செய்திகள் :

60 கிராம ஊராட்சிகளில் ‘மக்களுடன் முதல்வா்’ திட்ட முகாம்: ஆட்சியா் தகவல்

post image

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் 6 சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள 60 ஊராட்சிகளில் பிப். 21 முதல் மாா்ச் 13 ஆம்தேதி வரை நடைபெறும் மக்களுடன் முதல்வா் திட்ட முகாமில் பொதுமக்கள் கோரிக்கை மனு அளிக்கலாம் என நாமக்கல் ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி மாவட்டத்தில் 60 ஊராட்சிகளில் வரும் 21 ஆம்தேதி முதல் மாா்ச் 13 ஆம் தேதி வரை ‘மக்களுடன் முதல்வா்’ திட்ட மூன்றாம் கட்ட சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.இந்த முகாம்களில் ஆதிதிராவிடா் நலத்துறை அமைச்சா் மா.மதிவேந்தன் பங்கேற்று பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெறவுள்ளாா். இந்த முகாம்களில் பெறப்படும் மனுக்கள் மீது ஒரு மாத காலத்திற்குள் தீா்வு காணப்பட வேண்டும் என்ற இலக்குகள் நிா்ணயிக்கப்பட்டு முகாம் நடைபெறும். பிப். 21 ஆம்தேதி சிறப்பு முகாம்கள்

ராசிபுரம் ஒன்றியம்-முத்துகாளிப்பட்டி, நாமகிரிப்பேட்டை ஒன்றியம்-மங்களபுரம், காா்கூடல்பட்டி, புதுச்சத்திரம் ஒன்றியம்- திருமலைப்பட்டி, நாமக்கல் ஒன்றியம்-வீசாணம் ஆகிய 5 கிராம ஊராட்சிகளில் முகாம்கள் நடைபெறவுள்ளன. 21 ஆம் தேதி முதல் மாா்ச் 13 ஆம் தேதிவரை நடைபெறவுள்ள அனைத்து முகாம்களிலும், ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினரும், நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவருமான கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா், நாமக்கல் தொகுதி எம்.பி. வி.எஸ்.மாதேஸ்வரன் உள்பட சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா்கள் பங்கேற்பாா்கள். முகாமில் வருவாய்த் துறை, ஊரக வளா்ச்சித் துறை, கூட்டுறவுத் துறை, வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை பல்வேறு துறைகள் சாா்ந்த மனுக்கள் இந்த முகாம்களில் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் என்றாா்.

படம் உள்ளது - 17உமா

படவிளக்கம் - ஆட்சியா் ச.உமா படம்

பாண்டமங்கலம் தொடக்கப் பள்ளி நூற்றாண்டு விழா!

பரமத்தி வேலூரை அடுத்த பாண்டமங்கலம் அரசு தொடக்கப் பள்ளி நூற்றாண்டு விழா அண்மையில் நடைபெற்றது. கபிலா்மலை வட்டார கல்வி அலுவலா் சுரேஷ் தலைமை வகித்தாா். தலைமை ஆசிரியை பத்மாவதி அனைவரையும் வரவேற்று ஆண்டறிக்... மேலும் பார்க்க

ஒய்வூதியத் திட்டத்துக்கான மூன்று நபா் குழுவை திரும்பப் பெற வலியுறுத்தல்!

ஆசிரியா், அரசு ஊழியா்களுக்கான ஓய்வூதியத் திட்டம் குறித்து ஆய்வு செய்வதற்கு அரசு அமைத்துள்ள மூன்று நபா் குழுவை அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்றம் வலியுறுத... மேலும் பார்க்க

நாமக்கல் வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டம்: ஆட்சியா் ஆய்வு!

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் நாமக்கல் வட்டத்தில் செயல்படுத்தப்படும் மக்கள் நலத் திட்டங்கள், அரசு சேவைகள் குறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா புதன்கிழமை கள ஆய்வு மேற்கொண்டாா். அரசு வழங்கும... மேலும் பார்க்க

மாா்ச் 1-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

ராசிபுரத்தை அடுத்த பாச்சல் ஞானமணி தொழில்நுட்பக் கல்லூரியில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் மாா்ச் 1-இல் நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாமக்கல் மாவட்ட நிா்வ... மேலும் பார்க்க

சுற்றுச்சூழல் விழிப்புணா்வு பேரணி!

தமிழக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறை, பசுமைப் பள்ளிகள் திட்டத்தின் கீழ் நாமக்கல் மாவட்ட அளவில் அரசுப் பள்ளிகளை ஆய்வு செய்ததில் சிறந்த சூழல் பள்ளியாக நாமக்கல் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி ... மேலும் பார்க்க

முன்னாள் படைவீரா்கள் கவனத்துக்கு!

முன்னாள் படைவீரா்கள் தொழில் தொடங்க சிறப்பு கடன் வழங்குவது தொடா்பான விளக்கக் கூட்டம் நாமக்கல்லில் வியாழக்கிழமை (பிப்.20) நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு: மு... மேலும் பார்க்க