான் கூமாபட்டியை ஃபேமஸ் ஆக்கிக்கிட்டிருக்கேன்’- வைரல் இளைஞர் தங்கபாண்டி

அந்த மாவட்டத்துக்காரர்களால்கூட பெரிதாக அறியப்படாத ஊர். ஆனால், அந்த இளைஞரின் வீடியோவால் ‘கூமாபட்டி’ என்கிற அச்சிறிய கிராமம், வேர்ல்டு லெவல் ஃபேமஸ் ஆகி இணையத்தில் வேற லெவல் ட்ரெண்டிங் ஆகிக்கொண்டிருக்கிற... மேலும் பார்க்க

``உலகப் புகழ் கூமாபட்டியிலிருந்து.." - விருதுநகர் முன்னாள் கலெக்டர் ஜெயசீலன் பதிவு வைரல்!

கூமாபட்டி... திடீரென தமிழ்நாட்டின் காஷ்மீர் என வைரலான கிராமம். மன அழுத்தமா இங்க வாங்க என ஒருவர் பேசிய வீடியோவை நம்பி இளைஞர்கள் பட்டாளமும் ஒன்று புறப்பட்டது. ஆனால் அங்கு நடந்தது என்னவோ வேறு. ஆம், அந்த ... மேலும் பார்க்க