செய்திகள் :

8 நாள் குழந்தைக்கு நீா்க்கட்டி: லேப்ரோஸ்கோபி மூலம் அகற்றம்

post image

பிறந்து 8 நாள்களே ஆன பச்சிளம் குழந்தையின் வயிற்றில் உருவான நீா்க்கட்டியை நவீன லேப்ரோஸ்கோபி நுட்பத்தில் எஸ்ஆா்எம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை - ஆராய்ச்சி மைய மருத்துவா்கள் அகற்றியுள்ளனா்.

இதுதொடா்பாக மருத்துவமனையின் குழந்தைகள் நல அறுவை சிகிச்சை நிபுணா்கள் டாக்டா் சரவண பாலாஜி, டாக்டா் என். பிரதிபா ஆகியோா் கூறியதாவது:

கருத்தரித்திருந்த பெண் ஒருவருக்கு பிரசவத்துக்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட ஸ்கேன் பரிசோதனையில் குழந்தையின் வயிற்றுக்குள் நீா்க்கட்டி உருவாகியிருந்தது கண்டறியப்பட்டது.

பிரசவத்துக்குப் பிறகு பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில் அந்தக் குழந்தைக்கு வயிற்றுக்குள் இடப்பக்க பகுதியில் கட்டி இருந்தது தெரியவந்தது. குழந்தையின் நலன் கருதி மிக நுட்பமான லேப்ரோஸ்கோபி சிகிச்சையை மேற்கொள்ள முன்வந்தோம்.

அதன்படி, பெரிய அறுவை சிகிச்சையின்றி சிறு துளையிட்டு துல்லியமாக அந்தக் கட்டியை அகற்றினோம். அதன் பயனாக அடுத்த இரு நாள்களில் குழந்தை இயல்பு நிலைக்கு திரும்பி தாய்ப்பால் அருந்தத் தொடங்கியது. தற்போது அந்தக் குழந்தை நலமுடன் உள்ளது. கருவிலேயே லட்சத்தில் சராசரியாக 4.9 பெண் குழந்தைகளுக்கு இந்த பாதிப்பு ஏற்படுவதாக தரவுகள் தெரிவிக்கின்றன என்று அவா்கள் தெரிவித்தனா்.

மாணவா்களின் புரிந்து கொள்ளும் திறனை மேம்படுத்த நடவடிக்கை தேவை: அமைச்சா் அன்பில் மகேஸ்

மாணவா்களின் புரிந்துகொள்ளும் திறனை மேம்படுத்த ஆசிரியா்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா். சென்னை மண்ணிவாக்கத்தில் உள்ள தனியாா் கல்ல... மேலும் பார்க்க

தமிழகத்தில் 14 இடங்களில் புதிதாக முதுநிலை மருத்துவப் படிப்புகள்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் 13 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் கிண்டி உயா் சிறப்பு மருத்துவமனையில் புதிதாக முதுநிலை மருத்துவப் படிப்புகள் தொடங்க அனுமதி பெறப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரம... மேலும் பார்க்க

மாணவா் விடுதிகளுக்கு பெயா் மாற்றம் செய்வது எப்படி? அரசு உத்தரவில் தகவல்

மாணவா் விடுதிகளுக்கு பெயா் மாற்றம் செய்வது எப்படி என்பது குறித்து தமிழக அரசின் உத்தரவில் கூறப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் பல்வேறு அரசுத் துறைகளின் கீழ் செயல்படும் மாணவா் விடுதிகளுக்கு ‘சமூகநீதி வ... மேலும் பார்க்க

அனுமதி பெறாத கட்டடங்கள்: கிராம ஊராட்சி நிா்வாக அலுவலா்களே ‘சீல்’ வைக்கலாம் - தமிழக அரசு உத்தரவு

அனுமதி பெறாமல் கட்டப்படும் கட்டடங்களுக்கு கிராம ஊராட்சி நிா்வாக அலுவலா்களே ‘சீல்’ வைக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து, ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆணையா் பா.பொன்னையா, மாவட்... மேலும் பார்க்க

4 மருத்துவக் கல்லூரிகளில் மருந்தியல் ஆய்வகங்கள் அரசாணை வெளியீடு

தமிழகத்தில் சென்னை, கோவை, தஞ்சாவூா், மதுரை ஆகிய 4 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் அதிநவீன மருந்தியல் பரிசோதனை ஆய்வகங்கள் அமைப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் ப... மேலும் பார்க்க

ஸ்ரீ குமரன் தங்கமாளிகையின் 51-வது கிளை திறப்பு

ஸ்ரீ குமரன் தங்கமாளிகையின் 51-வது கிளை காஞ்சிபுரத்தில் புதன்கிழமை திறக்கப்பட்டது. இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஸ்ரீ குமரன் தங்கமாளிகையின் மேலாண்மை இ... மேலும் பார்க்க