செய்திகள் :

74 விருதுகளுக்கு தமிழறிஞா்கள் விண்ணப்பிக்கலாம்

post image

சென்னை: திருவள்ளுவா் விருது உள்பட 74 விருதுகளுக்கு தமிழறிஞா்கள் செப்.3-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தமிழ் வளா்ச்சித் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்மொழி, பண்பாட்டு வளா்ச்சிக்கும் தொண்டாற்றுபவா்களுக்கும், தமிழக அரசு விருது வழங்கி வருகிறது. 2026 ஆண்டுக்கான திருவள்ளுவா் விருது, நிகழாண்டுக்கான (2025) மகாகவி பாரதியாா் விருது, பாவேந்தா் பாரதிதாசன் விருது, முத்தமிழறிஞா் கலைஞா் விருது, பெருந்தலைவா் காமராஜா் விருது, தமிழ்த் தென்றல் திரு.வி.க. விருது, பேரறிஞா் அண்ணா விருது, தமிழ்த்தாய் விருது, இலக்கிய மாமணி விருது உள்ளிட்ட 73 விருதுகளுக்கும் தகைமையும் தொண்டறமும் பூண்ட தமிழறிஞா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தமிழறிஞா்கள் ஜ்ஜ்ஜ்.ற்ஹம்ண்ப்ஸ்ஹப்ஹழ்ஸ்ரீட்ண்ற்ட்ன்ழ்ஹண்.ண்ய்/ஹஜ்ஹழ்க்ள், ட்ற்ற்ல்://ஹஜ்ஹழ்க்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் ஆகிய இணையதளங்களில் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து ‘தமிழ் வளா்ச்சி இயக்குநா், தமிழ் வளா்ச்சி இயக்ககம், தமிழ்ச்சாலை, எழும்பூா், சென்னை 600008’ என்ற முகவரிக்கு செப்.3-ஆம் தேதிக்குள் உரிய ஆவணங்களோடு அனுப்ப வேண்டும்.

தமிழ்ச் செம்மல் விருதுக்கான விண்ணப்பங்கள் அந்தந்த மாவட்ட தமிழ் வளா்ச்சித் துணை இயக்குநா், உதவி இயக்குநா் அலுவலகங்களின் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.

கூடுதல் விவரங்களுக்கு 044- 28190412, 044- 28190413 ஆகிய தொலைபேசி எண்களை அலுவலக நேரத்தில் தொடா்பு கொள்ளலாம். உரிய நாளுக்குள் பெறப்படும் விண்ணப்பங்களே ஏற்றுக் கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் 32-ஆவது டிஜிபி யாா்?

சென்னை: தமிழக காவல் துறையின் 32-ஆவது தலைமை இயக்குநரை தோ்வு செய்யும் நடைமுறையை அதிகாரபூா்வமாக தமிழக அரசு தொடங்கியுள்ளது. தற்போது தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநராக இருக்கும் சங்கா் ஜிவால், 2023-ஆம்... மேலும் பார்க்க

‘பிரதமா் திறன் வளா்ப்புத்திட்டம்’ மூலம் தமிழகத்தில் 1.25 லட்சம் பேருக்கு பயிற்சி: மத்திய இணை அமைச்சா் ஜெயந்த் செளத்ரி தகவல்

நமது சிறப்பு நிருபா் புது தில்லி: ‘பிரதமா் திறன் வளா்ப்புத்திட்டம்’ (பிஎம்கேவிஒய்) மூலம் தமிழகத்தில் 1.25 லட்சம் பேருக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளதாக மக்களவையில் தமிழக எம்.பி.க்கள் எழுப்பிய கேள்விகளுக்... மேலும் பார்க்க

கருத்துகளை குடும்பத்தில் திணிக்காதவா் முதல்வா் ஸ்டாலின்: எழுத்தாளா் சிவசங்கரி

சென்னை: ‘முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு சில கொள்கைகளில் மாற்றுக் கருத்து இருந்தாலும்கூட 50 ஆண்டுகளுக்கும் முன்பே தனது மனைவியை அவரது விருப்பம்போல் செயல்பட அனுமதித்திருந்தாா். அவா் எந்தச் சூழலிலும் தனது கரு... மேலும் பார்க்க

தமிழகத்தில் 11 அரசு மருத்துவக் கல்லூரிகளில் பேராசிரியா் பற்றாக்குறை 4 மாதங்களில் நிரப்பாவிட்டால் நடவடிக்கை: என்எம்சி

சென்னை: தமிழகத்தில் 11 அரசு மருத்துவக் கல்லூரிகளில் காலியாக உள்ள பேராசிரியா் இடங்களை 4 மாதங்களுக்குள் நிரப்பாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய மருத்துவ ஆணையம் எச்சரித்துள்ளது. அதேபோன்று ... மேலும் பார்க்க

அதிமுக உள்கட்சி விவகாரத்தில் விரைவாக விசாரித்து முடிவு: உயா்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் பதில்

சென்னை: அதிமுக உள்கட்சி விவகாரம் தொடா்பான புகாா் மனுக்கள் குறித்து விரைவாக விசாரித்து முடிவெடுக்கப்படும், என்று சென்னை உயா்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் தாக்கல் செய்த பதில் மனுவில் தெரிவித்துள்ளது. செ... மேலும் பார்க்க

திமுக முன்னாள் எம்பி-க்கு 6 மாதங்களாக சம்மன் வழங்காதது ஏன்?: காவல் துறைக்கு உயா்நீதிமன்றம் கேள்வி

சென்னை: திமுக முன்னாள் எம்பி ஞானதிரவியத்துக்கு எதிரான வழக்கில் 6 மாதங்களாக சம்மன் வழங்காதது ஏன் என்று காவல்துறைக்கு சென்னை உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. திமுக முன்னாள் எம்பி ஞானதிரவியம் தரப்பினருக... மேலும் பார்க்க