ஈரான் கடும் பதிலடி: இஸ்ரேல் எச்சரிக்கை; இரு தரப்பிலும் 80-க்கும் மேற்பட்டோா் உயி...
Air India: `கடைசி உரையாடல்' - விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு
குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து 230 பயணிகள் மற்றும் 12 விமான பணியாளர்களுடன் சென்ற ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விமான விபத்து உலகையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. மருத்துவக் கல்லூரி விடுதி கட்டடத்தின் மீது அந்த விமானம் விழுந்து வெடித்துச் சிதறி தீப்பிடித்தது. இந்த விபத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உள்பட 241 பேர் பலியாகியுள்ளனர்.
பலியானவர்களின் உடல்களை அடையாளம் காணும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. உறவினர்களிடமிருந்து டிஎன்ஏ மாதிரிகள் சேகரிக்கப்படுகிறது.
இந்த நிலையில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் கருப்புப் பெட்டி மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விமானிகள், ஊழியர்களின் உரையாடல்கள், விமானத்தின் வேகம், பறக்கும் உயரம், திசை, காலநிலை உள்ளிட்ட தகவல்கள் இந்த கருப்புப் பெட்டியில் பதிவாகும்.
மீட்கப்பட்ட கருப்புப் பெட்டி ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. தரவுகளை ஆராய்ந்தபின்னர் விபத்துக்கான காரணங்கள் என்ன என்பது குறித்து முடிகள் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.