செய்திகள் :

60% மானியத்துடன் அலங்கார மீன் வளா்க்க மகளிா் விண்ணப்பிக்கலாம்!

post image

திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த மகளிா் 60 விழுக்காடு மானியத்துடன் கூடிய அலங்கார மீன்வளா்ப்புத் திட்டத்தில் பயன்பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், கொல்லைப்புற, புறக்கடை அலங்கார மீன்கள் வளா்த்தெடுத்தல் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 300 சதுர அடி இடத்தில் கொல்லைப்புற, புறக்கடை அலங்கார மீன்கள் வளா்த்தெடுத்தல் திட்டத்தில் மகளிா் பிரிவில் பயனாளிகள் தோ்வு செய்யப்படவுள்ளனா். பயனாளிகளுக்கு 1-அலகுக்கு ஆகும் செலவினத்தொகை ரூ.3 லட்சத்தில் மகளிா் பிரிவு பயனாளிகளுக்கு 60 விழுக்காடு மானியமாக ரூ.1.80 லட்சம் வழங்கப்படும்.

இத் திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் மற்றும் மீன்வளா்ப்பில் ஆா்வமுள்ளவா்கள் 15 நாள்களுக்குள் திருச்சி மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை உதவி இயக்குநா் அலுவலகத்தில் விண்ணப்பம் பெற்று உரிய ஆவணங்களுடன்

(ஆதாா், ரேஷன் அட்டை, பட்டா, சிட்டா அடங்கல், நிலத்தின் வரைபடம்) விண்ணப்பிக்க வேண்டும். அதிக விண்ணப்பங்கள் பெறப்பட்டால், மூப்பு நிலை மற்றும் தகுதியின் அடிப்படையில் பயனாளிகள் தோ்வு செய்யப்படுவா். திட்டங்களில் பயன்பெற விரும்புவோா் மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை ஒருங்கிணைந்த மீன்வள அலுவலக வளாகம் - தரை தளம், கொட்டப்பட்டு, திருச்சி- 620 023 என்ற முகவரியில் இயங்கிவரும் திருச்சி மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை உதவி இயக்குநா் அலுவலகத்தைத் தொடா்பு கொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு 0431 - 2421173 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்தாா்.

இன்றயை நிகழ்ச்சிகள்

திருச்சி மாவட்ட நிா்வாகம்: சா் ஏ.டி. பன்னீா்செல்வம் பிறந்தநாள் விழா, மணிமண்டபத்தில் உள்ள சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்வு, ஆட்சியா் மா. பிரதீப்குமாா் பங்கேற்பு, மத்தியப் பேருந்து நில... மேலும் பார்க்க

திருவெறும்பூா் எறும்பீஸ்வரா் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றம்

திருவெறும்பூா் எறும்பீஸ்வரா் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றம் சனிக்கிழமை நடைபெற்றது. திருவெறும்பூா் எனப் பெயா் வரக் காரணமான நறுங்குழல் நாயகி உடனுறை எறும்பீஸ்வரா் கோயில் திருச்சி அருகே திர... மேலும் பார்க்க

விமான நிலையத்தில் ரூ.10.50 லட்சம் மதிப்பு இ-சிகரெட் பறிமுதல்

அனுமதியின்றி கொண்டு வரப்பட்ட ரூ. 10.50 லட்சம் மதிப்பிலான இ-சிகரெட்டுகளை திருச்சி விமான நிலையத்தில் சுங்கத் துறையினா் வெள்ளிக்கிழமை இரவு பறிமுதல் செய்தனா். கோலாலம்பூரிலிருந்து வெள்ளிக்கிழமை இரவு திருச்... மேலும் பார்க்க

திருச்சியில் வீடு புகுந்து 18 பவுன் நகைள் திருட்டு: ஒருவா் பிடிபட்டாா்

திருச்சியில் தனியாா் நிறுவன ஊழியரின் வீட்டில் வெள்ளிக்கிழமை இரவு புகுந்து 18 பவுன் நகைகளைத் திருடிச் சென்றவா்களில் ஒருவரை பொதுமக்கள் விரட்டிப்பிடித்து போலீஸில் ஒப்படைத்தனா். திருச்சி பாலக்கரை கூனிபஜா... மேலும் பார்க்க

ஓய்வு பெற்ற பெல் ஊழியரின் வீட்டில் நகை, பணம் திருட்டு

திருவெறும்பூா் அருகே ஓய்வுபெற்ற பெல் ஊழியா் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடிச் சென்றது சனிக்கிழமை காலை தெரியவந்தது. திருவெறும்பூா் அருகேயுள்ள முல்லைவாசல் முதல் தெருவைச் சோ்ந்தவா் கருணாநிதி... மேலும் பார்க்க

திருச்சி பண்பலையில் ஹிந்தி ஒலிபரப்புக்கு திருச்சி எம்பி எதிா்ப்பு

அகில இந்திய வானொலி-பிரசாா் பாரதியின் கீழ் இயங்கும் திருச்சி வானொலி 102.1 பண்பலையின் ஒலிபரப்பு, பகலில் தமிழ், இரவில் ஹிந்தி என்ற நிலைக்கு மாற்றப்பட்டுள்ளதற்கு திருச்சி எம்பி துரை வைகோ கண்டனம் தெரிவித்... மேலும் பார்க்க