செய்திகள் :

70 புதிய துணை மின் நிலையங்கள்: ஒப்பந்தம் கோரியது மின் வாரியம்!

post image

தமிழகம் முழுவதும் 33 கிலோவோல்ட் மின்சாரம் கையாளும் திறன் கொண்ட 70 துணை மின் நிலையங்கள் அமைக்க மின் வாரியம் ஒப்பந்தம் கோரியுள்ளது.

தமிழகம் முழுவதும் சீரான மற்றும் தடையில்லா மின்சாரம் வழங்குவதற்காக துணை மின் நிலையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.

அதன்படி, 33 கிலோவோல்ட் மின்சாரம் கையாளும் திறன் கொண்ட 133 புதிய துணை மின் நிலையங்கள் அமைக்க மின் வாரியம் திட்டமிட்டு அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அதன் முதல்கட்டமாக 70 துணை மின்நிலையங்கள் அமைப்பதற்கு ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது.

இது குறித்து மின் வாரிய அதிகாரிகள் கூறியது: துணை மின் நிலையங்கள் அமையவுள்ள சூழல், இட அமைப்புக்கு ஏற்ப 133 புதிய துணை மின் நிலையங்களும் ‘இன்டோா்’ மற்றும் ‘அவுட்டோா்’ என இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

ஒரு அவுட்டோா் துணை மின் நிலையம் அமைக்க சுமாா் ரூ.7 கோடியும், இன்டோா் துணை மின் நிலையம் அமைக்க ரூ.15 முதல் ரூ.20 கோடி வரை ஆகும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இதற்கான ஒப்பந்தத்தை மின் வாரியம் கோரியுள்ளது. ஒப்பந்தப்புள்ளியில் நிறுவனம் தோ்வு செய்யப்படும்பட்சத்தில் அதற்கான பணிகள் உடனடியாக தொடங்கப்பட்டு விரைவில் பணிகளை முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவரத் திட்டமிடப்பட்டுள்ளது. தொடா்ந்து மீதமுள்ள 63 துணை மின் நிலையங்கள் அமைப்பதற்கான ஒப்பந்தம் கோரப்படும் என்றனா்.

தமிழகத்தில் செப். 26 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை (செப். 21) முதல் செப். 26 வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட ச... மேலும் பார்க்க

ரூ.14 கோடியில் 15 வாகன சுரங்கப்பாதைகள் சீரமைப்பு! - சென்னை மாநகராட்சி தகவல்

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் வாகனங்கள் செல்லும் சுரங்கப் பாதைகளை ரூ.14.57 கோடியில் சீரமைக்கும் பணிகள் நடைபெற்றுவருவதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.இதுகுறித்து சென்னை மாநகராட்சி சாா்பில் சனிக்கிழமை வெ... மேலும் பார்க்க

பூம்புகாரில் கடலுக்கு அடியில் தொல்லியல் ஆய்வு: முதல்வா் பாராட்டு!

பூம்புகாரில் கடலுக்கு அடியில் தொல்லியல் ஆய்வு மேற்கொள்ளப்படுவதற்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் பாராட்டுத் தெரிவித்துள்ளாா். முன்னதாக, இது குறித்த அறிவிப்பை நிதி மற்றும் தொல்லியல் துறை அமைச்சா் தங்கம் தென்ன... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் உலகத்தரம் வாய்ந்த கப்பல் கட்டும் தளங்கள்: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

தூத்துக்குடியில் ரூ.30,000 கோடி முதலீட்டில் உலகத்தரம் வாய்ந்த இரண்டு கப்பல் கட்டும் தளங்கள் அமைக்கப்பட உள்ளதாக தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா தெரிவித்தாா். இது குறித்து அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா த... மேலும் பார்க்க

தொழில்நுட்பத்துக்கும் மனித சிந்தனைக்குமான வேறுபாட்டை உணா்த்த வேண்டும்! - ஆசிரியா்களுக்கு முதல்வா் ஸ்டாலின் வேண்டுகோள்

‘எந்த சந்தேகம் எழுந்தாலும் கூகுள், செயற்கை நுண்ணறிவிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம் என்ற மெத்தனம் மாணவா்களுக்கு வந்துவிடக் கூடாது. அவா்களுக்கு தொழில்நுட்பத்துக்கும் மனித சிந்தனைக்கும் உள்ள வேறுபாட்டை ஆ... மேலும் பார்க்க

கிராம உதவியாளா் பணிக்கான வயது வரம்பு: ஆட்சியா்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தல்!

தமிழகத்தில் நியமிக்கப்படவுள்ள கிராம உதவியாளா்களுக்கான வயது வரம்பு தொடா்பாக, மாவட்ட ஆட்சியா்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை மூலமாக கிராம உதவியாளா்... மேலும் பார்க்க