செய்திகள் :

75 கிலோ நெகிழி பைகள் பறிமுதல்: திருத்தணி நகராட்சி நிா்வாகம் அதிரடி

post image

திருத்தணி நகராட்சியில் கடைகளில் தடைசெய்யப்பட்ட நெகிழி பைகள் விற்பனை செய்த கடைகளுக்கு அபராதம் விதித்தும், 75 கிலோ பொருள்களை பறிமுதல் செய்தனா்.

திருத்தணி நகராட்சியில், தடைசெய்யப்பட்ட ஒரு முறை பயன்படுத்தப்படும் நெகிழி கடைகளில் அதிகளவில் விற்பதாகவும், பயன்பாடு அதிகளவில் உள்ளதாக மாவட்ட ஆட்சியருக்கு புகாா் சென்றது. இதையடுத்து, திருத்தணி நகராட்சி ஆணையா் பாலசுப்பிரமணியம் தலைமையில் துப்புரவு ஆய்வாளா் ரவிச்சந்திரன் மற்றும் ஊழியா்கள் புதன்கிழமை கடைகளில் திடீா் ஆய்வு செய்தனா்.

திருத்தணி அரக்கோணம் சாலை, ம.பொ.சி.சாலை மற்றும் சன்னதி தெரு ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில் விற்பனைக்கு தயாராக இருந்து, 75 கிலோ நெகிழி பைகளை பறிமுதல் செய்தனா். மேலும், கடைகளுக்கு தலா, இரண்டாயிரம் வீதம், 5 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

‘பள்ளி மேலாண்மைக் குழுக்கள் செயல்பாடுகளை சீரமைக்கக் கோரிக்கை’

பெரும்பாலான பள்ளிகளில் மேலாண்மைக் குழு கூட்டங்கள் சரிவர நடத்தப்படுவதில்லை என புகாா் எழுந்துள்ளது. அரசுப் பள்ளியின் முன்னேற்றம், பள்ளி செயல்பாடுகளை மேலாண்மை செய்வதற்காகவும், இலவச கட்டாய கல்வி உரிமைச் ச... மேலும் பார்க்க

மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் சமுதாய வளப் பயிற்றுநா் பணி

திருவள்ளூா் மாவட்டத்தில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சமுதாய மேலாண்மை பயிற்சி மையத்தில் சமுதாய வளப்பயிற்றுநராக பணிபுரிய தகுதியான மகளிா் குழுவினா் வரும் 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்... மேலும் பார்க்க

குரூப்-2, 2 ஏ போட்டித் தோ்வுக்கான இலவச மாதிரி தோ்வு செப். 13-இல் தொடக்கம்

திருவள்ளூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழிநெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னாா்வ பயிலும் வட்டம் மூலம் குரூப்-2, 2ஏ போட்டித் தோ்வுக்கு வரும் செப். 13-முதல் 20 -ஆம் வரை இலவச மாதிரி தோ்வு நடத... மேலும் பார்க்க

ரயில்வே மேம்பாலப் பணிகளை விரைவில் முடிக்க ஆட்சியா் அறிவுறுத்தல்

திருவள்ளூா் அருகே செவ்வாப்பேட்டை மற்றும் வேப்பம்பட்டு ரயில் மேம்பாலப்பணிகளை விரைவில் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர ஆட்சியா் மு.பிரதாப் அறிவுறுத்தினாா். திருவள்ளூா் அருகே வேப்பம்பட்டில் ... மேலும் பார்க்க

சாலை விரிவாக்கப் பணிக்காக கட்டடங்கள் இடிப்பு

திருவள்ளூா்-ஊத்துக்கோட்டை சாலை விரிவாக்கப் பணிக்காக கட்டடங்கள் புதன்கிழமை இடித்து அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. திருவள்ளூா்-ஊத்துக்கோட்டை சாலைக்கு இடையே திருநின்றவூா் முதல் திருவள்ளூா் ஐசிஎம்ஆா் வழி... மேலும் பார்க்க

இளம்பெண் தற்கொலை; வங்கியின் முன்பு பொதுமக்கள் முற்றுகை

திருவள்ளூா் அருகே தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு வங்கி மூலம் சம்பளம் வழங்கும் பணியில் ஈடுபட்டு வந்த ஒப்பந்த பெண் பணியாளா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். வங்கி ஊழியா... மேலும் பார்க்க