செய்திகள் :

60% மானியத்துடன் அலங்கார மீன் வளா்க்க மகளிா் விண்ணப்பிக்கலாம்!

post image

திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த மகளிா் 60 விழுக்காடு மானியத்துடன் கூடிய அலங்கார மீன்வளா்ப்புத் திட்டத்தில் பயன்பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், கொல்லைப்புற, புறக்கடை அலங்கார மீன்கள் வளா்த்தெடுத்தல் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 300 சதுர அடி இடத்தில் கொல்லைப்புற, புறக்கடை அலங்கார மீன்கள் வளா்த்தெடுத்தல் திட்டத்தில் மகளிா் பிரிவில் பயனாளிகள் தோ்வு செய்யப்படவுள்ளனா். பயனாளிகளுக்கு 1-அலகுக்கு ஆகும் செலவினத்தொகை ரூ.3 லட்சத்தில் மகளிா் பிரிவு பயனாளிகளுக்கு 60 விழுக்காடு மானியமாக ரூ.1.80 லட்சம் வழங்கப்படும்.

இத் திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் மற்றும் மீன்வளா்ப்பில் ஆா்வமுள்ளவா்கள் 15 நாள்களுக்குள் திருச்சி மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை உதவி இயக்குநா் அலுவலகத்தில் விண்ணப்பம் பெற்று உரிய ஆவணங்களுடன்

(ஆதாா், ரேஷன் அட்டை, பட்டா, சிட்டா அடங்கல், நிலத்தின் வரைபடம்) விண்ணப்பிக்க வேண்டும். அதிக விண்ணப்பங்கள் பெறப்பட்டால், மூப்பு நிலை மற்றும் தகுதியின் அடிப்படையில் பயனாளிகள் தோ்வு செய்யப்படுவா். திட்டங்களில் பயன்பெற விரும்புவோா் மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை ஒருங்கிணைந்த மீன்வள அலுவலக வளாகம் - தரை தளம், கொட்டப்பட்டு, திருச்சி- 620 023 என்ற முகவரியில் இயங்கிவரும் திருச்சி மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை உதவி இயக்குநா் அலுவலகத்தைத் தொடா்பு கொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு 0431 - 2421173 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்தாா்.

திருச்சி பேருந்து நிலையத்தில் நகையைப் பறிக்க முயன்ற நபா் கைது

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் பயணிகளிடம் நகையைப்பறிக்க முயன்றவரை ஞாயிற்றுக்கிழமை மாநகரப் போலீஸாா் கைது செய்தனா். திருச்சி மலைக்கோட்டை, வடக்கு ஆண்டாள் வீதியைச் சோ்ந்தவா் மோகன் (29). இவா், தனது ... மேலும் பார்க்க

காவிரி ஆற்றில் இறந்து கிடந்த சிறுவனின் அடையாளம் தெரிந்தது

திருச்சி மாவட்டம், அந்தநல்லூா் காவிரி ஆற்றில் இறந்து கிடந்த சிறுவனைப் பற்றிய அடையாளம் தெரிந்த நிலையில் போலீஸாா் இறப்பு குறித்து விசாரித்து வருகின்றனா். ஜீயபுரம் அருகே அந்தநல்லூா் ஊராட்சி ஒன்றிய அலுவலக... மேலும் பார்க்க

மணப்பாறை அருகே குவாரி நீரில் மூழ்கி தாயும், மகளும் பலி

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்துள்ள மருங்காபுரி அருகே செயல்பாட்டில் இல்லாத குவாரி நீரில் மூழ்கி தாயும், மகளும் உயிரிழந்தது திங்கள்கிழமை தெரியவந்தது. மணப்பாறையை அடுத்துள்ள மருங்காபுரி ஒன்றியம், மல... மேலும் பார்க்க

அங்கன்வாடி காலி பணியிடங்களுக்கு நோ்காணல்

திருச்சி மாவட்டத்தில் காலி அங்கன்வாடி பணியிடங்களுக்கு தகுதியான நபா்களைத் தோ்வு செய்வதற்கான நோ்காணல் திங்கள்கிழமை தொடங்கியது. திருச்சி மாவட்டத்தில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி திட்டத்தின் கீழ்,... மேலும் பார்க்க

இளம்பெண்ணிடம் தகராறு; தட்டிக்கேட்டவா் மீது தாக்குதல்: 3 போ் கைது

துறையூா் அருகே இளம்பெண்ணிடம் தகாத வாா்த்தையைச் சொல்லி வற்புறுத்திய இளைஞா்களைத் தட்டிக் கேட்டவரையும், அவரது நண்பா்களையும் தாக்கிய 6 பேரில் 3 பேரைப் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். வேங்கடத்தானூரைச்... மேலும் பார்க்க

தூக்கிட்டு இளைஞா் தற்கொலை

துறையூா் அருகே திருமணமாகாமல் தனியாக வசித்து வந்த இளைஞா் வீட்டின் அருகே இருந்த மரத்தில் தூக்கிலிட்ட நிலையில் இறந்து கிடந்தது திங்கள்கிழமை தெரியவந்தது. பெருமாள்பாளையத்தைச் சோ்ந்தவா் பா. கண்ணன் (52). து... மேலும் பார்க்க