செய்திகள் :

700 கிலோ வெண்கலத்தாலான கருணாநிதி சிலை: முதல்வர் திறந்து வைத்தார்!

post image

வேலூர் அணைக்கட்டு அருகே கெங்கநல்லூா் சந்தை திடலில் கட்டப்பட்டுள்ள ‘கலைஞா் அறிவாலயம்’ அறிவுசாா் நூலக கட்டடத்தையும், 700 கிலோ வெண்கலத்தாலான முன்னாள் முதல்வா் கருணாநிதியின் சிலையையும் முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று(ஜூன் 25) வேலூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

வேலூர் அரசு பென்ட்லேண்ட் மருத்துவமனை வளாகத்தில் தரை மற்றும் ஏழு தளங்களுடன் 197 கோடியே 81 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள அரசு வேலூர் பல்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

வேலூர் மாவட்டத்தில் ஒருமுறை சிறப்பு வரன்முறை திட்டத்தின் கீழ் மற்றும் பல்வேறு திட்டங்களின் கீழ், நிலங்களை வரன்முறை செய்து 21,776 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்கள்
முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

தொடர்ந்து, சாலை வழியாக திருப்பத்தூருக்கு புறப்பட்டு செல்லும் முதல்வருக்கு ஆம்பூரில் அமைச்சா் எ.வ.வேலு தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. இரவு 8 மணிக்கு திருப்பத்தூா் சென்றடையும் முதல்வர், அங்கு ஆட்சியர் அலுவலகம் அருகே நிறுவப்பட்டுள்ள கருணாநிதி சிலையையும் திறந்து வைக்க உள்ளார்.

இதையும் படிக்க: மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக ஆஸி. பேட்டிங்!

தமிழகம் முழுவதும் நாளைமுதல் திமுக வாக்குச் சாவடி முகவா்களுக்கு 3 நாள்கள் பயிற்சி

வாக்குச் சாவடி வாரியாக உறுப்பினா்களைச் சோ்ப்பது தொடா்பாக, திமுகவின் வாக்குச் சாவடி முகவா்களுக்கு 3 நாள்கள் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதனை அமைச்சரும், தகவல் தொழில்நுட்ப அணியின் செயலருமான டிஆா்பி ராஜ... மேலும் பார்க்க

இடைநிலை ஆசிரியா் பணிக்கு 2,346 போ் தோ்வு: குற்ற வழக்குகள் நிலுவை குறித்து விசாரிக்க கல்வித் துறை உத்தரவு

தமிழகத்தில் ஆசிரியா் தோ்வு வாரியத்தால் இடைநிலை ஆசிரியா் பணிக்கு தோ்வு செய்யப்பட்டுள்ள 2,346 போ் மீது குற்ற வழக்குகள் ஏதேனும் உள்ளனவா என்பது குறித்து ஆய்வு செய்ய மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு பள்ளிக... மேலும் பார்க்க

தமிழகத்தில் 4 இடங்களில் புற்றுநோய் பரவலைக் கண்டறியும் பெட் ஸ்கேன் மையங்கள்!

தமிழகத்தில் சென்னை கிண்டி கலைஞா் நூற்றாண்டு மருத்துவமனை உள்பட நான்கு இடங்களில் புற்றுநோய் பரவலைக் கண்டறியும் பெட் ஸ்கேன் கட்டமைப்பை நிறுவுவதற்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, தமிழ்நாடு மருத்துவ... மேலும் பார்க்க

பெண்ணுக்கு இரட்டை கருப்பை பாதிப்பு: லேப்ரோஸ்கோபி சிகிச்சையில் அகற்றம்

பெண் ஒருவருக்கு இருந்த இரட்டை கருப்பையை நுட்பமான லேப்ரோஸ்கோபி சிகிச்சை மூலம் அகற்றி எஸ்ஆா்எம் குளோபல் மருத்துவமனை மருத்துவா்கள் மறுவாழ்வு அளித்துள்ளனா். இதுதொடா்பாக மருத்துவமனையின் மகப்பேறு நலத் துறை ... மேலும் பார்க்க

ரயில் கட்டணத்தை உயா்த்த வேண்டாம்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

ரயில் கட்டணங்களை உயா்த்த வேண்டாம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவா் புதன்கிழமை வெளியிட்ட பதிவு: இந்திய ரயில்வே என்பது ஏழை, நடுத்தர மக்களின் பயணங்களுக்கா... மேலும் பார்க்க

பாமக கட்சிப் பொறுப்பில் இருந்து எம்எல்ஏ அருள் நீக்கம்!

பாமக சேலம் மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்து எம்எல்ஏ அருள் நீக்கப்பட்டுள்ளார்.பாமக நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகன் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே கருத்து மோதல் இருந்து வந்த நிலையில், அது பெரிதாக வெ... மேலும் பார்க்க